Ad Widget

கூட்டமைப்பின் பேச்சாளராக எம்.ஏ.சுமந்திரனின் காலம் மேலும் நீடிப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினமே புதிய பேச்சாளர் மற்றும் கொரடா பொறுப்புக்கள் இறுதிசெய்யப்படும்.

இன்று (22) கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இடம்பெறும் என முன்னர் தீர்மானிக்கப்பட்ட போதும், இரா.சம்பந்தன் இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மாட்டார் என்பதால், அவர் நாடாளுமன்றத்திற்கு வரும் வியாழக்கிழமை கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இடம்பெறும்.

அதுவரை- 24ஆம் திகதி வரை எம்.ஏ.சுமந்திரனே கூட்டமைப்பின் பேச்சாளராக நீடிப்பார்.

Related Posts