அனுமதி வழங்கப்படாத சீன தடுப்பூசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு!!

கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் விவகாரத்தில், தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதா என அரச மருத்துவ ஆய்வுகூட அதிகாரிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது, அந்த சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இந்தக் கேள்வியை முன்வைத்தார். “ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை இன்று வர்த்தக...

வரம்பற்ற இணைய இணைப்பு வசதி ஏப்ரலில் கிடைக்கும்!!

வரம்பற்ற இணைய இணைப்புத் திட்டங்களை (Unlimited Internet Package) ஏப்ரல் மாதத்திற்குள் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம் என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மார்ச் 1ஆம் திகதிக்குள் வரம்பற்ற இணைய இணைப்புத் திடங்களை முன்வைக்க அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பணித்திருந்தது. அதற்கமைய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமர்ப்பித்த திட்டங்களை மதிப்பீடு செய்யப்பட்டு...
Ad Widget

யாழ்.பல்கலை. மாணவன், மானிப்பாய் வைத்தியசாலை உத்தியோகத்தர் உள்பட 13 பேருக்கு கோரோனா தொற்று!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. மானிப்பாய் வைத்தியசாலை உத்தியோகத்தர் உள்பட யாழ்ப்பாணத்தில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்றையதினம் 248 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது....

பெற்ற குழந்தையை மண்ணுக்குள் புதைத்த தாய் கைது!!

வவுனியா – பம்பைமடுவில் பெற்ற குழந்தையை மண்ணுக்குள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளின் (36 வயது) தாயொருவர் கடந்த திங்கட்கிழமை குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். கடந்த காலத்தில் அவரின் உடல் மாற்றத்தினை அவதானித்த சிலர் கேள்வி எழுப்பியபோது தனது வயிற்றில் கட்டி இருப்பதாக தெரிவித்து வந்த...

வட மாகாண அரச காணிகளை வட பகுதி மக்களுக்கே பகிந்தளிக்க உத்தரவு!

வடபகுதியில் உள்ள அரச காணிகளை வடபகுதியில் உள்ளவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமே யாழ் மாவட்ட செயலகத்திலிருந்து அனுராதபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட வடக்கு மாகாண காணி திணைக்களத்தின் கோப்புக்களை நாளைய தினத்துக்குள் மீண்டும் யாழ் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் பணித்துள்ளார். யாழ் மாவட்ட செயலாகத்தில் நடைபெற்ற...

ஆயுர்வேத சிகரெட் அறிமுகம்!!

இலங்கையில் தயாரிக்கப்பட்ட 100 சதவீத கறுவாப்பட்டையை கொண்டு உருவாக்கப்பட்ட ஆயுர்வேத சிகரெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆயுர்வேத சிகரெட்டை அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று கொழும்பு கிங்ஸ்பேரி ஹோட்டலில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த ஆயுர்வேத புகைத்தல் (கறுவாப்பட்டை சிகரெட்) உள்ளூர் உற்பத்தித் துறையில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தும் என்று தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச இதன்போது...

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய உறவுகளை சந்திப்பதாக அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை வெகு விரைவில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவறு கூறினார். உறவுகளை சந்தித்து அவர்களுடைய தேவைப்பாடுகள் மற்றும் அவர்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து தனக்கு தெரியப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபாய...

யாழ்.பல்கலை கலைப்பீட மாணவர்கள் மூவர் உட்பட 09 பேருக்கு வடக்கில் கொரோனா!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் மூவர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்விகற்கும் கிளிநொச்சி, புத்தளம் மற்றும் மாத்தறையைச் சேர்ந்த மாணவர்கள் மூவருக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் கொரோனா தொற்று உறுதியான 09 பேரில் யாழ்ப்பாணம் மாநகரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியும்...

ரயில்வே ஊழியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு!!

ரயில் எஞ்சின் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரயில் எஞ்சின் சாரதிகள் உள்ளிட்ட ரயில்வே உத்தியோகத்தர்களுக்கு எதிரான நியாயமற்ற ஒழுக்காற்று நடவடிக்கைகளை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தமது கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் பல தடவைகள் கலந்துரையாடியிருந்த போதிலும் உரிய தீர்வு கிடைக்கவில்லை...

கிளிநொச்சி நகரில் பொலிஸாரின் பாவனையிலுள்ள காணியை அரச காணியாக்கும் முயற்சி இடைநிறுத்தம்!

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் பொலிஸாரின் பாவனையில் உள்ள காணி அரச காணியாக அளவீடு செய்யப்பட எடுத்த முயற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகரின் ஏ-9 வீதியில் பெண்கள் சிறுவர் பிரிவு உள்ளிட்ட பொலிஸ் திணைக்களப் பிரிவுகள் பயன்படுத்திவரும் காணியை அரச காணி எனத் தெரிவித்து அளவீடு செய்ய முயற்சி எடுக்கப்பட்டது. குறித்த பகுதிக்கு இன்று (புதன்கிழமை) காலை...

சர்வதேச விசாரணையை வலியுறுத்திய பேரணி யாழில் ஆரம்பம்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி, யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டத்துடன் பேரணி ஆரம்பமாகியுள்ளது. குறித்த போராட்டம், கிட்டுப்பூங்காவில் இன்று (புதன்கிழமை) முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், பேரணியாகச் சென்று நல்லை ஆதீனம் முன்பாக போராட்டம் நிறைவடையவுள்ளது. இந்த நீதிக்கான போராட்டத்தில், தமிழ்பேசும் மக்கள் அனைவரும் கலந்துக்கொண்டு, போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என வடக்கு கிழக்கு...

இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு!!

இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு ஜப்பான் நாட்டில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் சந்தர்ப்பம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு தெளிவூட்டும் வேலைத்திட்டமொன்று எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெறவுள்ளது. JLPT அல்லது NAT பரீட்சையில் சித்தியடைந்த இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பான் நாட்டில் இலவசமாக தொழில்...

பஸ் விபத்திற்கான காரணம் வௌியானது! புகையிரத கடவையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை!!

தலைமன்னாரில் தனியார் பேரூந்து புகையிரதத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகிய சந்தர்ப்பத்தில் புகையிரத கடவையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை எனவும், புகையிரத கடவைக்கான தடை குறித்த நேரத்தில் இடப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து நேற்று (16) மதியம் 2 மணியளவில் தலை மன்னார் பகுதியில் புகையிரதத்துடன்...

புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி ஆராயப்படும்

வரவிருக்கும் பண்டிகை காலங்களில் தேவைப்பட்டால் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை தொடர்பிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். இதேவேளை, கோரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த வரவிருக்கும் பண்டிகை காலங்களில் நாட்டை மூடுவது அல்லது முழுமையான பயணக் கட்டுப்பாட்டை...

தொல்லியல் திணைக்களத்தால் கிளிநொச்சியில் குறிவைக்கப்படும் மற்றுமொரு சிவனாலயம்!!

கிளிநொச்சியில் அமைந்துள்ள உருத்திர புரீச்சகம் சிவனாலய வளாகத்தில் தொல்பொருள் ஆய்வுக்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. அதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி குறித்த பகுதியில் அகழ்வாராச்சி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த கோவில் வளாகம் நேற்று (செவ்வாய்க்கிழமை) துப்பரவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த கோவில் அமைந்தள்ள வளாகத்தில் பௌத்த சின்னங்கள் காணப்புடுவதாக ஏற்கனவே தொல்பொருள் திணைக்களத்தினால்...

பருத்தித்துறையைச் சேர்ந்த 9 வயதுடைய மாணவிக்கு கொரோனா தொற்று!!

பருத்தித்துறையைச் சேர்ந்த 9 வயதுடைய மாணவி ஒருவர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அத்தோடு மன்னாரில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பெண் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். குறித்த பெண் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டு பி.சி.ஆர்....

தொடருந்துடன் பாடசாலை பஸ் மோதி விபத்து; மாணவர்கள் பலர் படுகாயம்!!!!

தலைமன்னாரில் தொடருந்துடன் பாடசாலை சேவை பேருந்து மோதி இடம்பெற்ற விபத்தில் மாணவர்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர். இன்று பிற்பகல் 2 மணியளவில் தலைமன்னார் பியரில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. மன்னார் பொது வைத்தியசாலை அம்புலன்ஸ் வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. அவசர சிகிச்சை வழங்கப்படவேண்டிய 10 மாணவர்கள் அம்புலன்ஸ் வண்டியில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று...

நாளைய பேரணியில் மக்களை உணர்வுபூர்வமாக கலந்து கொள்ள முதல்வர் மணிவண்ணன் அழைப்பு!

யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு வடக்கு , கிழக்கு மக்கள் உணர்வு பூர்மாக கலந்து கொண்டு போராட்டம் வெற்றி பெற ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது; யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் யாழில் சுழற்சி...

கடத்தல்கள்- படுகொலைகள் குறித்து ஆதாரம் உண்டு: பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் யாழில் போராட்டம்!

கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் ஆகியவற்றில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் என்னிடம் பல ஆதாரங்கள் உள்ளன. அந்த ஆதாரங்களை ஜெனிவாவிலும் சமர்ப்பிக்க உள்ளேன் என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவாக போராட்டடொன்றினை முன்னெடுத்துள்ள கண்டியைச் சேர்ந்த டீமன் ஆனந்த தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்- சுப்பிரமணியம் பூங்கா முன்னறில் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுத்துள்ளார். குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள...

வங்கிக் கடனை செலுத்தாவிட்டால் சொத்துக்களை கையகப்படுத்துவதா? பிரதமரின் அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் மற்றும் கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக வங்கிக் கடன்களை செலுத்தாத தொழில்முனைவோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு பதிலாக சலுகை காலம் வழங்குவது குறித்து கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வங்கி பிரதானிகளுக்கு தெரிவித்தார். வங்கி கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத தொழில்முனைவோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது தொடர்பாக...
Loading posts...

All posts loaded

No more posts