நாடுமுழுவதும் பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்த முடிவை ஜூன் 19 அல்லது 20ஆம் திகதிகளில் மட்டுமே எடுக்க முடியும் என்று அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இன்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற இணையவழி அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத் தடை வரும் ஜூன் 21ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.