சூட்டுப் பயிற்சியால் மீனவருக்கு உயிராபத்து

தென்மராட்சி அல்லாரை தம்பு தோட்டப் படைமுகாமில் தினமும் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சியினால் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் உயிர் ஆபத்துக்களை எதிர்நோக்கும் அச்சத்துடன் படகுகளில் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டது. (more…)

2009க்கு பின் குடியேறியோருக்கே இந்திய அரசின் வீட்டுத்திட்டம்; செயலகக் கூட்டத்தில் தீர்மானம்

2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கே இந்திய வீட்டுத்திட்டம் அடுத்த கட்டத்தில் வழங்கப்படவுள்ளது.இவர்களில் புள்ளித்திட்ட அடிப்படையில் 10 இற்கு மேல் பெற்ற வறுமையானவர்களுக்கே வீட்டுத் திட்டப் பணம் இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படவுள்ளது. (more…)
Ad Widget

பிள்கைளை விடுதலை செய்யுமாறு யாழ். கட்டளைத் தளபதியிடம் பெற்றோர் கோரிக்கை

கைது செய்யப்பட்டு வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் தமது பிள்ளைகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர். (more…)

தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாததனாலேயே புலிகள் உருவாகினர்! ஹத்துருசிங்கவுக்கு யாழ். பேராசிரியர் பதிலடி

தமிழர்களும், பல்கலைக்கழக மாணவர்களுமே வளர்த்து விட்டதாக படைத்தரப்பும் அரசும் கூறினாலும், சிங்களவர்களும், பிரேமதாஸ போன்ற அரசியல்வாதிகளும் சேர்ந்தே விடுதலைப் புலிகளை வளர்த்து விட்டனர். இவ்வாறு கணிதவியல் பேராசிரியர் எஸ்.சிறி சற்குணராஜா, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கவுக்கு நேரில் எடுத்துரைத்தார். (more…)

யாழில் 9 மணித்தியால மின்வெட்டு

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றவேண்டியிருப்பதாலும் புதிய உயர் அழுத்த மின் மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு வேலைகளுக்காகவும் யாழில் 9 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. (more…)

அச்சுறுத்தலினாலேயே மருத்துவ பீட கற்றல் முன்னெடுக்கப்படுகின்றது: எம்.பி சிறிதரன்

யாழ்.பல்கலைக்கழக அனைத்து பீடங்களும் கல்விச் செயற்பாட்டினை புறக்கணிக்கும் நிலையில் மருத்துவ பீடம் கற்றல் செயற்பாட்டினை மேற்கொள்வது அச்சுறுத்தலின் காரணமே என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

இராமாவில் இராணுவ முகாம் காணி பொதுமக்களிடம் கையளிப்பு

கொடிகாமம், அல்லாரை, இராமாவில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிரந்த காணி நேற்று அப்பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டது. யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க நேற்று மதியம் 3 மணியளவில் இந்தக் காணியை கையளித்தார். (more…)

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 37பேர் யாழில் கைது

நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 37பேர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.மேலும் சட்டவிரோத மது உற்பத்தி செய்த நபர் ஒருவரும், கஞ்சா போதைப் பொருள் வைத்திருந்த இரண்டு பேரும், (more…)

புனர்வாழ்வு இன்றி மாணவரை விடுவிக்குக – மாவை

கைதுசெய்யப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் எதுவுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். (more…)

வடமாகாண வர்ண இரவில் 300 இற்கு மேற்பட்ட வீர, வீராங்கனைகள் கௌரவிப்பு

மனம் மாறாத பட்சத்தில் மாணவர் விடுதலைஇல்லை! விரைவாக கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்கவும் ; கட்டளை தளபதி ஹத்துருசிங்க

பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யும் வரை யாழ் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படமாட்டாது என மாணவர்கள் காத்திருப்பது வெறும் கனவாகவே இருக்கும் என யாழ் மாவட்ட கட்டளை தளபதி ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.யாழ் பல்கலைக்கழக சமூகத்திற்கும் யாழ் மாவட்ட கட்டளை தளபதிக்கும் இடையில் இன்று காலை 10 மணியளவில் (more…)

யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தில்,வைத்தியசாலையின் செயற்ப்பாடுகள் செயலிழந்து

யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் ஒருவர் நேற்றைய தினம் இனம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கிலே இவ்வாறு பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் (more…)

உண்ணாவிரத போராட்டத்தில் 9 அம்ச கோரிக்கைகள் முன்வைப்பு

தமிழ் அரசியல் கட்சிகளின் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் 9 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மாணவர்களை, தமிழ் அரசியல் கைதிகளை மற்றும் சரணடைந்த போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட வேண்டும், (more…)

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்: அமைச்சர் டக்ளஸ்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.அதேவேளை, மாத கொடுப்பனவினை அதிகரிப்பதற்கும், சீருடைகள், துவிச்சக்கரவண்டிகள் (more…)

யாழ் இராணுவ தளபதியை துணைவேந்தர் தலைமையிலான பல்கலை சமூகம் சந்திப்பு

யாழ் இராணுவத் தளபதியினை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையிலான பல்கலைக்கழக சமுகம் இன்றைய தினம் சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டு வருகின்றது.இன்று காலை 10 மணியளவில் பலாலி படைத் தலமையகத்தில் இவ் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

கொடிகாமம் சந்தை பகுதியில் மலகூட கழிவு நீர் வீதியில்..! பிரதேசசபைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

சாவகச்சேரி பிரதேச சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை மாடியிலிருந்து இறங்க விடாமல் தடுத்து கொடிகாமம் நகர்ப் பகுதி வர்த்தகர்களும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது: (more…)

யாழ்.குடாநாட்டில் கடந்த 10 வருடங்களில் இந்த வருடமே மிகக் குறைந்த மழைவீழ்ச்சி

யாழ்.குடாநாட்டில் கடந்த 10 வருடங்களில் இந்த வருடமே மிகக் குறைந்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமை நேர அதிகாரி த.பிரதீபன் தெரிவித்தார். இந்த வருடத்தில் கடந்த 12 மாதங்களில் நேற்றுக் காலை 8.30 மணி வரையில் 725.7 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சியே பதிவாகியுள்ளது. (more…)

ஊழியர் சேமலாப நிதி செலுத்த தவறிய நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு

ஊழியர் சேமலாப நிதி செலுத்ததவறிய 8 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதித் தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.டிசெம்பர் மாத கலப்பகுதியில் யாழ். மற்றும் கிளிநொச்சி, வவுனியா பகுதியில் வடமாகாண பிரதித் தொழில் ஆணையாளர் மேற்கொண்ட பரிசீலணையின் (more…)

தடை செய்யப்பட்ட ஓர் இயக்கத்திற்கு விளக்கேற்றி நினைவு கூருவதற்கு தடை ;அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் தமது உறவுகளுக்காகவும், உடன் பிறப்புகளுக்காகவும் விளக்கேற்றி நினைவு கூருவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. ஆனால் அதனை அவர்கள் தமது வீடுகளில் செய்ய வேண்டும் என்றார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. (more…)

யாழ். படைத்தளபதி ஹத்துருசிங்கவின் அழைப்பை நிராகரித்த பீடாதிபதிகள்!

வெள்ளிக்கிழமை பலாலியில் மாநாடொன்றை நடத்த யாழ். மாவட்ட இராணுவத்தளபதி ஹத்துருசிங்க விடுத்த அழைப்பினை பல்கலைக்கழக பீடாதிபதிகள் முற்றாக நிராகரித்து விட்டனர்.அத்துடன், பலாலிக்கு சென்று பேச்சு நடத்த வேண்டிய தேவை தமக்கில்லையென தெரிவித்துள்ள பீடாதிபதிகள் மீண்டும் குடாநாட்டில் இராணுவ ஆட்சியொன்றை முழுமையாக கொண்டுவர (more…)
Loading posts...

All posts loaded

No more posts