மகளின் மரணச் செய்தியைக் கேட்ட தாயாரும் மரணம்!

மகளின் மரணச் செய்தியைக் கேட்ட தாய் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவமொன்று யாழ். அளவெட்டிப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. (more…)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணக்கியல் துறையும் இலங்கைபட்டயக் கணக்காளர் நிறுவனமும் உடன்படிக்கை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணக்கியல் துறையும் இலங்கைபட்டயக் கணக்காளர் நிறுவனமும் தம்மிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை 05-12-2013 வியாழக்கிழமை (இன்று) கைச்சாத்திடுகின்றன. (more…)
Ad Widget

பலாலி கிழக்கு பிரதேசத்தில் குடியேற முடியாது: மயிலிட்டி மக்கள்

வலிகாமம் வடக்கு பலாலி கிழக்குப் பகுதியில் மீளக்குடியேறுவதற்கு படையினரால் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் தாம் மீளக்குடியேற மாட்டோம்' என கோணாப்புலம் நலன்புரி நிலையத்தில் வசித்துவரும் மயிலிட்டியினைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர். (more…)

பொலிஸாரினால் அச்சுறுத்தல்!, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தமது குடும்ப உறுப்பினர்களுக்கு பொலிஸாரினால் அச்சுறுத்தல் உள்ளதாக கூறி பருத்தித்துறை இராஜ கிராமத்தினைச் சேர்ந்த குடும்பம் ஒன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்துள்ளது. (more…)

தை முதல் பாண் விலை அதிகரிக்கும்?

2014 தை முதல் பாணின் விலையை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. (more…)

விஞ்ஞான ,முகாமைத்துவ பீட மாணவர்களிடையே மோதல்

யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் விஞ்ஞான பீட மாணவர்களிடையே நேற்றய தினம் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

வணக்கஸ்தலங்கள் இடிக்கப்படுவதை நிறுத்தவும்: ஜனாதிபதிக்கு ஈ.பி.டி.பி கடிதம்

பாதுகாப்பு வலயத்திற்குள் வணக்கஸ்தலங்கள் இடிக்கப்படுவதை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி அவசர கோரிக்கையொன்றை விடுத்துள்ளது. (more…)

சாலோகா பெயானி மல்லாகம் கோணப்புலம் நலன்புரி முகாமிற்கு விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதி சாலோகா பெயானி (more…)

வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் மீது விசாரணை

வட மாகாண எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் விசாரணைக்கழைக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வலிமேற்கில் பார்த்தீனியம் ஒழிப்பு

வடக்குமாகாண விவசாய அமைச்சு டிசம்பர் மாதத்தை பார்த்தீனியம் ஒழிப்பு மாதமாகப் பிரகடனப்படுத்தியதையடுத்து (more…)

இராணுவம் நிலைகொண்டிருப்பதே முக்கிய பிரச்சினை – முதலமைச்சர்

வடக்கு மக்களின் முக்கியமான பிரச்சினை இராணுவம் நிலைகொண்டிருப்பது என்பதுடன், இதனாலேயே ஏனைய பிரச்சினைகளும் தோற்றுவிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதியிடம் கூறியதாக (more…)

வடக்கு, கிழக்கில் சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழில் சேவைகளை பெற முடியும்

வடக்கு கிழக்கில் சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் மொழியில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. (more…)

ஐ.நா சிறப்பு பிரதிநிதி யாழ். விஜயம்

ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதி சாலோகா பெயானி இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். (more…)

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் திருடர்கள் அட்டகாசம்.

மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளமை தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

வடமாகாணத்தில் இன்னும் 6756 குடும்பங்களே மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளனர்

வடமாகாணத்தில் இன்னும் 6756 குடும்பங்களே மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளதாக வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டசெயலகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. (more…)

வெளிநாடுகளில் வசிக்கும் வடக்கு மக்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படுகிறது

வெளிநாடுகளில் நிரந்தரமாக அங்கு வசித்து வரும் வடமாகாணத்தை சேர்ந்தவர்களின் சொத்துக்கள் காணிகள் மற்றும் வீடுகள் அரசுடமையாக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. (more…)

வடக்கு மாகாண ஆளுநர் ஜனாதிபதிக்கு கட்டுப்படாரா? கேள்வி எழுப்புகிறார் முதலமைச்சர்

வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறியையும், யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லையா என்று கேள்வியெழுப்பியுள்ளார் வடக்கு முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன், (more…)

வடக்கில் 372 பேருக்கு நிரந்த நியமனம்

வட மாகாண சபைக்குட்பட திணைக்களங்களில் கடமையாற்றுவதற்காக 372 பேருக்கு இன்று திங்கட்கிழமை நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. (more…)

இந்திய மீனவர்கள் இழுவைப்படகுகள் மூலம் எமது கடல் வளங்களை அழிக்கின்றனர் – விக்னேஸ்வரன்

தான்தோன்றித்தனமாக கருமமாற்றிய அலுவலகர்கள் சிரமம் அடையத் தொடங்கியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

யாழ். பல்கலை மாணவர்கள் அடையாளப் போராட்டம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts