வட மாகாண சபைக்குட்பட திணைக்களங்களில் கடமையாற்றுவதற்காக 372 பேருக்கு இன்று திங்கட்கிழமை நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நியமனங்கள் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் வழங்கப்பட்டுள்ளன. பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் முகாமைத்துவ உதவியாளர்களாக 219 பேரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக 107 பேரும் ஆசிரியர்களாக 26 பேரும் கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக 20 பேரும் நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த நியமன கடிதங்கள் வழங்கப்பட்டவர்களுக்கு மூன்று வார கால பயிற்சி வழங்கப்பட்ட பின்னர், 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வட மாகாண திணைக்களங்களில் நிரந்த ஊழியர்களாக கடமையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நியமனம் வழங்கும் நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் அமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி