Ad Widget

விஞ்ஞான ,முகாமைத்துவ பீட மாணவர்களிடையே மோதல்

jaffna-universityயாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் விஞ்ஞான பீட மாணவர்களிடையே நேற்றய தினம் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று மாலை மூன்று மணியளவில் யாழ் பல்கலைக்கழக பிரதான வீதியில் இவ் மோதல் இடம்பெற்றுள்ளது.

விஞ்ஞான பீட மூன்றாம் வருட மாணவர்களுக்கும், முகாமைத்துவ பீட மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையிலேயே இவ் மோதல் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தின் காரணமாக விஞ்ஞான பீட ஒரு மாணவன் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கடந்த மாதம் தென்னிலங்கையினை சேர்ந்த சிங்கள மாணவர்கள் யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் மோதலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts