Ad Widget

மகளின் மரணச் செய்தியைக் கேட்ட தாயாரும் மரணம்!

dead-footமகளின் மரணச் செய்தியைக் கேட்ட தாய் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவமொன்று யாழ். அளவெட்டிப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

அளவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 30 வயதான மேற்படி யுவதி தான் நேசித்துவந்த நபரை திருமணம் செய்துகொண்டு கடந்த 04 மாதங்களாக அவருடன் தனி வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை தனது கணவரோடு ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து இந்த யுவதி தன்னைத்தானே மாய்த்துக்கொண்டுள்ளார்.

இதனை கேள்வியுற்ற மேற்படி யுவதியின் தாயார் அதிர்ச்சியுற்று மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் சம்பவ இடத்திற்குச் சென்று தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Posts