- Wednesday
- January 14th, 2026
கிறிஸ்தவ தேவாலயங்களில் உள்ள பாட்டுக் குழுக்களில் யுவதிகளை இணைப்பதை தவிர்ப்பதற்கு யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்திடம் வேண்டுகோள் விடுக்குமாறு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் கே.எக்.டக்ளஸ் தேவானந்தாவிடம் பொதுமக்கள் இன்று கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். (more…)
இராணுவத்தினரின் உயிர் தியாகத்தின் காரணமாகவே வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அந்த பதவி நாற்காலி கிடைத்ததாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். (more…)
கடும் வறட்சி, அளவுக்கதிகமான வெப்பநிலை வீச்சால் குடாநாட்டின் கிணறுகளின் நீர்மட்டம் அளவுக்கு அதிகமாக குறைந்து வருவதோடு குளங்கள் வற்றி வறட்சியடைந்து வருகின்றன. (more…)
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை (19 திகதி) யாழ்.பொதுநூலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது. (more…)
மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு நேர்மையான உண்மையான நடைமுறைச்சாத்தியமான வழியில் தீர்வினை காண்பதையே எமது அரசியல் நோக்காக கொண்டுள்ளோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)
அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை வளாகத்தில் மூன்று தனியார் தொழிற்சாலைகளுக்கான அடிக்கற்கள் நாட்டப்பட்டன. (more…)
சூரியகலத் தொழில்நுட்பமும் இலங்கையில் அதனோடிணைந்த தொழில் முயற்சிகளும்'என்ற தலைப்பிலான மூன்று நாள் ஆய்வுப்பட்டறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பௌதீகவியற்துறை மண்டபத்தில் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது. (more…)
ஜெரோம் கொன்சலிற்றா(22) சடலமாக மீட்கப்பட்ட யாழ். சென்பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்புறமாகவுள்ள பொதுக் கிணற்றினைச் சுற்றி கட்டப்பட்டிருந்த மறைப்புச் சுவர் இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது. (more…)
பண்ணை தனியார் பஸ் நிலையத்தில் இராணுவச் சிப்பாயால் தாக்கப்பட்ட பஸ் உரிமையாளரைத் தொலைபேசியூடாகத் தொடர்புகொள்ளும் இனந்தெரியாதோர் அந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டைத் திரும்பப் பெறுமாறு மிரட்டுகின்றனர் என்று கூறப்படுகின்றது. (more…)
யாழ்.குருநகர் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்து திங்கட்கிழமை (14) சடலமாக மீட்கப்பட்ட குருநகரைச் சேர்ந்த ஜெரோம் கொன்சலிற்றா (22) என்ற யுவதியின் பூதவுடலை யாழ்.ஆயர் இல்லத்திற்கு முன்பாக வைத்து யுவதியின் உறவினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (more…)
கடந்த மூன்று தசாப்தகாலமாகப் போர் நடைபெற்ற இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும். அதற்கு இங்கு நடந்தேறிய கறைபடிந்த சம்பவங்களுக்கு இலங்கை அரசு பொறுப்புக் கூறியே ஆகவேண்டும். (more…)
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு செய்தியாளராகக் கடமையாற்றும் சிவஞானம் செல்வதீபன் திங்கட்கிழமை (14) இரவு புறாப்பொறுக்கிச் சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் தாக்கப்பட்டமையைக் கண்டித்து (more…)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனுக்கு தொலைபேசியூடாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. (more…)
யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் “ஆய்வம்” என்ற குழுவினரால் “தொடரி“ என்ற பெயரில் நேற்று ஒரு மொபைல் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. (more…)
யாழ். றோட்டறிக் கழகத்தின் 73 ஆவது அகவை நிறைவு நாளும் சாதனையாளர் சிறப்புரை நிகழ்வும் நேற்று யாழ்.இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் இடம்பெற்றன. (more…)
யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந்த் முற்போக்கு தமிழ் தேசிய கட்சி என்ற புதிய கட்சி ஒன்றினை ஆரம்பித்துள்ளார். (more…)
யாழ். சுயாதீன ஊடகவியலாளர் நேற்று இரவு 10 மணியளவில் இனம் தெரியாத நபர்களினால் வடமராட்சியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
