Ad Widget

கைதடியில் கலைத்துக் கலைத்து வாள்வெட்டு! இருவர் படுகாயம்!!

val-veddu-knifeகைதடிச் சந்தியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.இரவு 8 மணியளவில் கதைத்துக் கொண்டிருந்த மூவரை திடீரென மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்திறங்கிய குழு ஒன்று கலைத்துக் கலைத்து வெட்டியுள்ளது.

மூவரில் ஒருவர் ஓடித் தப்பியுள்ளார். மற்றைய இருவர் பலத்த வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகினர். வாள்வெட்டுக்கு இலக்காகியவர்கள் கோகுலநாதன் கோமளன் (வயது 34), சுந்தரலிங்கம் சுகிர்தராஜன் (வயது 34) என அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர்கள் அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

Related Posts