Ad Widget

வீரசிங்கத்தின் 50ஆவது நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு

யாழ்.மாவட்ட கூட்டுறவுச் சபையின் ஏற்பாட்டில் கூட்டுறவு பெரியார் அமரர் வீரசிங்கத்தின் 50ஆவது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் மாவட்ட கூட்டுறவு சபைத் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்குப் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும்...

ஐஸ்கிறீமில் அரசியல் இல்லை, நல்ல சுகாதாரமே எமது இலக்கு

யாழ்ப்பாணத்தில் ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் பின்னணியில் எந்தவித உள்நோக்கமோ அரசியலோ இல்லை நல்நோக்கமே உள்ளது என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 59 நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு தடையும் விதிக்கப்பட்டது. இது தொடர்பில்...
Ad Widget

எண்ணெய் கசிவால் இளைஞர், யுவதிகள் திருமணம் செய்ய அஞ்சுகின்றனர்’

யாழ். சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் திருமணம் செய்வதற்கு அஞ்சுவதாக வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் வியாழக்கிழமை (04) நடைபெற்ற போது யாழ்ப்பாணத்து நீர் மாசடைதலை தடுக்க வேண்டும் என்ற...

புலிகளின் புலனாய்வு பிரிவு தலைவரான நெடியவன் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின், திருகோணமலை புலனாய்வு பிரிவின் தலைவரான நெடியவன் என்றழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் என்பவரை அரச புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். ஐந்து வருடங்களுக்கு பின்னர், சாம்பல்தீவில் வைத்து அவரை கைது செய்துள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது. சாம்பல்தீவு மற்றும் நிலாவெளியில் இடம்பெற்ற பல்வேறு கொலைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் பொலிஸாரினால் இவர்...

இந்திய மீனவர்களது உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது

இந்திய மீனவர்களது உணவு தவிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்களுடைய உணவு தவிர்ப்புப் போராட்டம் நேற்று பிற்பகலுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் யாழ். சிறைக்குச் சென்ற இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர் எஸ்.டி தட்சணாமூர்த்தி அவர்களுடன் பேச்சுவார்த்தையினை மேற்கொண்டனர். அதனையடுத்து உணவு தவிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என...

தமிழர் வரலாற்றுக்கு தனிநூல் அமையவேண்டும்; வடக்கு அவையில் பிரேரணை நிறைவேற்றம்

தமிழர் வரலாறுகளுக்கு தற்போது பாடப்புத்தகங்களில் மறைக்கப்பட்டு வருகின்றது. எனவே எதிர்வரும் சந்ததியினருக்கு எமது வரலாறுகள் அறிந்து கொள்வதற்கு தனிநூல் ஒன்றினை உருவாக்க வேண்டும் என உறுப்பினர் பரஞ்சோதியால் கொண்டுவரப்பட்ட பிரேரணை வடக்கு அவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வடக்கு அவையின் 20 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போதே உறுப்பினர் குறித்த பிரேணையினை முன்வைத்தார். மேலும் பிரேரணையில்...

யாழ்.பல்கலைக்கழகத்தில் விளக்கேற்றியோரை தேடும் ரி.ஐ.டி

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினமற்று விளக்கேற்றியவர்களை கண்டறிவதற்கான முயற்சிகளில் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் மற்றும் மாவீரர் தினம் போன்றவை பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட்டமை தொடர்பாகவே விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. இதன்முதற்கட்டமாக 26ம் மற்றும் 27ம் திகதிகளில் பல்கலைக்கழகத்திற்கு வந்து சென்ற மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள்...

ஹகுபிட் புயலை எதிர்கொள்ளத் தயாராகிறது ஃபிலிப்பைன்ஸ்

ஃபிலிப்பைன்ஸ் நாட்டை நெருங்கிவரும் ஹகுபிட் புயலை எதிர்கொள்ள அந்நாட்டு மக்கள் தயாராகிவருகின்றனர். ஞாயிற்றுக் கிழமையன்று இந்தப் புயல் கரையைக் கடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பசிபிக் கடலில் தற்போது நிலை கொண்டிருக்கும் ஹகுபிட், கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று ஃபிலிப்பைன்ஸை நெருங்கிவருகிறது. கடந்த ஆண்டுதான் இந்தப் பிரதேசம் ஹையான் புயலால் சூறையாடப்பட்டது. இது நான்காம் நிலை புயலாக கடந்த சனிக்கிழமை...

சிவகார்த்திகேயன் மனசு யாருக்கு வரும்!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றி கொடி கட்டியவர் சிவகார்த்திகேயன். ஒரு சிலர் வெற்றிகள் வந்து விட்டால், அவர்களுக்கு உதவி செய்தவர்கள், பழைய நண்பர்கள் என அனைவரையும் மறந்து விடுவார்கள். ஆனால், சிவகார்த்திகேயன் இன்றும் தன் பழைய நண்பர்களை எங்கு பார்த்தாலும் முன்பு எப்படி கலாய்ப்பாரோ அதே போல் ஜாலியாக தான் பேசுவாராம். அதிலும் குறிப்பாக...

அஜித்துடன் இணைந்து அழகான த்ரிஷா: விவேக் புகழாரம்

சிகர்களின் ஏகோபித்த வரவேற்புக்கு மத்தியில் வெளியாகி மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது என்னை அறிந்தால் டீசர்.கௌதம் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள இப்படத்தில் அனுஷ்காவும், த்ரிஷாவும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தில் விவேக் காமெடியனாக அசத்தியுள்ளாராம்.வெளியான டீசரில் த்ரிஷா இன்னும் அழகாக அப்படியே லேசா லேசா படத்தில் உள்ளதைப் போலவே இருக்கிறார் என விவேக் புகழ்ந்துள்ளார். இருவரும்...

சுன்னாகம் அனல் மின்நிலையத்தை விரிவுபடுத்துவதற்கோ வடக்கில் புதிதாக அனல் மின்நிலையங்களைத் தாபிப்பதற்கோ அனுமதி வழங்கவேண்டாம்

சுன்னாகம் அனல் மின்நிலையத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கோ அல்லது வடக்கில் புதிதாக வேறு அனல் மின்நிலையங்களைத் தாபிப்பதற்கோ மத்திய சுற்றாடல் அதிகாரசபை அனுமதி வழங்கக்கூடாது என வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வடக்கு மாகாணசபையில் சமர்ப்பித்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை (04.12.2014) வடக்கு மாகாணசபையின் 20ஆவது அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபை மண்டபத்தில்...

யாரை ஆதரிப்பது ?? முடிவுகள் விரைவில் – மு.த.தே.கட்சி

நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவ யாருக்கு என்பது தொடர்பில் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியினர் ஒர் ஊடக அறிக்கையினை எமது செய்திப்பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். அவ் செய்திகுறிப்பில் .... நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு போட்டியிட இருக்கும் கட்சிகளில் பெரும்பாண்மை கட்சியை சேர்ந்த எதிர்க்கட்சியின் பொதுவேட்பாளர் மைத்திரிபா சிறிசேன குழுவினரையும், ஆளும் ஐக்கிய மக்கள்...

தேநீர் அருந்துவதை குறையுங்கள்!!, எதிர்க்கட்சித் தலைவருக்கு சீ.வி ஆலோசனை

தேநீர் அருந்துவதைக் குறைக்குமாறு வடக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசாவிற்கு முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் அறிவுரை வழங்கியுள்ளார். வடக்கு மாகாண சபையின் அமர்வு இன்று நடைபெற்று வரும் நிலையில் ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு தடை போடப்பட்டமை தொடர்பில் கடந்த அமர்வில் எதிர்க்கட்சித்தலைவர் கொண்டுவந்த கவனயீர்ப்புப் பிரேரணைக்கு சுகாதார அமைச்சரால் முழுமையான விளக்கம் வழங்கப்பட்டது....

மாவீரர்களின் தியாகங்களை தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தாதீர்கள்!

நாட்டின் தேசிய இனமான தமிழ் மக்களுக்காக உண்மையான உணர்வுகளோடு போராடி மரணித்த மாவீரர்களையோ, தியாகத்திற்கு உரித்தான போராளிகளையோ தேர்தல் பிரசாரங்களின்போது கொச்சைப்படுத்தவோ, அதை ஒரு கருப்பொருளாகக் கொள்ளவோ வேண்டாம் என மேல் மாகாண சபையின் ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர் சண்.குகவரதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மொறட்டுவ பல்கலைக்கழக பழைய மாணவர்களுடனான சந்திப்பில் 'இன்றைய சூழலில் ஜனாதிபதி...

வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சிக்குள் பிளவு! ரிஷாத்தின் கட்சி தனித்து இயங்கும்!

அமைச்சர் ரிசாத் பதியுதீனின் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வடக்கு மாகாண சபையிலும் தனித்து இயங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் இன்னும் அரை மணி நேரத்தில் கூடவுள்ள வடக்கு மாகாண சபை பெரும் பரபரப்பு நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நேற்றைய கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத்...

குறைநிரப்பு நியதிச் சட்டம் மாகாண சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது

இன்று நடைபெறும் வடமாகாண சபையின் 20 ஆவது அமர்வில் 2014 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு (குறைநிரப்பு ஏற்பாடுகள்) நியதிச் சட்டமும் 2015 ஆம் ஆண்டுக்கான நிதிக் கூற்றும் முதலமைச்சரால் சபையில் முன்வைக்கப்பட்டு அவை சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அத்துடன் கடந்த மாகாண சபை அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவரால் கொண்டுவரப்பட்ட ஐஸ்கிறீம் உற்பத்திகள் தொடர்பான கவனயீர்ப்பு பிரேரணைக்கான...

கிளிநொச்சி மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கும் மோட்டார் சைக்கிள்கள்!

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் வைபவம் கிளிநொச்சியில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு மோட்டார்...

12 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரை 12பேர் கட்டுப் பணம் செலுத்தியுள்ளனர். நேற்றையதினம் மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதோடு, இதுவரை பத்து அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சைக் குழுக்கள் இவ்வாறு பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதேவளை கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் 7ம் திகதியுடன் நிறைவடையவுள்ளன. மேலும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம்...

மருதனார்மடம் இராமநாதன் கல்லூரிக்கு அடுத்த ஆண்டு மூன்று மாடிக்கட்டிடம்

மருதனார்மடம் இராமநாதன் கல்லூரிக்கு அடுத்த ஆண்டு மூன்று மாடிக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்ப கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் கல்லூரி மேம்பாடு தொடர்பில் நேற்றய தினம் (03) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கல்லூரி வளாகத்தில் சேர்.பொன் இராமநாதனின்...

யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை அழகுபடுத்தி செழுமைபடுத்த நடவடிக்கை

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசனைக்கு அமைவாக யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை அழகுபடுத்தி செழுமைபடுத்தும் வகையில் வரையப்படும் ஒவியங்களை அமைச்சர் நேரில் பார்வையிட்டார். யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அமைச்சர் அவர்கள் நேற்றய தினம் (03) விஜயம் மேற்கொண்டிருந்தார். புகையிரத நிலையத்தை அழகுபடுத்தி செழுமைப்படுத்தும் வகையில் ஒவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. இதனிடையே ஒவியருடனும் அமைச்சர் அவர்கள் கலந்துரையாடினார்....
Loading posts...

All posts loaded

No more posts