- Tuesday
- May 14th, 2024
யாழ்ப்பாண பல்கலைக்கழத்தின் வளாகங்களில் மேற்கொள்ளவுள்ள நகரமயமாக்கல் தொடர்பான திட்டமிடல் செயற்பாடுகளுக்காக 8 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் வெள்ளிக்கிழமை (12) தெரிவித்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழக சமுதாய, பிராந்திய திட்டமிடல் கற்கை நெறியின் இளம் திட்டமிடலாளர் சங்கத்தினரால் உலக நகரத்திட்டமிடல் தினத்தை முன்னிட்டு, நடத்தப்பட்ட கண்காட்சி நிகழ்வில் கலந்துகொண்டு துணைவேந்தர்...
உரிய வேலை வாய்ப்பு கிடைக்காமையால் திருட்டில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் 25 வயதுடைய விஞ்ஞானமானி பட்டம் பெற்ற ஒருவரை கைது செய்துள்ளதாக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் சனிக்கிழமை (13) தெரிவித்தனர். யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து 2½ பவுண்...
கடந்த 2012ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குடிசன கணக்கெடுப்பின் போது இலங்கையின் சனத்தொகை 20.4 மில்லியன் என கண்டறியப்பட்டுள்ளது என தொகை மதிப்பீட்டு புள்ளிவிபர திணைக்கள பணிப்பாளர் நாயகம் டி.பீ. குணவர்தன தெரிவித்தார். நேற்று கொழும்பு சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் நடத்தப்பட்ட குடிசன வீட்டுவசதிகள் 2012 பிரதான தேடல்களுக்கான கருத்தரங்கின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில்...
இந்திய மீனவர்களின் வருகையில் தமது இறால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி முல்லைத்தீவுப் பகுதி மீனவர்கள் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் நடவடிக்கைகளினால் தமது தொழிலை மேற்கொள்வதற்கு வசதியாக உரிய நடவடிக்கை இலங்கை அரசு எடுக்க வேண்டும் என அம்மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டிசம்பர் மாதத்தில் பெரும் எண்ணிக்கையில் வருகை...
இலங்கையின் வீதி தோற்ற விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை கூகிள் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கமெராக்கள் பொருத்தப்பட்ட கார்கள் மூலம் இலங்கையின் வீதிகள் படம் பிடிக்கப்படும். இதன்மூலம், இலங்கையிலுள்ள எந்தவொரு இடத்தையும் கூகிள் இணையத்தளத்தில் தத்ரூபமாக பார்வையிடக்கூடிய வசதி கிடைக்கிறது. கூகிள் ஸ்ட்ரீட் வியூ என்ற சேவையில் 63 நாடுகள்...
யாழ். மாவட்டத்திலுள்ள வானொலி அறிவிப்பாளரான பெண் ஒருவர் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரியாலை பகுதியில் வைத்து இரவு 07.00 மணியளவில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான 23 வயதான குறித்த யுவதி, அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் போது, அரியாலை பகுதியில் வைத்து அவர் சென்ற மோட்டார் சைக்கிளை தள்ளிவிழுத்தியதுடன், கழுத்தை நெரித்துக் கொலை...
யாழ் குடாநாட்டில் இடைவிடாது தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இராணுவத்தினர் உதவிகளைச் செய்து வருகின்றனர். யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் நெருக்கடிகளுக்குள்ளாகியுள்ளனர். யாழ் மாவட்ட பாதுகாப்புப் படையின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸின் வழிகாட்டலின் கீழ் இந்த உதவி வேலைகள், நடமாடும் சேவைகள்...
திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம் உலக வாழ் இந்துக்களின் புனித ஸ்தலம். கிறிஸ்தவர்களுக்கு வத்திகானும், இஸ்லாமியர்களுக்கு மெக்காவும் எப்படியோ, அப்படியே இந்துக்களுக்கு திருப்பதி ஆகும். இந்நிலையில் இங்கே வாழும் இந்துக்களை பந்தாடிவிட்டு, உலக இந்துக்களின் கடவுள் திருப்பதி வெங்கடாசலபதியின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி மன்றாடுவது நியாயமா? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி...
யாழ் இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள பொதுக்கிணறு நாம் நண்பர்கள் அமைப்பினால் புனரமைக்கப்பட்டுள்ளது. நாளாந்தம் பலர் பாவிக்கும் இந்தக் கிணற்றின் முன் பகுதி பாதுகாப்பாக இல்லாமையால் வீதியிலுள்ள அழுக்குகள் கிணற்றினுள் செல்கிறது. அதைத் தடுப்பததற்காக தற்போது கிணற்றின் முன் பக்க கட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, கால்நடைகள் நீர் அருந்துவதற்கேற்ற வகையில் நீர்த்தொட்டி ஒன்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெளியிலிருந்து...
எமது வடமாகாண இளைஞர் யுவதிகள் நினைத்தால் எதனையும் சாதிக்கக் கூடிய சக்தி கொண்டவர்கள். இவர்களை ஊக்குவிக்க எமது விளையாட்டுத் திணைக்களம் காத்துக் கொண்டிருக்கின்றது. நாங்கள் உதவினாலும் நீங்களே உங்களை வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்லவேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஐந்தாவது வர்ண இரவு விருது வழங்கும்விழா...
தல அஜித் நடிக்கும் என்னை அறிந்தால் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் டீசருக்கு கிடைத்த வரவேற்பை வைத்து படத்தின் ஒரு பாடலான அதாரு உதாரு பாடலை நேற்று வெளியிட்டனர். ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தாலும் பொதுவானவர்கள் தல அறிமுக பாடல் சுமார் ரகம் என்று கூறி வந்தனர். இந்நிலையில் ட்விட்டரில் ஒரு...
இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிநீர் வழங்குவதாக இருந்தால் மாத்திரமே இரணைமடுக்குளத்தைப் புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யமுடியும் என்றிருந்த நிலை மாற்றப்பட்டு, எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் இரணைமடுக்குள அணைக்கட்டைப் புனரமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி கடனுதவி வழங்க முன்வந்திருப்பதாக வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், நீர்வழங்கல், உணவு வழங்கல், சுற்றாடல், மற்றும் கூட்டுறவுத்துறை...
கண்டி வீதியருகே மிருசுவில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சுமார் 52 ஏக்கர் தென்னங்காணியை பலவந்தமாகக் கையகப்படுத்திய பின்னர், அதில் 52 ஆவது படையணியின் தலைமையகத்தை தம்பாட்டில் கட்டி அமைத்துவிட்டு, பின்னர் தற்போது அந்தக் காணியை வலோற்காரமாக படைத்தரப்புக்கு எனச் சுவீகரிப்பதற்கு அரசுத் தரப்பில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கையை ஆட்சேபித்தும், அதைத் தடுத்து நிறுத்தக் கோரியும் கொழும்பு மேன்முறையீட்டு...
பத்திரிகைகள் பக்கச் சார்பாக இயங்கி, பத்திரிகை பயங்கரவாதத்தை நடத்துகின்றன. உண்மையான செய்திகளை வெளியிடுவதற்கு பத்திரிகைகளுக்கு காசு கொடுக்க வேண்டுமா? என வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் கேள்வி எழுப்பினார். வடமாகாண சபையின் மாதாந்த விசேட அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற போது, வடமாகாண சபை அமர்வில் தான் கூறிய கருத்தொன்றுக்கு...
வடமாகாண சபையின் அபிவிருத்தி மற்றும் கவனிப்புக்களில் வவுனியா மாவட்டம் புறக்கணிக்கப்படுகின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், அதனை தவிர்த்து அனைத்து நடவடிக்கைகளிலும் வவுனியா மாவட்டத்தை உள்ளடக்கி வடமாகாண சபை செயற்படவேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.தியாகராசா கோரிக்கை முன்வைத்தார். வடமாகாண சபையின் மாதாந்த விசேட அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற போது, மழை...
இந்தியாவில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததைவிட கூடுதலாக பத்து அணுமின் நிலையங்கள் தொடங்கப்படும் என்று இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையம் வெற்றிப்பெறுள்ளதாகவும் அதனையடுத்தே இந்த முன்னெடுப்பு எடுக்கப்படுவதாகவும் இந்தியா வந்திருக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான சந்திப்புக்கு பிறகு இந்தியப் பிரதமர் இதை கூறியுள்ளார். இந்தியா மற்றும் ரஷ்ய நாட்டுத் தலைவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளின்...
யாழ்ப்பாணம் தமிழ் சங்கம் நடத்தும் நாவலர் விழா நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் தி. வேல்நம்பி தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் சிறப்புரையை "நாவலரின் பன்முக ஆளுமை" என்ற தலைப்பில் உரும்பிராய் இந்துக்கல்லூரி ஆசிரியர் தி.செல்வமனோகரன் நிகழ்த்துவார். தொடர்ந்து...
அரசியல் யாப்புக்கு முரணான விதத்தில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் காணி ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு துணை போகும் வர்த்தமானி அறிவித்தலை (1882/6 இலக்கம் - 2014ஆம் ஆண்டு செப்ரெம்பர் 30ஆம் திகதி) ரத்து செய்ய கோரி வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த விசேட அமர்வு, கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற போது,...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த போது, வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளின் உள்ளக வீதி திருத்தல் மற்றும் வகுப்பறை கட்டிடத்தொகுதி திருத்தல், வர்ணம் பூசுதல் ஆகியவற்றுக்காக 8.87 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த விசேட அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (11)...
நடிகர் ரஜினிகாந்தின் 64வது பிறந்த நாளையொட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சமூக வலைதளம் மூலம் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் அவரது ரசிகர்களால் வெகுவிமரிசையாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அத்துடன் ரஜினி நடித்த லிங்கா திரைப்படமும் வெளியாவதால் அவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்....
Loading posts...
All posts loaded
No more posts