- Friday
- May 8th, 2026
புருணே சுல்தான் ஹசன் அல் போல்கியாவின் இளைய மகனும் பட்டத்து இளவரசருமான அப்துல் மாலிக்கின் திருமணம் உலகமே திரும்பி பார்க்கும் வகையில் ஆடம்பரமாக தங்கங்களை கொட்டி நடைபெற்றது. மணமக்கள் இருவரும் தங்கம், வைர நகைகளில் ஜொலித்தனர். புதுமண தம்பதிகளை காண தலைநகர் பண்டர் செரி பெகவனில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். ஒரு கோடியில் இருந்து பார்த்தால்...
நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் இன்று (16) மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் காங்கேசன்துறை பொத்துவில் ஊடாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு முதலான கடலோரங்களில் காலையில் மழைக்கான சாத்தியம் நிலவும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில்...
இலங்கையில் யுத்தம் முடிந்த பின்னர் தமிழ்ப் பெண்கள் மற்றும் மகளிர் மீது அவர்களின் பிரதேசங்களை இராணுவ மயப்படுத்தும் சாக்கில் பாலியல் துன்புறுத்தல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளமை குறித்து அறிக்கையிடப்பட்டு வருகின்றது. - இவ்வாறு ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு தாம் சமர்ப்பித்துள்ள அறிக்கை ஒன்றில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்திருக்கிறார். முரண்பாடுகள் தொடர்பான பாலியல்...
இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்ஸும் இலங்கை மின்சார சபையின் பிக்கப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து நேற்றிரவு 7.30 மணிக்கு மாங்குளம் - முல்லைத்தீவு வீதியில் தச்சரம்பனில் இடம்பெற்றுள்ளது. இதில் இலங்கை மின்சார சபையின் ஒப்பந்த பணியாளர்களான மட்டுவில் தெற்கைச் சேர்ந்த நவரட்ணம் ஜீவராஜ் (வயது 26),...
நடைபாதை வியாபாரம் சம்பந்தமான கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மாநகர சபை ஆணையாளர்,யாழ்.மாநகர சபை உத்தியோகத்தர்கள், யாழ் வணிகர் கழக பிரதிநிதிகள் ,மற்றும் தொழில் ஆணையாளர் கனகேஸ்வரன் ஆகியோருடனான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பு தொடர்பில் யாழ்.வணிகர் கழகத்தின் தலைவர் ஜெயசேகரம் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், குறித்த சந்திப்பில் நாம் முக்கியமாக நடைபாதை...
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு பெரும்பான்மை வழங்கப்படுவதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்." - இவ்வாறு தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன். கொழும்பில் வரும் வெள்ளி, சனிக்கிழமைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு...
வலி.வடக்கில் மக்களின் மீள்குடியமர்வுக்கு விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் இராணுவம் அழித்தது போக எஞ்சியிருப்பவற்றை களவாடும் நடிவடிக்கைகளில் சில குழுக்கள் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு களவாடிய 25 பேரை நேற்றுப் புதன்கிழமை பொலிஸார் கைது செய்தனர். வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து 9 கிராமசேவகர் பிரிவுகள் மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்பட்டன. இப்பகுதி மக்கள் தங்கள் காணிகளை துப்புரவாக்கும் பணிகளில்...
பேர்ள் ஹார்பர் தாக்குதலில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தமது படையினரின் புதைக்கப்பட்ட உடல்களை தோண்டியெடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. [caption id="attachment_43229" align="aligncenter" width="624"] யுஎஸ்எஸ் ஒக்லஹோமா கடற்படைக் கப்பலில் இருந்த படையினர் ஹவாயில் புதைக்கப்பட்டுள்ள இடம் [/caption] இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா தலையிட பேர்ள் ஹார்பர் மீது ஜப்பான் நடத்தியத் தாக்குதல் முக்கியமான காரணமாக...
இலங்கைக்கு இந்திய அமைதிப் படையை அனுப்பியது மிக உயர் மட்டத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவு என்று இந்திய இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதியும், தற்போதைய இந்திய வெளியுறவுத் துறை துணை அமைச்சருமான வி கே சிங் விமர்சித்துள்ளார். இலங்கைக்கு இராணுவத்தை அனுப்புவது என்ற முடிவு இராணுவ மட்டத்தில் எடுக்கப்படவில்லை என்றும், இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே...
மே ஒன்றாம் தேதி கமலுக்கு மட்டுமின்றி ஸ்ருதிக்கும் முக்கியமான நாள். அன்று கமல் நடித்த உத்தம வில்லனும், ஸ்ருதி நடித்துள்ள கப்பார் இஸ் பேக்கும் திரைக்கு வருகின்றன. தந்தை, மகளின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது அபூர்வம். அது மே ஒன்று நடக்கயிருக்கிறது. கமல் இரு வேடங்களில் நடித்துள்ள உத்தம வில்லன் மே 1 திரைக்கு...
ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கியுள்ள ‘காஞ்சனா–2’ தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ளது. இந்த படம் நாளை ரிலீசாகிறது. காஞ்சனா படம் ஏற்கனவே ஹிட்டானதால் 2–ம் பாகமாக தயாராகியுள்ள இந்த படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் ‘லாரன்ஸ்’ 70 வயது கிழவியாக நடித்து படங்கள் ஏற்கனவே வெளிவந்தன. இது தவிர 7 வயது...
புத்தரிசி பொங்கல் திருவிழா ஜனாதிபதி தலைமையில் சோமாவதி புனித பூமியில்புத்தரிசி பொங்கல் திருவிழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (15) சோமாவதி புனித பூவியில் நடைபெற்றது. அறுவடை செய்யப்பட்ட புது அரிசியின் முதற்பகுதியை புத்தபெருமானுக்கு பூஜை செய்யப்பட்டது. அடுத்த விளைச்சல் செழிப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இப்பூஜை செய்யப்பட்டது. விவசாயிகளுடன் அந்நிகழ்வில் கலந்து...
இந்திய அரசால் வருடா வருடம் வடமாகாண மாணவர்களுக்கு என இந்திய அரசால் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன.ஆனால் குறித்த புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பித்து பயில்வோர் வடமாகாணத்தில் குறைவாகவே உள்ளதாக இந்திய துணைத்தூதுவர் நட்ராஜ் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெற்ற மலரட்டும் புதுவசந்தம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் இந்திய அரசால்...
முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை எதிர்வரும் 17ஆம் திகதி பின்னவலையில் திறந்து வைக்கப்படவுள்ளது. இலங்கையின் உல்லாசப்பயணத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இத்திறந்தவெளி மிருகக்காட்சிசாலை திறந்து வைக்கப்படவுள்ளது. பின்னவலை யானைகள் சரணாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள 44 ஏக்கர் நிலப்பகுதியில் குறித்த திறந்தவெளி மிருக்காட்சிசாலை அமைக்கப்பட்டுள்ளது. சிறுத்தைகள், கரடிகள், மான்கள், முதலைகள் உட்பட பல விலங்குகளை இந்த திறந்தவெளி மிருகக்காட்சாலையில் காணலாம்....
இன்று (15) வடக்கின் அனலைதீவு-யாழ்ப்பாணம் மற்றும் ஒட்டுவெளி ஆகிய பிரதேசங்களில் நன்பகல் 12.11 மணிக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த 5ஆம் திகதி தொடக்கம் இன்று வரை (15) சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை சிலவேளைகளில் கடுங்காற்றுடன் கூடிய இடி மின்னல் ஏற்படக்கூடிய...
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் யாழ்.மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் முன்னாள் ஊழியர்கள் ஒன்றியத்தினால் குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவின் ஜே.கே நிறுவனமும் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனமும் இணைந்து காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீளவும் இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கலந்துரையாடலின்...
கிளிநொச்சி, பரந்தனில் அமைந்துள்ள தனது 7 ஏக்கர் காணியை இராணுவம் அபகரித்து வைத்துள்ளது. அதனை விடுவித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி தாய் ஒருவர் தனது காணியின் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் மக்கள் தொடர்பு அலுவலகம் அமைந்துள்ள காணியையே விடுவிக்க கோரி அந்தத் தாயார் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்....
இந்தியாவிற்கு செல்ல விரும்பும் இலங்கை பயணிகள் விமான நிலையத்தில் வைத்தே இந்திய விசாவினைப் பெற்றுக்கொள்ளும் வசதி நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. கடந்த மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயத்தின் போது விசா தொடர்பாக வழங்கிய உறுதிமொழிக்கு அமைய இந்த சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்தியா 43 நாடுகளுக்கு ‘On-arrival visa’ அதாவது...
யாழில் உள்ள உணவகங்களில் 90 வீதமான உணவகங்கள் உணவகம் ஒன்றுக்கு ஏற்றவகையில் அமைக்கப்படவில்லை என யாழ்.மாநகர சபையின் வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ் உணவகங்களில் கழிவகற்றும் பாதை, உணவுப் பொருட்கள் வைக்கும் இடம், சமையலறை, களஞ்சியம் என்பன சீரான முறையில் காணப்படவில்லை அல்லது அமைக்கப்படாமையே இதற்குக் காரணம் எனவும் அவர்கள் தெரிவித்தனர். யாழ்.மாவட்டத்தில் உணவு சம்பந்தமான...
திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை விடவும் சிறிய அளவிலான விதிகளையே புதிய அரசாங்கம் அமைத்து வருகிறது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். அம்பாந்தோட்டை மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாதை நிர்மாணப் பணிகளுக் காக பயன்படுத்தப்படுகின்ற கொங்கிரீற் கற்படிகளின் தடிப்புகளை குறைத்தும் செலவை குறைத்தும் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன்,...
Loading posts...
All posts loaded
No more posts
