அனலைதீவு-யாழ்ப்பாணம்- ஒட்டுவெளி ஆகிய பிரதேசங்களில் சூரியன் உச்சம்

இன்று (15) வடக்கின் அனலைதீவு-யாழ்ப்பாணம் மற்றும் ஒட்டுவெளி ஆகிய பிரதேசங்களில் நன்பகல் 12.11 மணிக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த 5ஆம் திகதி தொடக்கம் இன்று வரை (15) சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சிலவேளைகளில் கடுங்காற்றுடன் கூடிய இடி மின்னல் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களும் காணப்படுகின்றமையினால் அவதானத்துடன் இருக்குமாறு வானிலை அவதான நிலையம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

Related Posts