- Monday
- June 15th, 2026
நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய ஒற்றுமை என்பவற்றிற்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரியில் அண்மையில் மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட தற்கொலை குண்டு...
ஜனாதிபதித் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்று ஏற்கனவே எடுத்திருக்கும் முடிவில் எவ்வித மாற்றமும் இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தனது அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல எனவும், நாடாளுமன்றத்தின் பொறுப்பு எனவும் கூறியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தான் நாடாளுமன்றத்துக்குப் பூரண அனுமதியை வழங்கியிருப்பதாகவும்...
அச்சுவேலி, அதனை அண்மித்த நவக்கிரியில் நேற்று சனிக்கிழமை அதிகாலை தொடர் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 100 பவுணுக்கும் அதிகமான நகைகளும் 25 ஆயிரம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளன என முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் கொள்ளையர்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றவர் எனக் கருதப்படும் வாகனச் சாரதி ஒருவரை கோப்பாய்...
சாவகச்சேரியில் தற்கொலை அங்கி, கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொரள்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எஸ். பீரிஸிடம் சி.ஐ.டியினர் இரண்டரை மணிநேரம் துருவித்துருவி விசாரணை நடத்தியுள்ளனர். சாவகச்சேரியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வெடிபொருட்கள் மீட்கப்பட்ட நிலையில், மறுநாள் புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது அது பற்றி பீரிஸ் கருத்து வெளியிட்டிருந்தார். இந்த...
இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் 11 வெளிநாட்டவர்களுடன் கைப்பற்றப்பட்ட 101 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி 11,000 இலட்சம் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக நேற்று காலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி இருந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனைக் கூறினார். போதைப் பொருளை கடத்தி...
போரின் போது படையினரிடம் சரணடையாத 4000 புலி உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என உயர் மட்ட இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று இந்த தகவல்கள் வெளியிடப்பட்டதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களில் பலர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளதுடன் ஏனையவர்கள் வடக்கில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் படையினரிடம் சரணடையவில்லை. இது ஒர் பாரதூரமான பிரச்சினை தெரிவிக்கப்படுகிறது. வெடிபொருள்...
ஈபிஆர்எல்எவ் கட்சி தமது பெயரில் உள்ள ஈழம், விடுதலை ஆகிய பெயர்களை நீக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இது தொடர்பான அறிவிப்பு யாழ்ப்பாணத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவுள்ளது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்றுள்ள இந்தக் கட்சியின் பெயர், தமிழ் சமூக ஜனநாயக கட்சி என்று மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சியின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் தற்போது...
நீர்வேலி தெற்கில் வீடொன்றுக்குள் புகுந்த இளைஞர் குழுவொன்று மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இந்த தாக்குலினால் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சுமார் 10 பேர் கொண்ட இளைஞர் குழு குறித்த பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து வீட்டு உரிமையாளரை பொல்...
தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைபு சம்பந்தமான மக்கள் கருத்தறியும் செயற்திட்டம் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து நிபுணர் குழுவானது இன்று முதல் மீண்டும் ஒன்று கூடித் தீர்வுத்திட்ட இறுதி வரைபை தயாரிக்கும் பணியில் ஈடுபடவுள்ளது. இப் பணியானது எதிர்வரும் நாட்களில் முடிவுறும். பேரவையின் தீர்வுத்திட்ட வரைபுக்கு தமிழ் மக்கள் பெருமளவில் தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்திருக்கும்...
காரைநகர், கசூரினா கடற்கரையில் புதன்கிழமை (30) கரையொதுங்கிய சடலம், யாழ்ப்பாணம் பெருமாள் வீதியைச் சேர்ந்த சின்னையா தங்கராஜா (வயது 59) என்பருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். இவர், யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் சிற்றூழியராகக் கடமையாற்றி வந்துள்ளார். கடலில் நீராடிய போதே, இவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் கூறினர்....
பாடசாலை மாணவியொருவரை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி, அவரை ஒரு பெண் குழந்தைக்குத் தாயாக்கிய குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தால் 10 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கந்தையா சித்திவிநாயகம் (வயது 69) என்ற வயோதிபர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை (01) உயிரிழந்தார். நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் பன்னிரண்டாவதகாவும் சந்தேகநபர் ஒருவர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் (01) முன்னிலைப்படுத்தப்பட்டார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் வழக்கு விசாரணைகளுடன் இணைக்காது மேலும் ஒருவர் பதினோராவது சந்தேக நபராக கைது செய்யப்பட்டு பிரிதொரு தினத்தில் நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது....
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புச்வால்ட், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இன்று காலை கொழும்பில் உள்ள முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பொறுப்புக்கூறல் விவகாரங்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக இந்தச் சந்திப்பில், கலந்துரையாடப்பட்டுள்ளது....
சிறீலங்காவுக்கு திடீர் பயணமொன்றினை மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புச்வால்ட் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். இதன்பின்னர் வெள்ளிக்கிழமை மாலை சிறீலங்காவுக்கான பாதுகாப்பு அமைச்சர் கருணாசேன ஹெற்றியாராச்சியை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை...
சில தினங்களுக்கு முன்னர் நடிகை நயன்தாரா வீட்டில் மர்ம நபர்கள் சிலர் புகுந்து, அவரை கடுமையாக தாக்கியதாகவும், இதில் அவரது கண், கை மற்றும் காலில் அடிப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஹரி இயக்கிய 'ஐயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நயன்தாரா. அதனையடுத்து ரஜினி, விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன்...
பாகுபலி படத்திற்கு பிறகு தோழா படமும் சூப்பர் ஹிட்டாக அமைந்திருப்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் தமன்னா. கூடவே மேற்படி இரண்டு படங்களுமே தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலுமே வெற்றி பெற்றிருப்பதால் அவர் இரட்டிப்பு மகிழ்ச்சியில் காணப்படுகிறார். அதோடு, விஜய்சேதுபதியுடன் தான் நடித்துள்ள 'தர்மதுரை' படமும் தனக்கு அடுத்து இன்னொரு ஹிட்டாக அமையும் என்பது அவரது...
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் 10 நிமிடம் தொடர்ந்து பேசுவது ரசிகர்களின் பேவரைட்டாக இருந்துவருகிறது. அதில் விஜய் மீடியாவுடன் பேசிகொண்டிருக்கும் போது ஒருவர் கேள்விக்கு கோபமான விஜய், அவரை "இங்கே வாங்க சார்..! நீங்க தான் சொன்னீங்களா? கடைசியா எப்போ ஒரு செடியை நட்டிருபீங்க?" என கேட்பார். இதேபோல...
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை கலைத்து இடைகால கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையொன்றை நியமிக்குமாறு முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் அர்ஜுண ரணதுங்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் பகிரங்க கோரிக்கை முன்வைத்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி தற்போது எதிர்நோக்கியுள்ள பின்னடைவை தடுத்து நிறுத்துவதற்கு இதுவே சிறந்த தீர்வு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிரிக்கெட் விளையாட்டின் நற்பெயரை காப்பாற்றுவதற்காக...
சாவகச்சேரியில் தற்கொலை குண்டு தாக்குதல் அங்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவச்சிப்பாய் ஒருவரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலை குண்டு தாக்குதல் அங்கி உள்ளிட்ட வெடி பொருட்கள் அடங்கிய வீட்டை சந்தேகநபரான ரமேஷ் எனப்படும் எட்வேட் ஜுலியனுக்கு பெற்றுக்கொடுத்தவர் இராணுவத்தில் பணியாற்றும் ஒருவரேின் சகோதரரே என ஆங்கில நாளிதழ் ஒன்ற செய்தி வெளியிட்டுள்ளது. சாவகச்சேரி வீட்டில்...
வவுனியாவில் 14 வயது மாணவி ஹரிஸ்ணவி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரின் விளக்கமறியல் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபரின் வழக்கு விசாரணை வவுனியா மாவட்ட நீதிமன்றில் நேற்றையதினம் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கினை விசாரித்த மாவட்ட நீதிபதி சந்தேக நபரை எதிர் வரும் நான்காம் திகதி...
Loading posts...
All posts loaded
No more posts
