போரின் போது படையினரிடம் சரணடையாத 4000 புலி உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என உயர் மட்ட இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று இந்த தகவல்கள் வெளியிடப்பட்டதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவர்களில் பலர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளதுடன் ஏனையவர்கள் வடக்கில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் படையினரிடம் சரணடையவில்லை. இது ஒர் பாரதூரமான பிரச்சினை தெரிவிக்கப்படுகிறது.
வெடிபொருள் நிபுணர்கள், குண்டு பொருத்துவோர், தாக்குதல்களை திட்டமிடுவோர், புலனாய்வுப் பிரிவு செயற்பாட்டாளர்கள் மற்றும் புலிகளின் சர்வதேச வலையமைப்புடன் தொடர்புடையவர்களும் இவ்வாறு படையினரிடம் சரணடையாதவர்ளின் பட்டியலில் உள்ளடங்குவதாக இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரனின் கணவரும் படையினரிடம் சரணடையவில்லை என இன்றைய திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.