ரேஸில் விபத்து : நடிகர் அஜித்துக்கு என்ன ஆச்சு?

திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் குமார், மோட்டார் வாகனப் பந்தயங்களில் தீவிர ஆர்வம் கொண்டவர். சர்வதேச அளவில் நடைபெறும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் அவர், சமீபத்தில் 'அஜித் குமார் ரேசிங்' என்ற சொந்தப் பந்தய அணியை உருவாக்கி, பல்வேறு சர்வதேசப் தொடர்களில் களம் இறக்கி...

மொத ராத்திரி திரைப்படத்தை பாராட்டிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்!!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் அனிஷ்மா அனில்குமார், ரிஷிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் 'மொத ராத்திரி'. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், மொத ராத்திரி திரைப்படத்திற்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் திரைப்படம் "நகைச்சுவை விருந்து" என்று...
Ad Widget

விசேட வைத்தியர் ஒருவர் மாயம்!!

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன் பின்னர் இவ்வாறு காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் ஆராய்ந்த போது, வைத்தியரின் கார் மஹியங்கனை திசையை நோக்கிப் பயணிப்பது மீகஹகிவுல பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காணொளியில்...

இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

இந்திய ஆண்களுடன் திருமணம் நிச்சயயிக்கப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த 150 இற்கும் மேற்பட்ட சிந்தி சமூகத்தை சேர்ந்த மணப்பெண்கள் ஓராண்டு காத்திருப்புக்கு பிறகு இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்த சிந்தி சமூகக் குடும்பங்கள், இந்தியாவில் உள்ள தங்களது உறவினர்கள் அல்லது சமூகத்தினருக்கு தங்கள் மகள்களைத் திருமணம் செய்து கொடுப்பது வழக்கமான ஒன்று. கடந்த...

இமாச்சல பிரதேசம், லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

இமாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் இன்று (24) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பா பகுதியில் அதிகாலை 3.40 மணியளவில் ரிக்டர் அளவில் 3.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 8 கி.மீ.கடல் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்,...

உசேன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ரோபோக்கள்!!

சீன தலைநகர் பீஜிங்கில் மனித வடிவ ரோபோக்களுக்கான 2 ஆவது உலக விளையாட்டுப் போட்டி கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமாகியது. தடகளம், கால்பந்து, டேபிள் டென்னிஸ் உள்பட 51 வகையான போட்டிகள் நடக்கின்றன. [caption id="attachment_129080" align="aligncenter" width="760"] created by photogrid[/caption] இதில் 16 நாடுகளைச் சேர்ந்த 2,056 மனித வடிவ ரோபோக்கள்...

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவச்சீட்டு!!

தனியார் துறை ஊழியர்கள் இணைய வழியில் ரயில் பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் புதிய முறையை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்க ஊழியர்களுக்காக அண்மையில் இணையவழி பருவச்சீட்டு முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது.இந்நிலையில், இதனைத் தொடர்ந்து அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் இந்த வசதியை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும்...

வடக்கு, கிழக்கு, வடமத்தியில் உஷ்ண எச்சரிக்கை!!

இன்றையதினம் (24) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு, மொணராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின்...

யாழ். மாவட்ட செயலக்கத்தின் முக்கிய அறிவிப்பு….

பண்டத்தரிப்பு பிரான்பற்று கிராமத்தில் உள்ள ஆலயத்தில் நேற்று இரவு (20.08.2026) நடைபெற்ற திருவிழாவின் போது, வாணவேடிக்கையால் ஏற்பட்ட புகை மற்றும் ஒளி கூடிய மின் விளக்குகளின் பயன்பாடு காரணமாக பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுவரை 127 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளதாக கண் வைத்திய...

யாழில் திருவிழா லேசர் வெளிச்சத்தால் நூற்றுக்கணக்கானோருக்கு கண் பாதிப்பு!!

பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெறும் ஆலயத் திருவிழாவின்போது அதிக வெடிகள் மற்றும் லேசர் லைற் பயன்பாட்டின் காரணமாக கண்ணில் பாதிப்படைந்த நூற்றிற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரான்பற்று பகுதியில் உள்ள ஆலயத்தில் நேற்றைய உற்சவத்தின்போது அதிக வானவேடிக்கை வெடிகள் கொளுத்தப்பட்டதோடு ஆலயத்தில் இசை நிகழ்வின்போது அதிக சக்திகொண்ட லேசர் லைற் வகைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன இதனால் கண்ணில் பாதிப்படைந்த...

கவின் – நயன்தாரா இணையும் ‘ஹாய்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

லேடி சூப்பர்ஸ்டார்' நயன்தாரா மற்றும் இளம் முன்னணி நடிகர் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இந்தத் திரைப்படம் ஒரு முழுமையான காதல் மற்றும் குடும்பத் திரைப்படமாக உருவாகியுள்ளது. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த 'ஹாய்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் கவின் மற்றும் நயன்தாராவுடன் இணைந்து தமிழ்...

வலி. தெற்குக்கு பிரதேச சபைக்கு காலக்கெடு விதித்துள்ள வலி.வடக்கு பிரதேச சபை!!

வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளை கொட்டிய , வலி.தெற்கு பிரதேச சபை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் அவற்றை மீள அள்ள வேண்டும் என காலக்கெடு விதித்து வலி. வடக்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை...

நெடுந்தீவுக்கு அதிசொகுசு படகு!!

சமூக சக்தி தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள பன்முக வறுமை ஒழிப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின்...

நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியன்!!

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்பட்ட 16 வயதுக்குட்பட்ட அகில இலங்கை பாடசாலைகள் முதலாம் பிரிவு கால்பந்தாட்டப் போட்டியில் தனது கன்னி முயற்சியிலேயே நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியனானது. கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நேற்று முன்தினம் பிற்பகல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பதுளை தர்மதூத்த கல்லூரியை 4 - 3 என்ற பெனல்டி முறையில்...

அதிப​ரை கொன்றுவிட்டு சுற்றுலா சென்ற மாணவர்கள்!!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் 48 வயதான பாடசாலை அதிபர் 27 முறை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், 10ஆம் தரத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள நாகார்ஜுனா பொதுப் பாடசாலையின் அதிபரும் பணிப்பாளருமான கல்லு ரூபா ரெட்டி, கடந்த 12ஆம் திகதி தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்....

தேசிய துக்க தினங்கள் அறிவிப்பு!

இசைக்கலைஞர் கலாநிதி நந்தா மாலனியின் மறைவு காரணமாக, ஒகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய மூன்று நாட்களை தேசிய துக்க தினங்களாக அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்கள் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் விரைவில் வெளியிடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையில் 1,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள்!

நாடு முழுவதிலும் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) டிப்போக்களில் ஒப்பந்த அடிப்படையில் சாரதி மற்றும் நடத்துனர் பதவிகளிலுள்ள 1,037 வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் கீழ் 788 சாரதி வெற்றிடங்களும் 249 நடத்துனர் வெற்றிடங்களும் நிரப்பப்படவுள்ளதுடன், அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்: சாரதி பதவி:...

உயர் கல்வி வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கான மகிழ்ச்சி செய்தி!!

உயர் கல்வி வாய்ப்பைப் பெறாத 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு மாணவர்களுக்குத் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்காக அரசாங்கத்தினால் வட்டி இல்லாக் கடன் வழங்கும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கடனுக்காக அதிகபட்சமாக 15 லட்சம் ரூபா வரை வழங்கப்படும் என்பதுடன், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 7 ஆண்டுகள் அவகாசம் அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்...

கணிசமான பல்கலைக்கழக மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை!!

பல்கலைக்கழக மாணவர்களில் கணிசமான தொகையினர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பேராசிரியர் அமில இசுரு தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக பாடநெறிகளைக் கைவிட்டு வெளியேறும் ஆண் மாணவர்களில் 70% முதல் 80% வரையிலான பெரும்பான்மையினர் ஏதேனுமொரு போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே என்பது தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவது தொடர்பான முழு நாடும் ஒன்றாக தேசிய இயக்கத்தின்...

தரமற்ற தலைக்கவசம் விற்பனை!! 200,000/- அபராதம்!!

தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்தியிருந்த கொழும்புப் பகுதியிலுள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு 200,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கடை இலக்கம் 05 பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையின் கொழும்பு மாவட்ட செயலகத்தின் விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கொழும்பு...
Loading posts...

All posts loaded

No more posts