கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை!!

திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் சென்ற ஜூலை 22 ஆம் திகதி முதல் மேற்கோள்ளப்பட்டு வரும் கட்டிட நிர்மாண வேலைகளை, உள்ள நிலையிலேயே இடைநிறுத்துமாறு திருகோணமலை மேல்நீதிமன்றம் இன்று (31) திங்கட்கிழமை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன், இது தொடர்பில் மேல் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கில்,எதிர்வரும் செப்டெம்பர் 22...

ரவி கருணாநாயக்க கைது!!

விசாரணை ஒன்று தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை அதிகாரிகளால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு இணங்க, ரவி கருணாநாயக்க திங்கட்கிழமை (31) காலை சுமார் 8:15 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப்...
Ad Widget

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் இராஜினாமா!!

வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன், தனியார் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தனது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். குறித்த தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர், நெல்லியடிப் பகுதியில்...

பாண் விலை அதிகரிப்பு!!

இன்று நள்ளிரவு (ஆகஸ்ட் 31) முதல் 450 கிராம் எடையக்கொண்ட பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (ஆகஸ்ட் 30) ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோருக்கு எவ்வித unfair (முறையற்ற)...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தலைவிதி அறியாத துயரம்: தாய்மார்கள் உயிரிழப்பு பேரதிர்ச்சி!

வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் தாயார்கள், தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என அறியாமலே இறந்து போவது மிகவும் மோசமான ஒரு சம்பவமாகும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணிக்குழுவின் பிரதிநிதி அனா லோறினா டெல்கடிலோ பெரஸ் (Ana Lorena Delgadillo Pérez) கவலை...

ஐஓசி, சினோபெக் பெற்றோல் விலைகளும் குறைப்பு!!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் பெற்றோல் விலைகளைக் குறைத்ததைத் தொடர்ந்து, லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் (LIOC) தனது எரிபொருள் விலைகளைத் திருத்தியமைத்துள்ளது. இதற்கமைய, ஐ.ஓ.சி நிறுவனம் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவால் குறைத்துள்ளதுடன், அதன் புதிய விலை 399 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக...

யாழில் இருவருக்கு மரண தண்டனை!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் மரண தண்டனை விதித்துள்ளார். திருநெல்வேலி பகுதியில், கடந்த 2012 ஆம் ஆண்டு மது போதையில் இளைஞன் ஒருவரை மூர்க்கத்தனமாக அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 09 நபர்களை கைது செய்திருந்தனர்....

அர்ச்சுனாவின் எம்.பி பதவி எதிர்ப்பு மனுவை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிக்கை!!

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு அவரது சட்டத்தரணி இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இம்மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோதே, அர்ச்சுனா எம்.பி சார்பில் ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்ன இக்கோரிக்கையை முன்வைத்தார். எவ்வாறாயினும்,...

பொதுமக்களுக்கான அவசர வேண்டுகோள் – தயவுசெய்து தீ வைக்க வேண்டாம்!

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு பொதுமக்களுக்கு விடுக்கும் அவசர வேண்டுகோள்.... முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது நிலவும் வரண்ட காலநிலை காரணமாக, மக்கள் தங்களுடைய காணிகளை சுத்தப்படுத்துவதற்காக வைக்கும் தீ, கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள காணிகள், வீடுகள் மற்றும் ஏனைய சொத்துகளுக்கும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. எனவே, காணிகளுக்கு தீ வைப்பதை பொதுமக்கள் முற்றாகத்...

சைப்ரஸில் படகு கவிழ்ந்து விபத்து; 07 பேர் உயிரிழப்பு, 23 பேரைக் காணவில்லை

வடக்கு சைப்ரஸின் கிரேனியா துறைமுகத்திலிருந்து துருக்கி நோக்கிப் பயணித்த சுமார் 270 பயணிகளைக் கொண்ட கட்டுமரப் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 07 பேர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 12.30 மணியளவில் கிரேனியா துறைமுகத்திலிருந்து துருக்கியின் தசுச்சு துறைமுகம் நோக்கிப் புறப்பட்ட...

இந்த படத்தை கண்டிப்பாக பாருங்க, நல்ல படத்தை என்கிரேஜ் பண்ணனும்- நடிகர் சிம்பு

ம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் படம் எப்போது வரும் என பலரும் காத்திருப்பார்கள். இந்த நிலையில் சிம்பு சோலோ ஹீரோவாக கடைசியாக நடித்த படம் அச்சம் என்பது மடமையடா தான். எப்போதும் சிம்பு சோலோ ஹீரோவாக நடிப்பார் என காத்திருந்த நிலையில் அரசன் படம் படு ஜோராக படப்பிடிப்பு நடந்து வருகிறது,...

அஜித்தின் டேர்டெவில் படத்தில் ஷாலினி!!

அஜித் கார் ரேஸில் கலந்துகொள்வதற்காக சினிமாவில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்டு இருக்கிறார். அவர் அடுத்து நடிக்கும் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். அந்த படத்திற்கு டேர்டெவில் என டைட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதை ஷாலினி அஜித் தான் தயாரிக்க போகிறார். செப்டம்பர் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஷாலினியை...

ஒலி உபகரணங்களை பயன்படுத்த புதிய கட்டுப்பாடு!!

பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகள், ஆம்பிளிஃபயர்கள் மற்றும் ஏனைய ஒலி உபகரணங்களை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்துமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். இந்த ஒலி மாசுபாடானது கைக்குழந்தைகள், பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு பாரிய சுகாதார மற்றும் உளவியல் ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தமது அறிக்கையில்...

ஒரே போட்டியில் 04 கோல்கள் அடித்து மெஸ்ஸி அசத்தல்

அமெரிக்காவின் மேஜர் லீக் கால்பந்து தொடரில் (MLS), என்யூ அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இன்டர் மியாமி , சிஎப் மாண்ட்ரியல் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இன்டர் மியாமி வீரர்கள் அடுத்தடுத்து கோல்களை அடித்தனர். அந்த அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி 4 கோல்களை அடித்து அசத்தினார். மேலும்,...

யாழில் வீடொன்றின் மீது தாக்குதல் – NPP உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் கைது

நெல்லியடியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லியடி பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின் மீது கல்லெறிந்து சந்தேகநபர் தாக்குதல் நடத்தியுள்ளார். இதன்போது அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராக்களும் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் நெல்லியடி...

நேபாள வெள்ளப்பெருக்கு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 762 ஆக உயர்வு

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 762 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் 2,715 பேர் காணாமல் போயுள்ளதாக நேபாள பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு குருந்தூர் விகாரைக்கு மீண்டும் பொலிஸ் பாதுகாப்பு

முல்லைத்தீவு குருந்தூர் ரஜமஹா விகாரை வளாகத்திலிருந்து அகற்றப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்குப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. விகாரையில் அகற்றப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரி, விகாராதிபதி கல்கமுவே சந்தபோதி தேரரினால் அமைச்சுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்குப் பதிலளிக்கும் வகையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில், விகாரைக்குத்...

நாட்டின் விவசாய உற்பத்திகளுக்கான வெளிநாட்டுக் கேள்வி கணிசமாக அதிகரிப்பு

இலங்கையின் விவசாய உற்பத்திகளுக்கான வெளிநாட்டுக் கேள்வி கணிசமாக அதிகரித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் விவசாய உற்பத்திகளின் ஏற்றுமதி வளர்ச்சி 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க சுட்டிக்காட்டுகின்றார். தெங்கு சார்ந்த உற்பத்திகள் 42 சதவீதமும், பழங்கள் 21 சதவீதமும், காய்கறிகள் 20 சதவீதமும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகக்...

ஈரானின் லாரக் தீவு மீது அமெரிக்கா தாக்குதல்!!

ஜூலை மாதத்தின் பிற்பகுதிக்குக்குப் பிறகு முதன்முறையாக அமெரிக்கப் படைகள் ஈரானிய நிலப்பரப்பு மீது தாக்குதல் நடத்தியுள்ளன. ஈரானின் லாரக் தீவில் அமைந்துள்ள இரண்டு ஈரானிய ஏவுகணை ஏவுதளங்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் ஹோமுஸ் நீரிணையை (Strait of Hormuz) நோக்கிய கடல்சார்...

ரவி கருணாநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!!

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். தேசிய லொத்தர் சபையின் சிறப்புத் திட்டத்திற்காகப் பணியமர்த்தப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் அளிப்பதற்காக, அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார். இந்த விசாரணை தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவுசெய்வதற்காக...
Loading posts...

All posts loaded

No more posts