Ad Widget

பொதுமக்கள் ஒன்று சேரும் உரிமையை தடுக்க ஜனாதிபதி முயற்சிக்கின்றார் – எம்.ஏ சுமந்திரன்

பாதைகள், வீதிகள், பாலங்கள் போன்றவை இந்த நாட்டில் அத்தியாவசிய சேவையா என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார் திருகோணமலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த விசேட சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”நேற்றைய தினம் ஜனாதிபதி அவர்களால் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் பாதைகள், வீதிகள்,...

விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுகின்றது!! – அமெரிக்கா

விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்படுகின்றது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவினால் நேற்று(திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதம் குறித்த 2021ஆம் ஆண்டிற்கான அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் தொண்டு நிறுவனங்களை பயன்படுத்தி நிதிதிரட்டி தமது செயற்பாடுகளிற்கு பயன்படுத்துகின்றனர் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2009இல் இலங்கை அரசாங்கத்தினால் இராணுவ ரீதியில் தோல்வியடைந்த போதிலும் விடுதலைப்புலிகளின் சர்வதேச...
Ad Widget

இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் – விசாரணையினை ஆரம்பித்தது சி.ஐ.டி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான கொலை சதி முயற்சி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் கட்சியொன்றுடன் தொடர்புடைய குழுவொன்று, சில தினங்களுக்கு முன்னர் வெளிநாடொன்றில் இந்த கொலைச் சதித்திட்டம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளதாக...

யாழில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் வழக்கை மே மாதம் 8ஆம் திகதிக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்ள யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகளின் வழக்கு விசாரணை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் இன்றைய...

புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக யாழில் விசேட வைத்தியசாலை!

புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக யாழ்ப்பாணம், பதுளை, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் விசேட வைத்தியசாலைகளையும், பொருத்தமான இடத்தில் விசேட நவீன சிறுவர் வைத்தியசாலையொன்றையும் ஸ்தாபிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மருத்துவ ஆராய்ச்சிக்கான நவீன ஆய்வுகூடம்...

யாழ்.மாநகர சபையின் பாதீடு மீண்டும் தோல்வி!!

யாழ்ப்பாண மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) சபையில் முன் மொழியப்பட்டதை அடுத்து 6 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் வரவு செலவு திட்டம் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் முன் மொழியப்பட்டது. இதற்கு சபையில் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது , வரவு செலவு திட்டத்திற்கு...

போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து காவலாளியை வாளால் வெட்ட முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது!!

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்ததுடன், கடமையில் ஈடுபட்டிருந்த காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நோயாளர் பார்வை நேரம் முடிந்த பின் தந்தையை பார்வையிட அனுமதிக்கவில்லை என்ற காரணத்துக்காகவே இந்த வன்முறை இடம்பெற்றதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது....

O/L பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணி இன்றுடன் நிறைவு!!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் பணி இன்றுடன் நிறைவடைகிறது. இம்முறை பரீட்சைக்கு ஓன்லைன் (online) ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க வேண்டும் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை விண்ணப்பதாரர்கள் தமது பாடசாலை அதிபரினூடாகவும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட முறையிலும் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய விண்ணப்பிக்க வேண்டும். பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான...

நாடு முழுவதும் மழையுடனான காலநிலை அதிகரிக்கும் சாத்தியம்!!

நாட்டில் இன்று மழையுடனான காலநிலை ஓரளவு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் அதே வேளையில் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, மேல் மற்றும்...

கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கபிரதிநிதிகள் இந்திய துணைத்தூதுவரை சந்தித்தனர்!

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகள் இந்திய துணைத்தூதுவரை நேற்று சந்தித்து கலந்துரையாடினர். நேற்று மதியம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் துணைதூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை சந்தித்த மீனவர் சங்க பிரதிநிதிகள் மகஜர் ஒன்றை வழங்கியதோடு, வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர். குறிப்பாக இந்திய கடற்றொழிலாளர்களின்...

வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தயாராகும் தொழிற்சங்கங்கள்!

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன. அந்த வகையில் நாளை (புதன்கிழமை) இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய இன்று (செவ்வாக்கிழமை) இது இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் பணிப்புறக்கணிப்பு காரணமாக அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ள...

ஐரோப்பிய நாட்டில் சுட்டு வீழ்த்தப்பட்ட உளவு விமானம்!!

ரஷ்ய ஜனாதிபதி புடினின் மதிப்பு மிக்க உளவு விமானமானது ட்ரோன் தாக்குதலால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானமானது ரஷ்யாவுக்கு நட்பு நாடான பெலாரஸில், ரஷ்யாவுக்கான விமான தளத்தில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதுடன் கடைகளில் வாங்கக் கூடிய ட்ரோன்களால் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ரஷ்யா மொத்தமாக பயன்படுத்தும் 6 உளவு விமானங்களில் ஒன்று தான்...

மருத்துவ கழிவு விடயம் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை – பணிப்பாளர் சத்தியமூர்த்தி

யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவு விடயம் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) வைத்தியசாலையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது த.சத்தியமூர்த்தி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்திய சாலையின் மருத்துவ கழிவுகள் பாதுகாப்பான முறையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உள்ள எரியூட்டியில் எரிக்கப்பட்டு...

யாழ்.போதனா வைத்தியசாலையில் வாள்வெட்டு!!

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் போதனா வைத்தியசாலை காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதுடன், பொருட்களை வாளால் வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறை பக்கம் உள்ள நுழைவாயிலுக்கு அருகில் பட்டா வாகனத்தில்...

குருந்தூர் மலைக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களைக்கண்டு அங்கிருந்தவர்கள் காட்டுக்குள் ஓட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை தொடர்ச்சியாக புறந்தள்ளி அமைக்கப்பட்டு வந்த பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப் பெற்றுள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இங்கு மேற்கொள்ளப்படும் பௌத்த கட்டுமானங்களை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது எனவும்...

ஜனாதிபதியை நோில் சந்திக்க அனுமதிகோரி வடமாகாண கடற்றொழிலாளர்கள் கடிதம்!

இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு தொிவித்து வடமாகாண கடற்றொழிலாளர்களால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்று அனுப்படவுள்ளது. இதன்போது நேரில் சந்தித்து பேச வாய்ப்புதரக்கோரியும் குறித்த கடிதத்தில் வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் வடபகுதி கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலில்...

கலைப்பீட மாணவர்கள் 4 பேருக்கு வகுப்புத் தடை

யாழ். பல்கலைகழக கலைப்பீட மாணவர்கள் 4 பேருக்கு வகுப்புத் தடை மற்றும் பல்கலைகழக வளாகத்திற்குள் நுழைவதற்கான தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த 22 ஆம், 23 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலை வார நிகழ்வுகளின் போது, 3 ஆம் வருட மாணவர்களால், 2 ஆம் வருட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் சுதந்திரமான மற்றும் முறை சார்ந்த விசாரணையை...

ஜனாதிபதி மக்களின் உரிமைகளை தடுத்து வருவது மிக மோசமானது!

ரணில் விக்ரமசிங்க தன்னுடைய அடி மனதில் இருக்கின்ற அந்த பயங்கரவாத தோற்றத்தை வெளிக்காட்டி மக்களின் உரிமைகளை தடுத்து வருவது மிக மோசமானது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் இன்று இடம்பெறுகின்ற நிழ்வுகளிற்கு இலங்கையின் ஜனாதிபதி...

இலங்கையில் பெற்றோல் விலை 800 ரூபாவாக அதிகரிக்கும் சாத்தியம்!!

எதிர்காலத்தில் பெற்றோல் விலையை சுமார் 800 ரூபாவாக அதிகரிப்பதற்கக QR முறையை இல்லாதொழிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் வினவிய போது அவர் அதனை நிராகரித்துள்ளார். தற்போது அவ்வாறான திட்டங்கள் எதுவும் இல்லை எனவும், எரிபொருளின் விலை 10 - 15 ரூபா...

மேற்குலக நாடுகள் ரஷ்யாவை துண்டாட திட்டம் – சர்ச்சையை கிளப்பும் புடின்

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் உக்ரைனுக்கு மேற்குலக நாடுகள் பெருந்தொகை ஆயுதங்களை வழங்கி தமது ஆதரவினை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் மேற்கு நாடுகள் ரஷ்யாவை துண்டாட திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி புடின் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே...
Loading posts...

All posts loaded

No more posts