Ad Widget

யாழிலுள்ள அரச காணிகளை தமக்கு பகிர்ந்தளிக்குமாறு காணியற்றோர் மக்கள் இயக்கம் கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் காணியற்று வாழும் தமக்கு காணி வழங்க வேண்டும் என கோரி வடமாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் யாழ்.மாவட்ட செயலர் ஆகியோரிடம் காணி அற்றோர் மக்கள் இயக்கம் மகஜர் கையளித்துள்ளது. நீண்ட காலமாக தாம் வாடகை வீடுகளில் வசித்து வருவதனால் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதுடன் , தற்போது பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளமையால் ,...

ஆட்கொணர்வு மனு மீதான கட்டளை இராணுவத்துக்கு எதிராக உள்ளமை பெரிய வெற்றி – எஸ். இரட்ணவேல்

ஆட்கொணாவு மனு மீதான கட்டளை இராணுவத்தினருக்கு எதிரானதாகவுள்ளமை மிகப்பெரிய வெற்றி எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை ஆஜர்ப்படுத்தவும் அல்லது காரணம் கூறவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி எஸ். இரட்ணவேல் தெரிவித்தார். வவுனியா மேல் நீதிமன்றத்தில் பொன்னம்பலம் கந்தசாமி (கந்தம்மான்), சின்னத்துரை சசிதரன் (எழிலன்), உருத்திரமூர்த்தி கிருஸ்ணகுமார் (கெலம்பஸ்) ஆகியோர் தொடர்பாக ஆட்கொணர்வு மனு மீதான...
Ad Widget

பொருளாதார நெருக்கடியானது பால்நிலைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் – ஓவிய கண்காட்சி

இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது பால்நிலைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் என்னும் தலைப்பிலான ஓவியக் கண்காட்சி யாழ். பல்கலைக் கழக நூலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) காலை ஆரம்பமாகியது. இந்த ஓவியக் கண்காட்சி எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையம், ஐக்கிய நாடுகள்...

குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி கட்டிமுடிக்கப்பட்டுள்ள விகாரை !

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை தொடர்ச்சியாக புறந்தள்ளி அமைக்கப்பட்டு வந்த பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப் பெற்றுள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இங்கு மேற்கொள்ளப்படும் பௌத்த கட்டுமானங்களை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது எனவும்...

ஜனாதிபதி பைத்தியம் பிடித்தவர் போல் நடந்து கொள்கிறார்

ஜனாதிபதி பைத்தியக்காரத்தனமாக பேசுகிறார் எனவும்,தேர்தலே இல்லை என அறிவித்து பைத்தியம் பிடித்தவர் போல் நடந்து கொள்கிறார் எனவும்,தேர்தல் இல்லை என்றால்,இல்லாத தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி வேட்புமனு தாக்கல் செய்தது எவ்வாறு என தாம் கேள்வி எழுப்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். வேட்புமனு தாக்கல் செய்யும் திகதியும் அறிவிக்கப்பட்டு,தேர்தலை நடத்தும் திகதியும் தீர்மானிக்கப்பட்டதன்...

விக்கி அவரின் சம்மந்தியான வாசுதேவவுடன் இணைந்து மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுகின்றார் – சாணக்கியன்

நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவவிற்கும், சி.வி.விக்கினேஷ்வரனுக்கும் இடையில் தொடர்பு உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) அமெரிக்க பாதுகாப்பு பாதுகாப்பு அதிகாரிகளின் விஜயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார முன்வைத்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

உக்ரைன் – ரஷ்ய போருக்கான காரணத்தை முதன்முதலில் வெளியிட்ட புடின்

உக்ரைனில் ரஷ்யாவுக்கு சொந்தமான வரலாற்று சிறப்புமிக்க நிலத்தை மீட்கவே தமது இராணுவம் போராடி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பை ரஷ்யா மீண்டும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ரஷ்யாவின் ஏவுகணைகளால் உக்ரைன் அதிரும் வாய்ப்புகள் உள்ளதாக உக்ரைன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் தாக்குதலுக்கு ஆதரவாக மாஸ்கோவில் அரசால் ஏற்பாடு...

யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக டக்ளஸ்!!

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் நியமிக்கப்பட்டுள்ளார். இருவருக்குமான நியமன கடிதத்தை பிரதமர் தினேஷ் குணவர்த்தன இன்றைய தினம் (வியாழக்கிழமை) வழங்கி வைத்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவிற்கு பணம் அனுப்பியுள்ள யாழ்.இளைஞன்!

தேர்தலை நடத்த நிதியில்லை என ஜனாதிபதி நாடாளுமன்றில் கூறியுள்ள நிலையில் , தேர்தலை நடத்த தன்னால் முடிந்த நிதியுதவி என யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் காசுக்கட்டளை மூலம் 500 ரூபாய் பணத்தினை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ளார். யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர், “தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம், சிறு துளி பெருவெள்ளம்”...

மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் 2 காற்றாலை மின் நிலையங்கள் அமைக்க இந்திய அதானி குழுமத்துக்கு அனுமதி!

மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் 350 மெகாவோட் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கான அனுமதியை இலங்கை முதலீட்டு சபை நேற்று இந்திய அதானி நிறுவனத்திற்கு வழங்கியது. முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இந்தநிகழ்வில் இந்திய அதானி நிறுவனத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்....

நடைபெறாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது – ஜனாதிபதி

நடைபெறாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்று(வியாழக்கிழமை) விசேட உரையாற்றிய அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தற்போதை சூழ்நிலையில் தேர்தலொன்றை நடத்துவதற்கு நாட்டின் பொருளாதாரம் சீராக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கான நிதி இல்லையென கடந்த டிசம்பர் 14ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்ததாகவும்...

நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்தார் சஜித்! தல்செவன காணியை பெற்று தருமாறு கோரிக்கை!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் (வியாழக்கிழமை) நல்லை ஆதீன குருமுதல்வர் சோமசுந்தர ஞானதேசிக பரமாச்சார்ய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடினார். நல்லூரில் உள்ள நல்லை ஆதீனத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின் போது செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன், எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்...

யாழ். போதனா வைத்தியசாலையில் பணிப் பகிஷ்கரிப்பு!

சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் உள்ள சகல அரச மருத்துவமனைகளிலும் இன்றைய தினம் (வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. அதற்கு ஆதரவு வழங்கும் வகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் பணிப் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது. மேலதிக நேரக் கொடுப்பனவை வரையறுத்தல் தொடர்பான...

யாழ். மறைமாவட்ட ஆயரை சந்தித்தார் சஜித்!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணியளவில் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசத்தினை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமாகிய சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ள நிலையில் அவர் பல்வேறு நிகழ்சிகளிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும்...

காணிகளை கையெற்க தயக்கம் காட்டும் பொது மக்கள்!

இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்கள் கையேற்பதில் தயக்கம் காட்டுவதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் கடந்த சில வாரங்களுக்கு முதல் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காங்கேசன்துறையில் இராணுவத்தினிடமிருந்தும் கடற்படையினரிடமிருந்தும் 108 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த...

யாழ்.போதனாவில் மருத்துவ கழிவுகள் தேக்கம்?

யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் வெளியேற்றப்படாது கடந்த இரண்டு நாட்களாக தேங்கி கிடப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் தெல்லிப்பழை வைத்தியசாலையில் எரியூட்டப்பட்டு வந்த நிலையில் வைத்தியசாலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மருத்துவ கழிவுகளை எரிப்பதற்கான செயற்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே யாழ்.வைத்தியசாலை நிர்வாகத்தினரால் யாழ் நகரை அண்டிய கோம்பயன்...

பொது மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் தொடர்பில் ஆளுநர் அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு

வட மாகாணத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடி நீர் பாதுகாப்பானதா என உறுதிப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண மக்கள் அருந்தும் நீர் பாதுகாப்பு தொடர்பில் ஆளுநர் என்ற வகையில் உரிய பொறுப்பை நிறைவேற்றுவேன். வட மாகாண நீர் வழங்கல் வடிகால் அமைப்புச்...

ரஷ்யாவை தாக்க திட்டமிடவில்லை! அமெரிக்கா தெரிவிப்பு

போலந்து விஜயத்தின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறுவது போல் ரஷ்யாவை தாக்க மேற்கத்திய நாடுகள் திட்டமிடவில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். எனவே ரஷ்ய அதிபரின் கருத்து அடிப்படை ஆதாரமற்றது என்று அமெரிக்க அதிபர் குறிப்பிட்டுள்ளார். மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை தாக்க திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் கூறிய கருத்திற்கு அமெரிக்க...

இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 50 பேர் வைத்தியாசலையில்!!

சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கண்களில் பாதிப்புக்களை எதிர்கொண்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். சாவகச்சேரி கைதடி பகுதியில் உள்ள சனசமூக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியிலையே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற இசை நிகழ்சியில் லேசர் கதிரொளிகள், புகைகள் (ஸ்மோக்) போன்றவை...

யாழ் போதனாவில் தண்ணீரில் கிருமித்தொற்று!! 400 பேர் வரை பாதிப்பு!!

யாழ்.போதனா வைத்தியசாலையின் தண்ணீரில் கிருமித்தொற்று இதனால் சுமார் 400 பேர்வரை பாதிப்படைந்துள்ளனர். குறித்த சம்பவம் சீர்செய்யப்பட்டுள்ளது என யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா தெரிவித்தார். யாழ் போதனா வைத்தியசாலையில் இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் போதனா வைத்தியசாலையில் தேங்கும் கழிவு நீர்...
Loading posts...

All posts loaded

No more posts