Ad Widget

ஜனாதிபதியை நோில் சந்திக்க அனுமதிகோரி வடமாகாண கடற்றொழிலாளர்கள் கடிதம்!

இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு தொிவித்து வடமாகாண கடற்றொழிலாளர்களால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்று அனுப்படவுள்ளது.

இதன்போது நேரில் சந்தித்து பேச வாய்ப்புதரக்கோரியும் குறித்த கடிதத்தில் வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் வடபகுதி கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

ஐனாதிபதியிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காது விட்டால் வடபகுதி கடற்றொழிலாளர்கள் அனைவரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடவும் தீர்மானிக்கப்பட்டது.

நாடாளுமன்றில் பேசிய வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி வழங்கும் முறைமையை பரிசீலிப்பதாக தெரிவித்தமை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஊடக சந்திப்பில் வடபகுதி கடற்றொழிலாளர் பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டது.

புனித ஸ்தலமான கச்சதீவில் கடற்றொழிலாளர்கள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் இடம்பெறும் விடயத்துக்கு பயன்படுத்த அனுமதிக்க கூடாது என யாழ் மறை மாவட்ட ஆயரிடம் ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

Related Posts