Ad Widget

சுனாமிகளை உருவாக்கும் ஆயுதத்தை தயார் செய்த ரஷ்யா! பேரழிவை ஏற்படுத்துமென எச்சரிக்கை

கதிரியக்கத்தால் சுனாமிகளை ஏற்படுத்தும் பேரழிவைத் தரக்கூடிய ஆபத்தான ஆயுதம் ஒன்றை ரஷ்ய விஞ்ஞானிகள் குழு தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய விஞ்ஞானிகளால் Poseidon என அழைக்கப்படும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலானது பேரழிவை ஏற்படுத்தும் கதிரியக்க சுனாமிகளை உருவாக்கும் திறன் கொண்டது எனவும், விளாடிமிர் புடின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட மிகவும் மனிதாபிமானமற்ற பயங்கரமான ஆயுதம் இதுவெனவும் கூறுகின்றனர்....

யாழ். கல்வியங்காட்டில் வர்த்தகர் மீது வாள் வெட்டு

கல்வியங்காடு செங்குந்தா பொதுச்சந்தை கட்டத்தொகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தின் மீது நேற்றிரவு (18) இனந்தெரியாத வாள் வெட்டு கும்பலால் தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது. முகமூடி அணிந்து மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத வாள்வெட்டு கும்பல் வெற்று பியர் போத்தல்கள் மற்றும் கட்டையால் தாக்குதல் நடாத்தியதோடு வர்த்தக நிலைய உரிமையாளர் மீது சரிமாரியாக வாள் வீச்சு தாக்குதல்...
Ad Widget

டக்ளஸிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல்!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் கடற்றொழில் சார் அமைப்புக்கள் இரண்டின் பிரதிநிதிகளினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் கடல் வளத்திற்கும் கடற்றொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும், இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு போதுமான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றச்சாட்டியுள்ள வழக்கு தொடுநர் தரப்பு, சம்மந்தப்பட்ட சட்டங்களை...

வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து யாழ். பல்கலைகழகத்தில் போராட்டம்!!

வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்று (வியாழக்கிழமை) யாழ்.பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு முன்பாக கூடிய மாணவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதன்போது ஜனநாயக ரீதியான போராட்டங்களை தடுக்கும் வகையில் இடம்பெறும் கைதுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்த மாணவர்கள் தொடர்ச்சியாக தாங்கள் இதற்கெதிராக குரல் கொடுப்போம் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய 2022 பாடசாலை கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடைந்து பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை க.பொ.த உயர்தர பரீட்சைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகி அடுத்த மாதம் பெப்ரவரி 17ஆம்...

யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவுக்கு சபையில் கோரம் இல்லாதமையால் சபை அமர்வு ஒத்திவைப்பு!

யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவுக்கு சபையில் கோரம் இல்லாதமையால் சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான சமை அமர்வு இன்றைய தினம்(வியாழக்கிழமை) வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ்.மாநகர சபையில் சபையை கூட்டுவதற்கான கோரமின்மையால் மாநகர முதல்வர் தெரிவு ஒத்திவைக்கப்பட்டது. மாநகர முதல்வர் தெரிவையோட்டி...

குறைக்கப்பட்டது 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகள்!

12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளை இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இதற்கமைய, பெரிய வெங்காயம் 1 கிலோ – 05 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 180 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளை சீனி 1 கிலோ – 02 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 216 ரூபாவாக...

வேலன் சுவாமி பிணையில் செல்ல அனுமதி!

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமி பிணையில் செல்ல அனுமதி வழங்கி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டுள்ளது. வேலன் சுவாமிகளுக்கு சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன், சட்டதரணி சுகாஸ் ,சட்டத்தரணி மணிவண்ணன்,சட்டத்தரணி சிவஸ்கந்த சிறி ஆகியோர் மன்றில் முன்னிலையாகினர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி...

போரில் வெல்வது உறுதி- புடின் பகிரங்க அறிவிப்பு

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரில் ரஷ்யா வெல்வது உறுதி என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் இன்னும் சில வாரங்களில் ஓர் ஆண்டை நெருங்கவுள்ளது. இந்த நிலையில், . உக்ரைன் பகுதிகளைக் கைப்பற்ற ரஷ்யா தீவிரமாக போரிட்டு வரும் நிலையில் ரஷ்யா தனது...

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன்கருதி 14 நாட்களுக்கு மின் வெட்டு இல்லை!

இம்மாதம் ஆரம்பமாக உள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன்கருதி, பரீட்சை நடைபெறும் 14 நாட்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி நாடு பூராகவும் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவத்தார். அரசாங்க...

யாழ்.மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கடமைகளை பொறுப்பேற்றார் அம்பலவாணர் சிவபாலசுந்தரன்!

யாழ்.மாவட்ட புதிய அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்று(புதன்கிழமை) காலை 10.20 மணியளவில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரனை நியமனம் செய்வதற்கான அனுமதியை நேற்று முன்தினம் அமைச்சரவை வழங்கியது. இவருக்கான நியனக் கடிதங்கள் நேற்று பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் தினேஷ் குணவர்தனவால் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று காலை சர்வமதத்...

தமிழரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்படுகின்றார் ஆனோல்ட்

யாழ்.மாநகர சபையில் நாளை(வியாழக்கிழமை) நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக இமானுவேல் ஆனோல்ட்டினை களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான தெரிவு...

உள்ளூராட்சி தேர்தல் : இன்று முதல் வேட்புமனு

இந்த ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (18) ஆரம்பமாகவுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான கட்டுப்பணம் செலுத்தும் பணிகள் கடந்த 4ஆம் திகதி ஆரம்பமான நிலையில்...

பல இலட்சங்களை லஞ்சமாக வாங்க முயற்சித்த தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கைது!

யாழ்.நகரை அண்டிய பகுதியில் இடம்பெற்ற காணி மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரிடம் லஞ்சம் வாங்க முயற்சித்த குற்றச்சாட்டில் பொலிஸ் சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளினால் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார் என்று...

அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதுதான் தற்போது பாரிய சவாலாக காணப்படுகிறது – ஜனாதிபதி

அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதுதான் தற்போது பாரிய சவாலாக காணப்படுகிறது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது உரையாற்றிய அவர், “நாட்டின் பொருளாதாரம் கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில், கட்டம் கட்டமாக தற்போது முன்னேற்றமடைந்துக் கொண்டு வருகின்றன. கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இந்தியாவுடனும்...

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை!!

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அத்துடன், QR முறைமையை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பலவற்றின் சேவைகளை இடைநிறுத்துவதற்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன களஞ்சியசாலை அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது,...

யுவதியிடம் மன்னிப்பு கோரிய இலங்கை போக்குவரத்துசபை பேருந்து சாரதி!!

யுவதியொருவரை அநாகரிகமாக திட்டிய இலங்கை போக்குவரத்துசபை பேருந்து சாரதி மன்னிப்பு கோரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை சாலையை சேர்ந்த பேருந்து சாரதியொருவரே இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பருத்தித்துறை - யாழ்ப்பாணம் மார்க்கத்தில் பயணிக்கும் யுவதியொருவர் பருவகாலசீட்டு பெற்று பயணம் செய்து வந்துள்ளார். ஆவரங்காலிற்கு அண்மித்த பகுதியில் அவர் பேருந்தில் ஏறுவது...

நெடுந்தீவுக்கான கடற்பயணத்திற்கு கட்டணம் அறிவிட தீர்மானம்!!

நெடுந்தீவுக்கு இதுவரை காலமும் இலவசமாக சென்ற கடற்பயணத்திற்கு எதிர்காலத்தில் பணம் அறவிட நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். படகு திருத்தத்திற்கு தேவையான பணம் கிடைக்காமை இதற்கான காரணமாகும். சேவையில் ஈடுபடும் இரண்டு படகுகள் தற்போது சீர்குலைந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால் மக்களுக்கு சரியான முறையில் சேவையை வழங்க முடியாதுள்ளது. இதற்கு...

உக்ரைன் போரில் அதிக வீரர்களை இழந்த ரஷியா! அதிர வைக்கும் புள்ளிவிவரம்

உக்ரைன் மீது ரஷியா தனது இராணுவ நடவடிக்கையை தொடங்கி கிட்டத்தட்ட 11 மதங்கள் ஆகின்றன. ரஷியாவின் தாக்குதல்களுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பல உயிர்கள் பலியாகி உள்ளன. ஏராளமானோர் உயிருக்கு பயந்து வீடுகளை...

யாழ். பல்கலைக்கழகத்தில் பொங்குதமிழ்!!

யாழ்.பல்கலைக்கழகத்தின் பொங்கு தமிழ் பிரகடணத்தின் 22 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று (17) செவ்வாய்க்கிழமை நினைவு கூரப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், மாணவர்கள், இணைந்து பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவு தூபி முன் கூடி பொங்குதமிழ் பிரகடன நிறைவு நாளை நினைவு கூர்ந்திருந்தனர். இதன்போது பொங்குதமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டது. இவ் எழுச்சி...
Loading posts...

All posts loaded

No more posts