Ad Widget

வேலன் சுவாமி பிணையில் செல்ல அனுமதி!

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமி பிணையில் செல்ல அனுமதி வழங்கி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலன் சுவாமிகளுக்கு சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன், சட்டதரணி சுகாஸ் ,சட்டத்தரணி மணிவண்ணன்,சட்டத்தரணி சிவஸ்கந்த சிறி ஆகியோர் மன்றில் முன்னிலையாகினர்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்த வேளை, எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் வேலன் சுவாமிகளை யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் வேலன் சுவாமி முற்ப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Posts