Ad Widget

நெடுந்தீவுக்கான கடற்பயணத்திற்கு கட்டணம் அறிவிட தீர்மானம்!!

நெடுந்தீவுக்கு இதுவரை காலமும் இலவசமாக சென்ற கடற்பயணத்திற்கு எதிர்காலத்தில் பணம் அறவிட நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

படகு திருத்தத்திற்கு தேவையான பணம் கிடைக்காமை இதற்கான காரணமாகும். சேவையில் ஈடுபடும் இரண்டு படகுகள் தற்போது சீர்குலைந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால் மக்களுக்கு சரியான முறையில் சேவையை வழங்க முடியாதுள்ளது.

இதற்கு முன்னர் இந்த படகுச் சேவையின் மூலம் வெளிநாட்டவர்களுக்கும் இலவச பயண வசதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts