Ad Widget

வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து யாழ். பல்கலைகழகத்தில் போராட்டம்!!

வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இன்று (வியாழக்கிழமை) யாழ்.பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு முன்பாக கூடிய மாணவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது ஜனநாயக ரீதியான போராட்டங்களை தடுக்கும் வகையில் இடம்பெறும் கைதுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்த மாணவர்கள் தொடர்ச்சியாக தாங்கள் இதற்கெதிராக குரல் கொடுப்போம் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

Related Posts