Ad Widget

யாழ். கல்வியங்காட்டில் வர்த்தகர் மீது வாள் வெட்டு

கல்வியங்காடு செங்குந்தா பொதுச்சந்தை கட்டத்தொகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தின் மீது நேற்றிரவு (18) இனந்தெரியாத வாள் வெட்டு கும்பலால் தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது.

முகமூடி அணிந்து மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத வாள்வெட்டு கும்பல் வெற்று பியர் போத்தல்கள் மற்றும் கட்டையால் தாக்குதல் நடாத்தியதோடு வர்த்தக நிலைய உரிமையாளர் மீது சரிமாரியாக வாள் வீச்சு தாக்குதல் நடாத்தி ரூபா ஐந்து இலட்சம் பணத்தையும் கொள்ளை அடித்து சென்றிருந்தாக கோப்பாய் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் வர்த்தகரின் உறவினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த வாள் வெட்டு தாக்குதல்களின் போது கையில் வெட்டு காயத்துடன் தப்பித்துக்கொண்ட வர்த்தக உரிமையாளர் யாழ். போதான வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் மற்றும் குற்ற தடவியல் பொலிஸார் நேற்றைய வர்த்தகர் மீதான வாள் வெட்டு தாக்குதல் சம்பவத்தின் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Posts