- Wednesday
- May 8th, 2024
367 பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று(செவ்வாய்கிழமை) முதல் மறு அறிவித்தல் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, சொக்கலேட், வாசனை திரவியங்கள், ஆண்கள் மற்றும் பெண்களின் உடைகள், உள்ளாடைகள், கைக்கடிகாரங்கள், மின் கேத்தல்கள், உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் காணாமல் போன அடையாள அட்டைகளுக்காக பொலிஸ் அறிக்கைகளை பெறுவது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உத்தியோகபூர்வமற்ற முறையில் பொலிஸ் அறிக்கைகளை வழங்குவது தொடர்பில் ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பொலிஸ் நிலையப் பரிசோதகர் நாயகத்திற்கு விடுத்துள்ள அறிவித்தலுக்கமைய, இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காணாமல் போன அடையாள அட்டைகள் தொடர்பில் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க...
ரஷ்யாவிற்கு எதிரான போரில் 9 ஆயிரம் உக்ரைனிய வீரர்கள் உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். தலைநகர் கீவ்ல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இராணுவத் தளபதி, போர்க்களத்தில் உயிரிழந்த 9000 வீரர்களின் குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போரில் 3 ஆயிரம் வீரர்கள் இறந்ததாக கடந்த ஏப்ரல்...
வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரு மில்லியன் ரூபாவிற்கு மூன்று மாம்பழங்களும், ஒரு மாலையும் ஏலம் போன நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா மரக்காரம்பளை வீதி கணேசபுரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலய அலங்கார திருவிழாவின் ஆறாம்நாள் திருவிழாவின் போது இறைவனுக்கு படைக்கப்பட்ட மூன்று மாம்பழங்களும் , ஒரு மாலையும் ஏலத்தில் விடப்பட்ட போது கடும் போட்டிகளுக்கு...
முல்லைத்தீவு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாமிற்கு நிரந்தரமாக காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் திரண்டு அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 617 ஏக்கர் நிலம் உள்ளடங்குகின்ற குறித்த கடற்படை முகாமில் பெரும்பாலான பகுதி பொதுமக்களுக்கு சொந்தமான நிலங்களாகும்.இதில் ஏற்கனவே கடந்த சில வருடங்களாக நில அளவை செய்து...
லங்கா சதொச ஊடாக சில அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லங்கா சதொச நிறுவனத்தின் தலைவரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று(செவ்வாய்கிழமை) நள்ளிரவு முதல் சீனி, அரிசி, பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய், உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளைப்பூடு ஆகிய பொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி சங்காபிஷேகமும், சமயத் தலைவர்களான ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர், சேர். பொன். இராமநாதன் ஆகியோரின் உருவச் சிலைகள் திறப்பும் இன்று காலை இடம்பெற்றது. ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி சங்காபிஷேகம் இன்று காலை 6.00 மணியளவில் ஆரம்பமாகியது. அதனைத்...
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதம தொற்று நோய் விசேட நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதுவரை தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்கள், தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதன் ஊடாக கொரோனா பரலை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று காரணமாக...
நல்லூர் திருவிழாவின்போது யாழ் மாநகர சபையின் விசேட அணியொன்று வீதி ஒழுங்குகளை கண்காணிக்கும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். நீல உடை அணிந்த மாநகரசபை ஊழியர்கள் மீண்டும் பணியில் ஈடுபடுவார்கள் என வி.மணிவண்ணன் தெரிவித்தார். நல்லூர் மஹோற்சவம் தொடர்பான ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே யாழ் மாநகர முதல்வர் இதனை தெரிவித்தார்....
நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் அதிசத்தத்தை எழுப்பும் கோர்ன்களை ஊதி சென்ற இளைஞர் குழுவொன்றை காவல்துறையினர் பிடித்து, கோர்ன்களை பறிமுதல் செய்து, கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர். நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஆலய திருவிழாவிற்கு வருகை தருவோருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தம் விதமாக சிலர் நடந்து கொள்வது குறித்து பல தரப்பினரும் தமது...
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவின் பனிக்கன்குளம்,கிழவன்குளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றனர். இவர்களுக்கும், பாடசாலைக்கும் இடையில் சுமார் பத்து கிலோமீற்றர் இடைவெளி காணப்படுகிறது இவர்கள் பாடசாலைக்கு செல்ல வேண்டியுள்ள ஏ -9 வீதியூடாக பல...
இலங்கையில் இருந்து கடந்த இரு நாட்களில் தமிழகம் சென்று தஞ்சம் கோரியுள்ள 16 பேரில் ஒருவர் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் இருந்து நேற்றுமுன்தினமும் நேற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலையை சேர்ந்த 06 குடும்பங்கள் தமிழகம் தனுஷ்கோடி பகுதியை சென்றடைந்துள்ளனர். குறித்த 06 குடும்பங்களை சேர்ந்த...
அரச நிறுவனங்களுக்கு அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்கும் சுற்று நிருபத்தை நாளை வரை மாத்திரம் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்று நிருபம் கடந்த ஜுன் மாதம் 17ஆம் திகதி அரச நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டது. அதற்கமைய, நாளை மறுநாள் முதல் அனைத்து ஊழியர்களும் வரவழைக்கப்பட்டு அரச நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும் என பொதுநிர்வாக,...
அனைத்து ரஷ்ய மக்களுக்கும் விசா மறுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கவில்லை என்று தெரிவித்துள்ளன. அனைத்து ரஷ்யர்களுக்கும் விசா மறுக்கப்பட வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy இந்த மாத தொடக்கத்தில் தி வாஷிங்டன் போஸ்ட்டிடம் தெரிவித்திருந்தார். "எல்லைகளை மூடுவதே மிக முக்கியமான தடைகளாகும். ஏனெனில் ரஷ்யர்கள் வேறொருவரின்...
நாடளாவிய ரீதியில் அனைத்து பல்கலைக்கழகங்களையும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைகுழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைகுழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் இயல்பு நிலை காரணமாக இந்த தீர்மானம்...
சிறுபோக அறுவடைக்கு டீசல் பெற்றுத்தருமாறு கிளிநொச்சியில் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து மகஜர் கையளிக்க சென்ற விவசாயிகள், இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டு, அறுவடை இடம்பெற்று வரும் நிலையில், அறுவடைக்கு தேவையான டீசலை விரைவாக பெற்றுத்தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்....
இலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையை சேர்ந்த மேலும் 08 பேர் கடல் வழியாக தமிழகம் சென்று தஞ்சமடைந்துள்ளனர். 3 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 3 சிறுவர்களாக மூன்று குடும்பங்களை சேர்ந்த 08 பேரே படகொன்றில் தமிழகம் தனுஷ்கோடி பகுதியை சென்றடைந்துள்ளனர். அவர்களை மீட்ட கடலோர பாதுகாப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்....
மதுபோதையில் நின்று பணிசெய்த துப்புரவு பணியாளருக்கு எதிராக நடவடிக்கை எடுத்த யாழ் மாநகர சபை உறுப்பினர் மற்றும் மேற்பார்வையாளர் மீது தாக்குதல் மற்றும் அச்சுறுத்தும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, நல்லூர் ஆலய உற்சவம் இடம்பெற்றுவரும் நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை துப்பரவு பணியில் ஈடுபட்ட ஊழியர் மதுபோதையில் நிற்பதை அவதானித்த...
நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் சுமார் 9 அரச உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு பாடுபட வேண்டும். அவ்வாறு பாடுபட முடியாது எனக் கூறுபவர்கள் வீட்டுக்குச் செல்லலாம். எந்தவொரு வேலைகளிலும் ஈடுபடாதவர்களுக்கு சம்பளத்தை வழங்கிக் கொண்டிருக்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அநுராதபுர மாவட்ட அபிவிருத்தி சபை...
பயங்கரவாதம் எனக்கூறி மூன்று மாதங்களுக்கு பல்கலைக்கழக மாணவர் தலைவர்களை தடுப்பிலேயே வைத்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட மூன்று பேர் 72 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பாக அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு பதில் சொல்ல வேண்டி...
Loading posts...
All posts loaded
No more posts