- Saturday
- April 27th, 2024
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட சிறார்கள் உள்ளிட்ட 17 பேர் இன்று திங்கட்கிழமை பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் சிலாபம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் இருவர் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் குழுவொன்று நடமாடுவதாக பருத்தித்துறை...
16 இலட்சம் அரச ஊழியர்களில் சுமார் 10 இலட்சம் பேர் வினைத்திறனான சேவையை செய்வதில்லை என அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அரச சேவையை அரச உத்தியோகத்தர்களாலேயே விமர்சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், அரசியல்வாதிகள் பெரிய தியாகம் செய்ய...
பலாலி, அன்ரனிபுரம் பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை சுமார் 100 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலாலி அன்ரனிபுரம் பகுதியில் அதிகாலை இரண்டு மணியளவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பயணித்த வேன் வாகனத்தை கடற்படையினர் சோதனையிட்ட போது, அதனுள் பெருந்தொகையான கஞ்சா காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து வாகனத்தை கைப்பற்றிய கடற்படையினர், வாகனத்தில் இருந்த...
சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக ஓகஸ்ட் 28 இலிருந்து செப்டெம்பர் 07 வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கமைய, இன்றையதினம் (29) மணியங்குளம், அறிவியல் நகர், வலைஞர் மடம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, ஊவா,...
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவையை ஆரம்பிக்க எயார் இந்தியா நிறுவனம் தீர்மானித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய எயார் இந்தியா நிறுவனம் அடுத்த மாதம் முதல் வாரத்திற்கு இரண்டு முறை பலாலிக்கு விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் எலிக்காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் குறித்த சிப்பாய் கடந்த 22ஆம் திகதி எலிக்காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் , முன்னதாக பலாலி இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர்...
இலங்கையில் பெற்றோலிய வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபடுவதற்கு 24 வெளிநாட்டு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா, அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, மலேசியா, நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்களே இவ்வாறு இலங்கையில் பெற்றோலிய வர்த்தகத்தில் ஈடுபட விருப்பம்...
நாடளாவிய ரீதியில் 500 தொடக்கம் 1000 மெட்ரிக் தொன் வரையான டீசல் மற்றும் பெட்ரோலை மேலதிகமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தற்போது விநியோகிக்கப்படும் 4000 மெட்ரிக் தொன்னுக்கு மேலதிகமாக டீசலை விநியோகிக்கவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் 3000 மெட்ரிக் தொன் பெட்ரோல் விநியோகிக்கப்படும் அதேவேளை, அதற்கு மேலதிகமாக 500 தொடக்கம் 1000...
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கோண்டாவில் புகையிரத பகுதியில் குறித்த நபர் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் 27 வயதுடைய சந்தேக நபரை கைது செய்துள்ளனர். சந்தேக...
வெளிநாட்டு பணியாளர்கள் ஈட்டும் வருமானத்தை டொலரில் இலங்கைக்கு அனுப்பாமல் வெளிநாடுகளில் உள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. மத்திய வங்கியும் பொலிஸாரும் இணைந்து நடத்திய விசாரணையில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, உண்டியல், ஹவாலா போன்ற முறைகளில் வெளிநாட்டுப் பணத்தைப் பரிமாறிக்கொண்ட வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்...
ரஷ்யாவின் ஆயுதப் படைகளை விரிவுபடுத்தும் திட்டம் உக்ரைன் போரில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அந்நாட்டின் ஆயுதப் படைகளின் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 1.15 மில்லியனுக்கும் அதிகமாக உயர்த்துவதற்கான ஆணையில் அண்மையில் கையெழுத்திட்டார். எனினும் இந்த நடவடிக்கை ரஷ்யாவின் போர் சக்தியை அதிகரிக்க வாய்ப்பில்லை...
முத்துராஜவெல பெற்றோலிய முனையத்திலிருந்து பெற்றோல், டீசல் விநியோகங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின், தனியார் தாங்கிகள் உரிமையாளர் சங்கத்தின் இணை செயலாளர் டீ.வீ சாந்த சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். எனவே நாளை(26) முதல் பேருந்து சேவையை 50 சதவீதமாக குறைக்க வேண்டும் எனவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நிர்வாணமாக்கப்பட்ட போராளிகளின் படங்கள் எம்மூடாகவே வெளியே போனது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற புகைப்படப்பிடிப்பாளர் தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, அவர் மேலும் கூறுகையில், ‘புகைப்பட பிடிப்பு என்பது சாதாரண விடயமல்ல. இங்கு ஒரு இனப்படுகொலை நடந்தது என்பதற்கு புகைப்படங்களே சான்றுகளாகின....
நாட்டில் 91 மிகவும் அவசியமான மருந்துபொருட்களின் கையிருப்பு முற்றாக தீர்ந்துபோகும் ஆபத்து உருவாகியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் மத்திய மருத்துவ களஞ்சியத்தில் கடந்த வாரம் இந்த நிலை காணப்பட்டதாக அரசாங்க மருத்து அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால்...
வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தான மகோற்சவத்தின் இரதோற்சவம் இன்று காலை இடம்பெற்றது. வசந்த மண்டவத்தில் விஷேட அபிஷேங்கள், ஆராதனைகள் இடம்பெற்று, பீடத்தில் வீற்று உள்வீதியுடாக வலம் வந்து ஆறுமுகப்பெருமான், வள்ளி, தெய்வானை, சமேதராக தேரில்வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இவ்வாலயத்தில் மஹோற்சவம் கடந்த 02.08.2022 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 26.08.2022 அன்று...
உக்ரைன் மீது ரஷ்யா இன்று தாக்குதல் நடத்தினால் அதற்கு பயங்கரமாக பதிலடி கொடுக்கப்படும் என உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் இன்றைய தினம் தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. இந்த நிலையிலேயே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜெலன்ஸ்கி மேலும் தெரிவிக்கையில், இன்று உக்ரைன் தனது சுதந்திர தினத்தைக்...
யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் சந்தைக்கு தேங்காய் கொள்வனவு செய்ய பேருந்தில்சென்ற மூதாட்டி திடீர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த செபநாயகம் செல்வமலர் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த மூதாட்டி 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு பேருந்துக்குள் மயங்கி சரிந்துள்ளார்....
மதுபோதையில் பயணிகள் பேருந்தை செலுத்தி சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் காரைநகர் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை செலுத்திய சாரதி மது போதையில் காணப்பட்டுள்ளார். இது தொடர்பில் மானிப்பாய்...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தும் மூத்த மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்புத்தடை விதித்து வருகின்றது. கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் 19 கலைப்பீட மாணவர்கள் உள்ளிட்ட 21 பேருக்கு வகுப்பத்தடை விதிக்கப்பட்டுள்ளது. வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் , தடைக்காலத்தில், பல்கலைக்கழக வளாகத்தினுள்ளோ , மாணவர் விடுதிக்குள்ளோ உட்பிரவேசிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது....
இலங்கையில் கொரோனா பரவல் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சமூகத்தில் அடிமட்டத்திலிருந்து அதிகரித்துள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்தக் கொரோனா நிலைமை மற்றும் காய்ச்சல் பாதிப்புக்களை சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்கம் கருத்தில்கொள்ளவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தடுப்பூசி திட்டத்தால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியால் கொரோனா நோய்...
Loading posts...
All posts loaded
No more posts