Ad Widget

செப்டம்பர் 21 க்குப் பின்னர் ஊரடங்கு நீக்கப்படுமா? – அறிக்கை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

செப்டம்பர் 21 க்குப் பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்க வேண்டுமானால், எந்த வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது குறித்த அறிக்கை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டத்திலேயே ஜனாதிபதி அதிகாரிகளுக்கு இந்த அறிவுறுத்தலை விடுத்தார் என இராணுவத் தளபதி...

யாழ்ப்பாணத்தில் 1 வயது குழந்தை உயிரிழப்பு: கொரோனா வைரஸ் தொற்று உறுதி

யாழ்ப்பாணம்- தெல்லிப்பழை வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 1 வயதான குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் குறித்த குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. தெல்லிப்பழை பொியபுலம் பகுதியை சேர்ந்த 1 வயதான குழந்தை இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Ad Widget

யாழ்ப்பாணத்தில் மேலும் 6 பேர் கோவிட்-19 நோயினால் சாவு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 6 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுழிபுரத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரும் சாவகச்சேரியைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரும் காரைநகரைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரும் யாழ்ப்பாணம் வேம்படியைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண்...

“ஊரடங்கு உத்தரவை நீக்கினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்” – நாளைய கூட்டத்தில் இறுதித் தீர்மானம்

நாட்டில் கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னரும் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி இல்லை என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “கடந்த காலங்களில் இறந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் தடுப்பூசி போடப்படாத நபர்களாகும்.மேலும் அதிகமான தனிநபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதால், உயிரிழந்தவர்களில் தடுப்பூசி போடப்பட்டவர்கள் அதிகமாக இருப்பதையும் சேர்த்தனர். எனினும் எதிர்காலத்தில் வைரஸ் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கிறோம். வெளிநாடுகளுக்கு...

தரங்கள் 7-13இல் பயிலும் மாணவர்களுக்கு விரைவில் கோவிட்-19 தடுப்பூசி – பாடசாலைகளும் மீண்டும் திறக்கப்படும்

12-18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு விரைவில் கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கு கவனம் செலுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர், கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கோவிட்-19 நோய்த்தொற்றுக் காரணமாக, பாடசாலைகள் அவ்வப்போது சுமார் ஒன்றரை வருடங்கள் மூடப்பட வேண்டியிருந்தது. அதனால் மாணவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போட ஆரம்பிக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் கூறினார். இன்று (09) சுகாதார...

உடுப்பிட்டியில் இரு தரப்பினருக்கு இடையில் மோதல் – இராணுவப் பாதுகாப்பு

உடுப்பிட்டியில் இரண்டு பகுதியினருக்கு இடையே இடம்பெற்று வந்த மோதல் ஊர்ப் பிரச்சினையாக மாறியதை அடுத்து பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டி இலகடி மற்றும் வன்னிச்சி அம்மன் கோயில் வேலிந்ந தோட்டம் பகுதியைச் சேர்ந்த இருதரப்பினர் இடையே இடம்பெற்று வந்த மோதல் கடந்த சில நாட்களாக ஊர்ப் பிரச்சினையாக மாறியுள்ளது. இந்த மோதலில்...

மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி !

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுது. இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றை நேற்று அனுப்பிவைத்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 கீழ் 1 தீர்மானத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்றும் எனவே...

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு விரைவில் தீர்வு – யாழில் நாமல்!

தெற்கில் தெய்வேந்திர முனையிலிருந்து வடக்கில் பருத்தித்துறை முனை வரை அரசாங்கத்தினால் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அத்தோடு, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார். யாழிற்கு இன்றைய தினம் (வியாழக்கிழமை) விஜயம் செய்துள்ள அவர், அபிவிருத்தி...

623 பொருட்களுக்கு நூற்றுக்கு 100% உத்தரவாத தொகை – மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு

அந்நிய செலாவணி விகிதத்தைப் பாதுகாக்கும் முகமாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு நூறுவீத உத்தரவாத தொகையை செலுத்த வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கைத்தொலைபேசி, தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள், மின்விசிறிகள், சலவை இயந்திரங்கள், கடிகாரங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும். அத்தோடு பானங்கள், பழங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள், வாசனை திரவியங்கள், பியர்,...

“முடிந்தால் கர்ப்பத்தை ஒரு வருடம் தாமதப்படுத்துங்கள்” – பெண்கள் மருத்துவ வல்லுநர் வலியுறுத்து

கோவிட்-19 வைரஸின் டெல்டா திரிபு பரவுவதால் பெண்கள் முடிந்தால் ஒரு வருடத்திற்கு கர்ப்பத்தை தாமதப்படுத்துமாறு சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பெண்கள் மருத்துவ வல்லுநர் ஹர்ஷா அத்தப்பத்து வலியுறுத்தினார். இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். கோவிட்-19 டெல்டா திரிபு பரவுவதால் தாய் மற்றும் சேயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அவர்...

யாழ்.பல்கலை. பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு! நிகழ்நிலையில் நடத்தவும் ஆராய்வு!!

எதிர்வரும் 16,17. மற்றும் 18 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்று நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அடுத்தமாதம் 7,8,9 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஊடகப்பிரிவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; யாழ்ப்பாணம் பல்கலைக்கழக...

தமிழர்களை அடக்கிய சட்டம் இன்று சிங்களவர்களை அடக்க பயன்படுவதாக கஜேந்திரன் குற்றச்சாட்டு

தமிழரின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக அன்று கொண்டுவரப்பட்ட அவசரகால சட்டம் தற்போது சிங்களவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும்போதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். சிங்கள காலனித்துவ ஆதிக்க ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஜனநாயகம் மற்றும்...

முன்னாள் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான கடிதம் – சி.வி.கே. விளக்கம்

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான கடிதம் சதித்திட்டம் ஊடாக என்னிடம் வலிந்து திணிக்கப்பட்டது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அத்தோடு, கடிதம் எழுதியதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 05.09.2021ஆம் திகதி யாழில் இருந்து இயங்கும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய...

எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டை திறப்பது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை நீக்குவதாக இருந்தால் முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டுமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை கூறியுள்ளார். நாடு திறக்கப்படும்போது மீண்டும்...

ஊரடங்கில் திருமணம் செய்தவர்களுக்கு எதிராக வழக்கு!

அச்சுவேலி வடக்கில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டதாக பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அச்சுவேலி வடக்கில் இன்று இடம்பெற்ற திருமண நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து, நிகழ்வு இடம்பெற்ற வீட்டுக்குச் சென்ற பொலிஸார், திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த விருந்தினர்களை அங்கிருந்து செல்ல பணித்தனர். அத்தோடு, மணமக்கள் உள்ளிட்ட சிலரிடம்...

அமைச்சர் நாமல் நாளை யாழுக்கு விஜயம் !

யாழ். மாவட்டத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி திட்டங்களை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாளை யாழ்ப்பாணதிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். புதிய அமைச்சு பதவியை பொறுப்பேற்ற பின்னர் அவர் வடக்கிற்குச் வருவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆய்வு நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் குறித்த விஜயமானது அமையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில்...

ஜெனிவா விவகாரத்தைப் பயன்படுத்தி கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்தவே முடியாது- சம்பந்தன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளருக்கு அறிக்கை அனுப்பும் விவகாரத்தைப் பயன்படுத்தித் தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எந்தச் சக்தியாலும் பிளவுபடுத்தவே முடியாது. என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகங்களிடம் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து, தமிழ் மக்கள் எதிர்நோக்கும்...

இணுவில் காரைக்காலில் உயிருடன் விடப்படும் நாக பாம்புகள்!! – அச்சத்தில் மக்கள்

இணுவில் காரைக்கால் சிவன் கோயிலை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் நாக பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் சி.கௌசல்யா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “சிலரின் வீடுகள் மற்றும் விவசாய காணிகளுக்குள் வரும் நாக பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களை...

தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டாலும் அலட்சியமாக செயற்படாதீர்கள் – ஆ.கேதீஸ்வரன்

தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டாலும் அலட்சியமாக செயற்படாதீர்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போதைய வட. மாகாண கொரோனா நிலைமை தொடர்பாக கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “வடக்கு மாகாணத்தில் தற்போது கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி வழங்கும் பணிகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன. அந்த அடிப்படையிலே...

வடக்கில் கடந்த 6 நாட்களில் மாத்திரம் 75 கொரோனா மரணங்கள் பதிவு!

வடக்கு மாகாணத்தில் செப்டெம்பர் மாதத்தின் முதல் 6 நாட்களில் மாத்திரம் 75 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் வவுனியா மாவட்டத்தில் 29 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு, வடக்கு மாகாணத்தில் நேற்று திங்கட்கிழமை 11 பேர் கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பபாணம்...
Loading posts...

All posts loaded

No more posts