கோவிட்-19 வைரஸின் டெல்டா திரிபு பரவுவதால் பெண்கள் முடிந்தால் ஒரு வருடத்திற்கு கர்ப்பத்தை தாமதப்படுத்துமாறு சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பெண்கள் மருத்துவ வல்லுநர் ஹர்ஷா அத்தப்பத்து வலியுறுத்தினார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கோவிட்-19 டெல்டா திரிபு பரவுவதால் தாய் மற்றும் சேயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.