Ad Widget

இணையவழிக் கற்கைகளின் போது பிள்ளைகள் மீது அதிக அக்கறை பெற்றோருக்குத் தேவை!!

இணையவழிக் கல்வி முறை மூலம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கல்வி வகுப்புகளுக்கு அனுமதிக்கும் போது நடக்கும் நடவடிக்கைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பில் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முடித விதானபத்திரண தெரிவித்துள்ளதாவது; இணையவழிக் கற்பித்தலில் சிறுவர்கள் துர்நடத்தைக்கு உள்படுத்தப்படுவதாக பல தகவல்கள்...

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நீங்க வேண்டி யாழில் சிறப்பு யாகம்!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நீங்க வேண்டி யாழ்ப்பாணத்தில் சிறப்பு யாக பூஜையொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இலங்கையிலுள்ள நான்கு கிருஷ்ணன் ஆலயங்களில் இவ்வாறான பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் யாழ்.பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில், இன்று விசேட யாக பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. பொன்னாலை வரதராஜப் பெருமான் ஆலய பிரதம குருக்கள்,...
Ad Widget

பட்டதாரிகளின் பயிற்சி காலத்தை நீடிப்பதற்கு தீர்மானிக்கவில்லை

பட்டதாரிகளின் பயிற்சி காலத்தை நீடிப்பதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை குறிப்பிட்டுள்ளார். பயிற்சி காலத்தை மேலும் 6 மாதத்திற்கு நீடிப்பதற்கான பத்திரம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். 53 ஆயிரம்...

நாட்டை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறக்க திட்டம் – சுதர்ஷினி

நாட்டில் தற்போது அமுலாகியுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். எனவே, அடுத்த வாரம் முதல் நாட்டை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறந்து பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி வழங்கல் மற்றும் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய அந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்...

பௌத்த வர்ணம் அல்ல ஒலிம்பிக் வர்ணம்!! – அங்கஜன்: வர்ண பூச்சு பணிகளை இடைநிறுத்தவும் -மணிவண்ணன்

பிள்ளையார் ஆலய குள பாதுகாப்பு சுவருக்கு பூசப்பட்ட வர்ணம், பௌத்த வர்ணம் அல்ல ஒலிம்பிக் வர்ணம் என தன்னிடம் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி தெரிவித்ததாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ்.பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாகவுள்ள பிள்ளையார் குளம் புனரமைப்பு செய்யப்படும் நிலையில் குளத்தை சுற்றி...

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

கொரோனா தொற்று காலத்தில் அவசர சேவைக்காக மட்டும் கிளை அலுவலகங்கள் வரையறுக்கப்பட்ட நாட்களுக்கு திறந்திருக்கும் என குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி வவுனியா, மாத்தறை கண்டி மற்றும் குருநாகல் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறித்த அலுவலகங்கள் அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்காக...

வடக்கில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஒரு லட்சம் பேர் எந்தவொரு தடுப்பூசியும் பெறவில்லை!

வடமாகாணத்தின் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஏறத்தாழ 100,000 பேர் இதுவரை எந்தவொரு தடுப்பூசியும் பெற்றுக்கொள்ளவில்லை என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுவரை வடமாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் 547,150 பேருக்கு 1வது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது – இது வடமாகாணத்தில் உள்ள 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் 85 சதவீதமாகும். 2வது தடுப்பூசி 401,494...

எரிபொருள், மருந்துகளுக்கு எந்தநேரத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என்பது தெரியாது :பந்துல

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் நாட்டின் தற்போதைய நிலையில் பொருட்களின் விலை குறையாது. குறைக்கவும் முடியாது. மக்கள் தற்காலிக நெருக்கடி நிலைமைகளை சமாளிக்க பழகிக்கொள்ள வேண்டும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். எந்த நேரத்தில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும், எப்போது மருந்து தட்டுப்பாடு ஏற்படும்...

யாழில் கொரோனா வைரஸ் தொற்றினால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்- நாவாந்துறையைச் சேர்ந்த இமானுவேல் ராஜன் மரியதெஸ்ரா (வயது-36) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 1ஆம் திகதி காய்ச்சல் காரணமாக யாழ்.வைத்தியாலையில் அவர் அனுமதிக்கப்ப்டார். இதன்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அதனைத்...

புலிகள் செய்த குற்றங்களை விசாரியுங்கள் என எங்கேயும் கூறவில்லை – எம்.எ.சுமந்திரன்

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அனுப்பிய கடிதத்தில் விடுதலைப் புலிகள் செய்த குற்றங்களை விசாரியுங்கள் என எங்கேயும் கூறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். மேலும் சுயாதீன விசாரணை பொறிமுறையை மேற்கொள்ள வேண்டும் என்பதையே...

வடக்கு பிராந்திய முகாமையாளர் பதவிக்கு பெரும்பான்மை இனத்தவர் நியமனம்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்கு பிராந்திய முகாமையாளர் பதவிக்கு, அநுராதபுரத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்கு பிராந்திய முகாமையாளர் பதவி வெற்றிடமாக இருந்தது. இந்நிலையில் குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கான தகுதி, கிளிநொச்சி மற்றும் கோண்டாவில் சாலையில் கடமை புரியும் பொறியியலாளர்களிற்கு இருப்பதாக பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனாலும், திருகோணமலையில் கடமையாற்றிய குறித்த...

200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் அடுத்த மாதம் திறப்பு?

200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை அடுத்த மாதத்தில் மீண்டும் திறக்க முடியும் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. கொரோனா தடுப்பு செயலணியுடன் இணைந்த இந்தக் குழுவால் எட்டப்பட்ட பரிந்துரைகள் செப்டம்பர் 17 ஆம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன. 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட கிராமப்புறங்களில் உள்ள சுமார் 3,000 பாடசாலைகளை ஆரம்பத்தில்...

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு புதிய பீடாதிபதி நியமனம்!!

யாழ்.பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக வைத்தியக் கலாநிதி இ.சுரேந்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மருத்துவ பீடத்தின் தற்போதைய பீடாதிபதியும் சத்திர சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் எஸ்.ரவிராஜின் பதவிக் காலம் நிறைவு பெற்றதையடுத்து, புதிய பீடாதிக்கான தேர்தல் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்றது. இதன்போது மருத்து பீட, பீடச் சபை உறுப்பினர்களுடையியே இடம்பெற்ற வாக்கெடுப்பில் வைத்தியக் கலாநிதி...

கொக்குவில் இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைக்க தீர்மானம்

கொக்குவில் இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைப்பதற்கு நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கொக்குவில் இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைத்து தருமாறு, கொக்குவில் இந்து மயான அபிவிருத்தி சபையினால் நல்லூர் பிரதேச சபையிடம் கோரப்பட்டது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) நல்லூர்...

யாழில் மருத்துவ பீட மாணவி சடலமாக மீட்பு

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மருத்துவ பீடத்தை சேர்ந்த சாருகா என்ற முதலாமாண்டு மாணவி ஒருவரே நேற்று மாலை இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். கற்றல் சுமை காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவருடைய மரணத்துக்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவரவில்லை. சுன்னாகத்தினைச்...

எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு கொரோனா!

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் உள்ள சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (சனிக்கிழமை) முற்பகல் 11 மணியளவில் சுகயீனம் காரணமாக வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில், கொரோனா வைரஸ் தொற்று...

இலங்கையில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்தது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொ்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 152ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 157 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 30 வயதுக்கு குறைவான நால்வரும் 60 வயதுக்கு குறைவான 23 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 110 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து...

காரைநகரில் திருமண நிகழ்வில் பங்கேற்ற 34 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் காரைநகரில் ஊரடங்கு வேளை பந்தல் அமைத்து நூறுக்கும் அதிகமானோர் பங்குகொண்டிருந்த திருமண நிகழ்வில் பங்கேற்ற 13சிறார்கள் உட்பட 34 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் குறித்த தொற்றாளர்கள் யார் என்று, காரைநகர் சுகாதாரத் தரப்பினரைத் தொடர்புகொண்டு...

தொடர்ச்சியாக பாடசாலைகளை மூடுவதால் மாணவர்களுக்கு நீண்டகாலத்தில் பிரச்சினைகள் ஏற்படும்!!

ஊரடங்கு உத்தரவை நீக்கியவுடன் பாடசாலைகளை விரைவில் திறப்பது அவசியமானது என கொழும்பு மருத்துவ பீடத்தின் குழந்தை மருத்துவப் பேராசிரியர், மருத்துவ வல்லுநர் பூஜித விக்ரமசிங்க தெரிவித்தார். இன்று சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். “இலங்கையில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டியது அவசியம்....

இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த இளம் பெண் கோவிட்-19 நோயினால் மரணம்!!!

இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் கோவிட்-19 நோயினால் பரிதாபமாக உயிரிழந்தார். இணுவிலைச் சேர்ந்த அஜந்தன் இனியா (வயது-25) என்ற பெண்ணே இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். குழந்தைகள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். “கடந்த 4ஆம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு மூச்செடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் அன்றைய தினம் தெல்லிப்பழை...
Loading posts...

All posts loaded

No more posts