Ad Widget

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நீங்க வேண்டி யாழில் சிறப்பு யாகம்!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நீங்க வேண்டி யாழ்ப்பாணத்தில் சிறப்பு யாக பூஜையொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

இலங்கையிலுள்ள நான்கு கிருஷ்ணன் ஆலயங்களில் இவ்வாறான பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில் யாழ்.பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில், இன்று விசேட யாக பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

பொன்னாலை வரதராஜப் பெருமான் ஆலய பிரதம குருக்கள், சோமஸ்கந்த சர்மா மற்றும் நயினை நாகதீபம் விகாராதிபதி மீககா வதுலே ஸ்ரீ விமல ஆகியோர் ஏற்பாடு செய்த இந்த பூஜை வழிபாட்டில் கலகொட அத்துரலிய ஞானசார தேரர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts