Ad Widget

தரங்கள் 7-13இல் பயிலும் மாணவர்களுக்கு விரைவில் கோவிட்-19 தடுப்பூசி – பாடசாலைகளும் மீண்டும் திறக்கப்படும்

12-18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு விரைவில் கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கு கவனம் செலுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர், கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த்தொற்றுக் காரணமாக, பாடசாலைகள் அவ்வப்போது சுமார் ஒன்றரை வருடங்கள் மூடப்பட வேண்டியிருந்தது. அதனால் மாணவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போட ஆரம்பிக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் கூறினார்.

இன்று (09) சுகாதார அமைச்சில் ஜூம் தொழில்நுட்பம் குறித்த கலந்துரையாடலில் அவர் உரையாற்றினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

உலக சுகாதார நிறுவனம் உள்பட பல சர்வதேச நிறுவனங்கள் மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான பல அளவுகோல்களை சுட்டிக்காட்டியுள்ளன.

மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடங்கியவுடன், தரம் 7 முதல் தரம் 13 வரையிலான மாணவர்களுக்கு தடுப்பூசி போடலாம்.

ஆசிரியர்கள் உள்பட கல்வி சாரா ஊழியர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு தடுப்பூசி முடிந்தவுடன் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

இதன் கீழ், சுமார் இரண்டு மில்லியன் மாணவர்களுக்கு தடுப்பூசி போட முடியும்- என்றார்.

Related Posts