Ad Widget

இன்று இரவு மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாடுகள்!!

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன நிலையில், நேற்று முன்தினம் திங்கட்கிழமை போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. எனினும் மீண்டும் இன்று புதன்கிழமை இரவு 10 மணி முதல் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை அசாதாரண தன்மையுடன் இனங்காணப்பட்ட மாதிரியில்...

LTTE உறுப்பினர்கள் உட்பட 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுபவர்களை விடுவிக்குமாறு நாமல் கோரிக்கை

வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டதால் 10-15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிப்பதற்கான ஒரு பொறிமுறையை செயற்படுத்துமாறு இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் உட்பட பல இளைஞர்கள் தங்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்படாமலோ அல்லது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலோ நீண்ட...
Ad Widget

யாழில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 55 வயதுப் பெண்ணும் 65 முதல் 85 வயதுக்கு உட்பட்ட மூன்று ஆண்களும் உயிரிழந்துள்ளனர். இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 72ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை,...

நாட்டில் மேலும் 70இற்கு மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழப்பு! 2,000இற்கு மேற்பட்டோருக்குக் தொற்று!!

நாட்டில் மேலும் 71 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில் 33 ஆண்களும் 38 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு இரண்டாயிரத்து 704 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது....

பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பேணாவிடின் கைது!

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், வியாபார நிலையங்கள் உட்பட பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பேணாதவர்கள் இன்று முதல் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (21) பல இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பேணாது செயற்பட்டதைக் கண்காணித்ததைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பதில் சிரேஷ்ட பொலிஸ்மா...

யாழ்.கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை!!

கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையிலுள்ள பெரும்பாலான கடற்பகுதிகளில் கடல் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் தொடர்ச்சியாக கரையொதுங்கி வருகின்றன. இந்நிலையில் யாழ்ப்பாணம் – வேலணை, துறையூர் கடற்கரையிலும் இறந்த நிலையில் கடலாமை ஒன்று நேற்று (திங்கட்கிழமை) கரையொதுங்கி உள்ளது. குறித்த சம்பவம் அறிந்து அவ்விடத்திற்குவருகைதந்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர், கடலாமையினை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக...

டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம்!!

மாதிவெலவில் வசிப்பவர் கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 53 வயதான பெண் தற்போது தொற்று நோய்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். டெல்டா மாறுபாடு மாதிவெலவில் பரவி வருவதாக சந்தேகம் எழுந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையிலேயே மாதிவெலவில் வசிப்பவர் கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாறுபாடு முதன்முதலில் தெமடகொட...

வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் ஆரம்பம் !

2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இருப்பினும் வாக்காளர் இடாப்பு திருத்தத்திற்கான படிவம் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படாது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுபோன்று, திருத்தப்பட்ட விண்ணப்பங்களை வீடுகளுக்கு அனுப்புவதற்கு பதிலாக, தரவுகளை கிராம உத்தியோகத்தர் மூலம் பெற்று ஆவணத்தை புதுப்பிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி...

கடல் உணவுகளை உட்கொள்வதில் எவ்வித ஆபத்தும் இல்லை – அமைச்சர் டக்ளஸ்

கடல் உணவுகளை உட்கொள்வதில் எவ்வித ஆபத்தும் இல்லை என்றும் மக்கள் மத்தியில் பொய்யான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு கூறினார். எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலில் தீ பரவியதால் ஏற்பட்ட பாதிப்புகளின் அடிப்படையில் முதற்கட்டமாக...

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு நாடு முழுவதும் பரவியிருக்கலாம் – ஆய்வாளர்கள் எச்சரிக்கை

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு ஏற்கனவே நாடு முழுவதும் பரவியிருக்கலாம் என சுகாதார ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். சமூகத்தில் மாறுபாட்டில் கண்டறியப்படாத பல வழக்குகள் இருக்கலாம் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் பலர் வெளியில் நடமாடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு நபரிடமிருந்து...

அரசாங்க தகவல் நிலையத்தில் தமிழ் மொழிக் கொலை இடம்பெற்றுள்ளது!!

அரசாங்க தகவல் நிலையத்தில் தமிழ் மொழிக் கொலை இடம்பெற்றுள்ளதாகவும் உடனடியாக அதனை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் முன்னாள் முதலமைச்சரான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது,“ கிராமசேவகர் பிரிவுகளை இணையம் வழியாக தொடர்பு கொள்ளுவதற்காக...

நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

அத்தியாவசிய சேவை மற்றும் அத்தியாவசியமல்லாத சேவைக்குள் அடங்கும் அமைச்சுக்கள், நிறுவனங்கள் மற்றும் பகுதி நிலை அரச நிறுவனங்கள், பணியாளர்களை சேவைக்கு அழைப்பதற்கான நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைக்குள் உள்ளடங்காத அரச நிறுவனங்களின் பணியாளர்கள் அதிகபட்சமாக வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரம் சேவைக்கு அழைக்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....

வியாழேந்திரன் வீட்டுக்குள் நுழைய முற்பட்டவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மட்டக்களப்பில் அமைந்துள்ள வீட்டிற்கு முன்பாக ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மட்டக்களப்பு ஊறணியில் மன்றேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்பாகவே இந்தத் துப்பாக்கிச்சூடுநேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டபோதே மெய்ப் பாதுகாவலரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முற்பட்டவர் வாய்த்...

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்பா? ஆதரவா? – நாளை முடிவு என்கின்றது கூட்டமைப்பு

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக கூட்டமைப்பு இதுவரை எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என அறிய முடிகின்றது. இந்நிலையில் நாளை இடம்பெறும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் குறித்து முடிவு செய்யப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இதேவேளை எரிபொருள் விலையேற்றம் தொடர்பான அரசாங்கத்தின்...

மணல் டிப்பர் மீது துப்பாக்கிப் பிரயோகம்!! ஒருவர் காயம்!!

கிளிநொச்சி - புளியம்பொக்கணை, நாகேந்திரபுரம் பகுதியில், இன்று (21) அதிகாலை, சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், ஒருவர் காயமடைந்துள்ளார். நாகேந்திரபுரம் பகுதியில், இன்று அதிகாலை 4 மணியளவில், சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடி ஊடாக சென்ற டிப்பர் ஒன்றை நிறுத்துமாறு, படையினர் சமிஞ்கை...

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை!!

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கேட்டுக்கொண்டார். சுகாதார வழிகாட்டுதல்கள்...

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்குமா? அரசாங்கத்தின் அறிவிப்பு

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த முடிவினை அமைச்சரவை உப குழு எடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு நிறுவனங்கள் கோரிக்கை முன்வைத்திருந்தது. இதனை அடுத்து விலையை அதிகரிப்பது தொடர்பாக ஆராய அமைச்சரவை...

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தம்!!

பயணக் கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை தளர்த்தப்பட்டுள்ள நிலையிலும் இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் அலுவலக நேரங்களில் 0707 677877 என்ற இலக்கத்தின் மூலம் திணைக்களத்தை தொடர்பு கொண்டு நியமனங்கள் மற்றும் தொடர்புடைய விடயங்கள் குறித்த தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். வாட்ஸ்அப், வைபர் அல்லது எஸ்.எம்.எஸ். செய்திகள் மூலமாகவும்...

கொரோனா தொற்றினால் மேலும் 47 பேர் உயிரிழப்பு! புதிதாக 2028 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று!!

நாட்டில் மேலும் 47 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில் 27 ஆண்களும் 20 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு இரண்டாயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது....

பயணத் தடையை நாளை நீக்காமல் தொடரவேண்டும் – மருத்துவர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

பயணக் கட்டுப்பாடுகளை நாளை நீக்காமல் தொடருமாறு இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபரி கோதபய ராஜபக்சவிடம் வலியுறுத்தியுள்ளது. சங்கம் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில், சில நாள்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்டது போன்று நாடு மோசமான சூழ்நிலைக்கு திரும்பும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தற்போதைய நிலமையைக் கருத்தில் கொண்டு பயணக் கட்டுப்பாடுகளை...
Loading posts...

All posts loaded

No more posts