Ad Widget

ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் நாமலிடம் முக்கிய கோரிக்கை!!

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை, அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்திருந்தனர். இதன்போது அவர்கள், தந்தையின்றி அனுபவிக்கும் துயரங்கள் தொடர்பாக அமைச்சருக்கு தெரியப்படுத்தினர். ஆகவே தமது தந்தையை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆனந்த சுதாகரின் மகன் கவிரதன், மகள் சங்கீதா ஆகியோர் அமைச்சரிடம் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்தனர்....

வடமராட்சியில் தொழிற்சாலை ஒன்றினை திறந்து வைத்தார் நாமல்!!

வடமராட்சி, முள்ளியில் சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலையை, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ திறந்து வைத்தார். ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா நிறுவனத்தின் நிதியுதவியின் ஊடாக உருவாக்கப்பட்ட இந்த தொழிற்சாலையில், ஒரு நாளைக்கு 50 ஆயிரம் கிலோ உரத்தை உருவாக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த தொழிற்சாலையின் ஊடாக பிரதேச சபைகளின் குப்பை பிரச்சினைகளுக்கும் தீர்வு...
Ad Widget

யாழ். நகரில் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மண்டபத்தில் IT தொழில்நுட்ப வளாகம்!!

யாழ். நகரில் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மண்டபத்தில் IT தொழில்நுட்ப வளாகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று (27) யாப்பாணம் கலாச்சார மண்டபத்திற்கு வருகை தந்து பேச்சு நடத்தினார். இதில் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் யாழ்.இந்திய துணைத்தூதுவர் ஆகியோர் கலந்துகொண்டனர். இது குறித்து யாழ்.மாநகர சபை முதல்வர் கருத்து தெரிவிக்கையில்.. அமைச்சர் நாமல் ராஜபக்ஷ...

பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சிமென்ட் விலை அதிகரிக்கப்படுமா?

பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சிமென்ட் விலையை அதிகரிக்க இதுவரை எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தைப்படுத்தல், கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண இதனை தெரிவித்துள்ளார். இந்த பொருட்களை பொதுமக்களுக்கு தற்போதுள்ள விலையில் விற்பனை செய்வதற்காக அரசாங்கம் ஏற்கனவே, சில...

நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கோரோனா தொற்று!!

நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்று பிசிஆர் மாதிரிகளை வழங்கியுள்ளார். அவற்றில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்டா கொரோனா பிறழ்வு வேகமாகப் பரவும் அபாயம் – சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை!!

நாட்டில் டெல்டா கொரோனா பிறழ்வு வேகமாகப் பரவும் அபாயமுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மேலும் பல பிறழ்வுகள் உருவாகக்கூடும் எனவும் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்காவிடின் பாரதூரமான நிலைமையை...

தடுப்பூசி பெற்றுக்கொண்ட பலருக்கு உடல் நலப் பாதிப்பு!!

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பலருக்கு, திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை), கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவ்வாறு தடுப்பூசியை பெற்றுக்கொண்ட 25க்கும் மேற்பட்டோருக்கு இன்று காலை, திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டமையினால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த...

நல்லூரில் கலாசார சீரழிவு இடம்பெற்ற விடுதி முற்றுகை!! 6பேர் கைது!!

யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டு இரண்டு இளம் பெண்கள், 3 இளைஞர்கள் மற்றும் விடுதி உரிமையாளர் உள்ளடங்களாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் நீதிமன்றின் அனுமதி பெற்று இன்று(வெள்ளிக்கிழமை)...

யாழில் சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் புதிய தொழிற்சாலை!!

வடமராட்சி முள்ளியில், சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறந்து வைக்கப்படவுள்ளது. ஜப்பான் நாட்டிலுள்ள ஜெய்க்கா நிறுவனத்தின் சுமார் 23 கோடி ரூபாய் பெறுமதியான நிதியுதவியின் ஊடாக இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலையில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் கிலோ உரத்தை உருவாக்க முடியுமென கூறப்படுகின்றது. மேலும் இந்த தொழிற்சாலை ஊடாக குப்பை...

யாழ்ப்பாணம், மன்னார் உள்பட 5 மாவட்டங்களில் 10 கிராமங்கள் முடக்கம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கரவெட்டி- கரணவாய் கிராம அலுவலகர் பிரிவும் மன்னாரில் தலைமன்னார் – பியர் கிழக்கு, மேற்கு கிராம அலுவலகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். பதுளை, மன்னார், யாழ்ப்பாணம் களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 6 மணி தொடக்கம் 10 கிராம அலுவலகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம்...

திருமணம் செய்தவருக்கு 20ஆயிரம் தண்டம் விதித்தது மல்லாகம் நீதிமன்றம்!

பண்டத்தரிப்பு பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி திருமணம் செய்த மணமகனுக்கு மல்லாகம் நீதிமன்றம் 20ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பண்டத்தரிப்பு பகுதியில் கடந்த 4ஆம் திகதி திருமண நிகழ்வு நடைபெற்றது. இதன் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது, அதிகளவானோர் திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். இது...

புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுடன் துமிந்த சில்வாவுக்கும் விடுதலை!!

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொது மன்னிப்பின் கீழ் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் உட்பட 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுடன் மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவும் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னாள்...

ஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையான தமிழ் அரசியல் கைதி கோரிக்கை!

எங்களது விடுதலைக்காக குரல் கொடுத்து வந்த மக்களுக்கும், எமது விடுதலைக்காக செயற்பட்டவர்களுக்கும், எம் விடுதலையை சாத்தியமாக்கியவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக சூரியகாந்தி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், “இன்றைய தினம் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட எம்மை போன்ற உறவுகள் சிலர் இன்னமும் சிறைகளில் உள்ளனர். அவர்களையும் மிக விரைவில் விடுவிக்க வேண்டும் என கோருகிறோம். பலர் செய்யாத...

மணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம்!

யாழில் மண் கொள்ளையர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாள் வெட்டு மோதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.கொடிகாமம் கெற்பேலி பகுதியில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) மதியம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சட்டவிரோதமான முறையில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட இரு குழுக்களுக்கு இடையில் மணல் ஏற்றும் இடத்தில் வாய் தர்க்கம் ஏற்பட்டு...

சுமந்திரன் – சுரேன் ராகவனுக்கு இடையில் கருத்து மோதல்!

அரசியல் கைதிகள் பிரச்சினையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனுக்கும் சுரேன் ராகவனுக்கும் இடையில் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் சூடான கருத்து மோதல் இடம்பெற்றது. அரசாங்க உறுப்பினராக இருந்தபோதிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்த சுரேன் ராகவன் எந்த நடவடிக்ககைகளையும் எடுக்கவில்லையென சுமந்திரன் குற்றம் சாட்டினார். அதனைத்தொடர்ந்து, கைதிகள் விடுவிக்கப்படுவதை உறுதி செய்ய சுமந்திரன் எடுத்த நடவடிக்கைகள்...

மின்சார முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

மின்சார முறைப்பாடுகள் குறித்து விசாரித்து தீர்வு காணும் வகையில் மின்சாரத்துறையின் ஒழுங்குறுத்துகை நிறுவனமான இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அவசர தொலைபேசி இலக்கமொன்றை 0775 687 387 அறிமுகம் செய்துள்ளது. நாட்டில் நிலவும் கொரோனா பிரச்சினை காரணமாக மின்சார பாவனையாளர்கள் முறைபாடுகளை தெரிவிக்க 0775 687 387 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக இலங்கை பொதுப்பயன்பாடுகள்...

முன்னாள் போராளிகளை எந்தவொரு குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்க வேண்டும் – சுமந்திரன்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துசெய்து, முன்னாள் போராளிகளை எந்தவொரு குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. அரசாங்கத்திற்கு முடிந்தால் அரசியல் கைதிகளை நாளைய பொசன் பௌர்ணமி தினத்தில் விடுதலை செய்யுமாறு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேட்டுக்கொண்டார். இந்த விடயத்தில் அரசியல் நாடகத்தை நடத்தாமல் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

யாழில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்து 919 ஆக அதிகரிப்பு!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்து 919 ஆக அதிகரித்துள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த தொற்றாளர்களில் சுமார் 3 ஆயிரத்து 696 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றைய தினம்(புதன்கிழமை) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்....

யாழ். பல்கலைக்கழகத்தில் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறி ஆரம்பம்!

யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தில் 2019/2020 ஆம் கல்வியாண்டில் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறிக்கு முதன்முதலாக மாணவர்கள் உள்வாங்கப்படவிருக்கின்றனர். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ. த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட வியாபார நிருவாகமாணி, வணிகமாணி புதுமுக மாணவர்களுடன் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கை நெறியும் ஆரம்பிக்கப்படவுள்ளது....

பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிப்பதே கைதிகள் விடுதலைக்கு ஒரே வழி!

பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரே வழி. அதை விடுத்து இந்த விடயத்தை உங்கள் அரசியல் இலாபங்களுக்கு பாவிக்காதீர்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் நாமல் ராஜபக்க்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும்...
Loading posts...

All posts loaded

No more posts