Ad Widget

யாழ்ப்பாணம், மன்னார் உள்பட 5 மாவட்டங்களில் 10 கிராமங்கள் முடக்கம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கரவெட்டி- கரணவாய் கிராம அலுவலகர் பிரிவும் மன்னாரில் தலைமன்னார் – பியர் கிழக்கு, மேற்கு கிராம அலுவலகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

பதுளை, மன்னார், யாழ்ப்பாணம் களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 6 மணி தொடக்கம் 10 கிராம அலுவலகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் குருநகர் மேற்கு, ரெக்லமேசன் மேற்கு கிராம அலுவலகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது அத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளிலும் ஆயிரத்து 599 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 820 பேர் வசிக்கின்றனர். அவர்களில் ஜூன் மாதத்தில் 72 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Posts