Ad Widget

யாழ்.கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை!!

கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையிலுள்ள பெரும்பாலான கடற்பகுதிகளில் கடல் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் தொடர்ச்சியாக கரையொதுங்கி வருகின்றன.

இந்நிலையில் யாழ்ப்பாணம் – வேலணை, துறையூர் கடற்கரையிலும் இறந்த நிலையில் கடலாமை ஒன்று நேற்று (திங்கட்கிழமை) கரையொதுங்கி உள்ளது.

குறித்த சம்பவம் அறிந்து அவ்விடத்திற்குவருகைதந்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர், கடலாமையினை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக இன்று காலை, எடுத்துச்சென்றுள்ளனர்.

Related Posts