Ad Widget

நீதிமன்றத் தடையுத்தரவுக்கு மத்தியில் முல்லைத்தீவுக்குள் நுழைந்தது பேரணி- நீராவியடியில் தரிசனம்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி திருகோணமலையில் இருந்து இன்று காலை ஆரம்பமான நிலையில் தற்போது முல்லைத்தீவு எல்லைக்குள் நுழைந்துள்ளது. தற்போது வட மாகாண முன்னாள் முதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற சிவமோகன், சிவில் சமூக செயற்பாட்டாளர் இளங்கோவன்...

பருத்தித்துறை நீதிமன்ற எல்லைக்குள் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகளுக்கு தடை!!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர். பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பொதுத் தொல்லையை...
Ad Widget

மக்கள் எழுச்சிப் போராட்டத்துக்கு தடை கோரும் பொலிஸாரின் விண்ணப்பங்கள் சாவகச்சேரி, மல்லாகம் நீதிமன்றங்களால் நிராகரிப்பு

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த தடை உத்தரவு கோரி பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பம் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் சுன்னாகம், காங்கேசன்துறை மற்றும் அச்சுவேலி பொலிஸார் முன்வைத்த விண்ணப்பங்களும் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது....

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை – முல்லைத்தீவில் வரவேற்க தயார் நிலையில் மக்கள் : தடையுத்தரவுடன் விரைந்த பொலிஸார்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை என்னும் பேரணியினை வரவேற்பதற்கு முல்லைத்தீவில் நாயாற்றுப் பாலத்திற்கு அருகில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் தலைமையிலான குழுவினர் தயாரான நிலையிலுள்ளனர். இந்நிலையில், குறித்த இடத்திற்கு முல்லைத்தீவு பொலிஸார் தடையுத்தரவுடன் வருகை தந்துள்ளனர். அவ்வாறு வருகை தந்த பொலிஸார் தற்போது நிலவும் கொவிட் -19 நிலைமைகளைக் காரணங்காட்டி, பேரணிகள்...

எத்தகைய தாக்குதலுக்கும் நாம் அஞ்சப்போவதில்லை- சிவாஜிலிங்கம்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணியை குழப்புவதற்கு யார் எத்தகைய தாக்குதலை நடத்தினாலும், நாம் அஞ்சப்போவதில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணி இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் திருகோணமலை- மடத்தடிச் சந்தியில் வைத்து, எம்.கே.சிவாஜிலிங்கம் பயணித்த வாகனம்...

அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரி பயிலுனர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை!!

நாட்டின் அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரிகள் இம்மாத இறுதிக்குள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வது பற்றி அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சின்...

யாழில் சு.கவின் பேரணியில் கலந்து கொண்ட வாள்வெட்டுக்குழு ரௌடிகள்: பொலிசார் கைது!

யாழில் நேற்று முன்னாள் ஆவாகுழு ரௌடியின் தலைமையில் நடைபெற்ற சிறு குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த இருவரை பொலிசார் கைது செய்ய முயன்றனர். அவர்கள் வாள்வெட்டுக்குழு ரௌடிகள் என தெரிவித்தே பொலிசார் கைது செய்ய முயன்றனர். ஒருவர் சிக்க, மற்றையவர் தப்பியோடி விட்டார். சுதந்திரதினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியும், இலங்கையின் மனித உரிமை மீறல் விவகாரங்களை ஐநா...

போராட்டம் மேலுமொருநாள் நீடிப்பு: 7ஆம் திகதியே யாழ்ப்பாணம் வந்தடையும்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 6ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பேரணியை முடிக்க முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. இதையடுத்து, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் எதிர்வரும் 6ஆம் திகதி வரை போராட்டங்களை நடத்த நீதிமன்றங்களின் மூலம் தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் ஒரு நாள் தாமதமாகவே யாழ்ப்பாணத்தை போராட்டம் வந்தடையுமென...

சுதந்திர தினத்தில் வடக்கு- கிழக்கில் கரிநாள்!! நீதிப் போராட்டங்கள் முன்னெடுப்பு!!

இலங்கையின் 73ஆவது சுதந்திர நாள் நேற்று கொழும்பில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்ற அதேவேளை, வடக்கு – கிழக்கில் கறுப்புநாளாகவும், துக்கநாளாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் நாள், இலங்கை சுதந்திரமடைந்ததை நினைவு கூரும் வகையில் நேற்று காலை 8.30 மணியளவில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தேசியக்கொடியேற்றல், மற்றும் இராணுவ அணிவகுப்புகள் என்பன ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச...

யாழில் ஆறாம் திகதி ஓரணியாக, பேரணியாகத் திரளுங்கள்- விந்தன் வேண்டுகோள்!

சமய, காலாசார மொழி அடையாளங்களை அழிக்கும் நோக்கில் அரச திணைக்களங்கள் வடக்கு கிழக்கு தாயகப் பகுதிகளில் அத்துமீறிச் செயற்படுவதாக வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி வடக்கு நோக்கி வருந்துகொண்டிருக்கின்ற நிலையில் இதற்கு அனைத்துத்...

உரிமைப் போராட்டம் நசுக்கப்படுவதால் ஓய்ந்துவிடப் போவதில்லை- மணிவண்ணன்

தமிழ் மக்கள் உலகமெங்கும் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில், இலங்கையில் தமிழர் போராட்டம் நசுக்கப்படுகின்ற காரணத்தினால் ஓய்ந்துவிடப் போவதில்லை என யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இந்நியலையில், இந்த செய்தியை இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேசத்துக்கும் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் நேற்றையதினம் (வியாழக்கிழமை) கலந்துகொண்டு ஊடகங்களுக்குக்...

மக்கள் எழுச்சிப் போராட்டங்களுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றில் தடை உத்தரவு பெற்ற பொலிஸார்

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் நான்கு நாள்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் இன்று புதன்கிழமை தாக்கல் செய்த விண்ணப்பங்களுக்கே இந்த தடை உத்தரவு...

வடக்கில் இதுவரை 7,925 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது!!

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினருக்கான கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் நான்காம் நாளில் 704 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று வரையான கடந்த நான்கு நாட்களில் வடக்கில் ஏழாயிரத்து 925 மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர்...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி- உத்தேச நேர அட்டவணை!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் எதிர்ப்பினையும் மீறி பொத்துவிலில் இருந்து ஆரம்பமானது. தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் அத்துமீறல்கள், பௌத்த மயமாக்கல் உட்பட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி வடக்கு கிழக்கு மாகாண சிவில் அமைப்புகளின் கோரிக்கைக்கு இந்தப் பேரணி முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலையில், பேரணி பொத்துவிலில் இன்று தொடங்கி எதிர்வரும்...

கொட்டும் மழையிலும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் முன்னெடுப்பு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்று (புதன்கிழமை) முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. சிவில் அமைப்பினரின் ஏற்பாட்டில் இந்த தொடர் போராட்டம் இடம்பெறவுள்ளதுடன், இந்த தொடர் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது ஆதரவினை அண்மையில் வழங்கியிருந்தது. சிறுபான்மையினரின் நில அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர்...

எம்மிடம் துப்பாக்கி இல்லை; இராணுவமே சுட்டது- வவுனியாவில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவிப்பு!

இராணுவத்தை நோக்கி தாம் சுடவில்லை எனவும், தம்மை நோக்கி இராணுவமே துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக செட்டிக்குளம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா செட்டிக்குளம் பேராறு காட்டுப் பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் இரண்டு இளைஞர்கள் தப்பிச்சென்றிருந்தனர். குறித்த இளைஞன் உட்பட...

மியான்மரை போல இலங்கையிலும் இராணுவப் புரட்சி அரங்கேறலாம்: எச்சரிக்கிறார் ஐங்கரநேசன்

மியன்மாரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரு வெற்றி பெற்ற ஆங் சான் சூகி அம்மையார் நாடாளுமன்றின் முதலாவது அமர்வைக் கூட்டவிருந்த நாளில் அந்நாட்டின் இராணுவம் பலவந்தமாக ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை தொடங்கி உலக நாடுகள் பலவும் கண்டித்துள்ள இந்த ஜனநாயகப் படுகொலையை இலங்கை மக்கள் தங்களுக்கான ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்....

எமது பிரதேசங்களில் தற்கொலைகளைத் தவிர்க்க அபயம் நிறுவனத்தின் சேவையை நாடுவோம்!!

வடக்கு – கிழக்கில் தற்கொலைகளை தடுத்து நிறுத்த அனைவரும் அபயம் நிறுவனத்துடன் இணைந்து சமூகப் பொறுப்புடன் செயற்படுமாறு இந்து சமயத் தலைவர்கள் கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தோண்டுநாத சுவாமிகள் மற்றும் மருத்துவர் த.சத்தியமூர்த்தி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணப் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் அதன் உபதலைவர் கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தொண்டுநாத...

இலங்கைக்கு 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானம்!

கொவெக்ஸ் சலுகையின் கீழ் 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை நாட்டிற்கு வழங்குவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் (AstraZeneca Covishield) அஸ்ட்ராஜெனகா கொவிஸீல்ட் தடுப்பு மருந்துகள் இலவசமாக கிடைக்கவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்தின் தென்கிழக்காசிய வலயத்திற்கான பிரதிநிதி, விசேட வைத்திய நிபுணர் பாலித்த அபேகோன் தெரிவித்துள்ளார். அதன்படி முதல் கட்டத்தில்...

அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து சுதந்திரதினத்தைப் புறக்கணிப்போம் – சுரேஷ்

இலங்கை சுதந்திரம் அடைந்தகாலம் தொட்டு இன்றுவரை தமிழ்த் தேசிய இனத்தை இல்லாமல் செய்யும் நோக்கில் செயற்படுகின்ற போக்கைக் கண்டித்தும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தோடு விளையாடும் போக்கைக் கண்டித்தும் இஸ்லாமியர்களின் மத நம்பிக்கைகளை அவமதிக்கும் போக்கைக் கண்டித்தும் இலங்கையின் சுதந்திர தினத்தைப் புறக்கணிக்க அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய இனத்திற்கும் பெருந்தோட்ட பாட்டாளிகளுக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் ஜனநாயக முற்போக்கு...
Loading posts...

All posts loaded

No more posts