Ad Widget

யாழில் ஆறாம் திகதி ஓரணியாக, பேரணியாகத் திரளுங்கள்- விந்தன் வேண்டுகோள்!

சமய, காலாசார மொழி அடையாளங்களை அழிக்கும் நோக்கில் அரச திணைக்களங்கள் வடக்கு கிழக்கு தாயகப் பகுதிகளில் அத்துமீறிச் செயற்படுவதாக வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி வடக்கு நோக்கி வருந்துகொண்டிருக்கின்ற நிலையில் இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறித்த பேரணி, யாழ்ப்பாணத்துக்கு வரும்போது, பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், சிவில் சமூக அமைப்புகள், தொழிற் சங்கங்கள், அனைத்து சமயம் சார்ந்தவர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஓரணியாக, பேரணியாகத் திரள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts