Ad Widget

சீனாவின் ஆதிக்கத்தால் இந்திய, அமெரிக்கப் படைகள் வடக்கு, கிழக்கில் நிலைகொள்ளும் அபாயம் – சிவாஜி

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீனாவின் ஆதிக்கத்தால், இந்தியா- அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இலங்கைப் பிராந்தியத்தில் அமைதியின்மை ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அவர், குடா நாட்டில் சீனாவின் ஆதிக்கத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார். மேலும் இந்தியா, அமெரிக்கா போன்ற...

வடக்கிற்கு மறுக்கப்பட்ட அதிகாரங்கள் கிடைத்துள்ளமை இணக்க அரசியலுக்கான இன்னுமொரு வெற்றி- டக்ளஸ்

வடக்கு மாகாணத்திற்கு இதுவரை காலமும் வழங்கப்படாமல் இருந்த அதிகாரங்கள் தற்பேர்து கிடைத்துள்ளமை தேசிய நல்லிணக்க பொறிமுறைக்கு கிடைத்த இன்னுமொரு வெற்றி என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்களின் மனங்களில் நம்பிக்கை வலுப்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண காணி ஆணையாளருக்கு வழங்கப்படாமல் இருந்த அதிகாரங்கள் கடற்றொழில் அமைச்சரின் முயற்சி...
Ad Widget

யாழ். பல்கலை மாணவன் உட்பட நால்வருக்கு வடக்கில் தொற்று உறுதி!

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (புதன்கிழமை) உறுதியாகியுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் என்றும் மற்றைய மூவரும் பூநகரியைச் சேர்ந்தவர்கள் என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட 491 பேரின்...

இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மறுப்பு

இராணுவ வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதனை தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு அறிவித்துள்ளார். கடந்த காலங்களின் இராணுவத்தின் செயற்பாட்டை தாம் ஏற்றுக்கொள்ள போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கொவிட் 19 தடுப்பூசியை...

வீட்டுத் திட்டத்துக்கான முழுமையான நிதியை வழங்கக் கோரி ஆளுநர் செயலகம் முன் ஆர்ப்பாட்டம்!

வீட்டுத் திட்டத்துக்கான மீதி பணத்தினை பெற்றுத்தருமாறு கோரி சண்டிலிப்பாய் பெரியவிளான் மக்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலக முன்றலில் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பெரிய விளான் 3 ஆம் வட்டாரம் ஜே 153 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள மக்களுக்கு ஏழு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பொறுமதியிலான வீட்டுத்திட்டம்...

காரைநகரில் கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தம்

காரைநகர் இந்துகல்லூரிக்கு சொந்தமான 2 பரப்பு காணி மற்றும் பொதுமக்களுக்கு சொந்தமான 6 பரப்பு காணி என 8 பரப்பு காணியை கடற்படையின் எலாற கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் முயற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளது. நில அளவை திணைக்கள அதிகாரிகளால் கடற்படையின் தேவைக்காக குறித்த காணியை அளவீடு செய்வதற்கு இன்று காலை முயற்சிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,...

மின் உற்பத்தி திட்டம் குறித்த இந்தியாவின் கருத்துக்கு சீனா பதில்!!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளிலும் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டமை முற்றிலும் ஒரு வணிக நடவடிக்கையாகும் எனவும், சர்வதேச ஏல நடைமுறைகளுக்கு அமையவே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் சீனா தெரிவித்துள்ளது. குறித்த மின் உற்பத்தி திட்டம் குறித்த இந்தியாவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் சீனா இந்த கருத்தை வெளியிட்டுள்ளதாக, சர்வதேச...

மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!

கொரோனா வைரஸின் புதிய வகை ஒன்றை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே கொரோனா வைரஸின் இன்னொரு புதிய வகையை பிரிட்டனில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். இந்நிலையில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. B.1.525 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை கொரோன வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய...

வடக்கில் தனியார் சுகாதாரத் துறையினருக்கு கோவிட் -19 தடுப்பூசி வழங்க விவரம் கோரல்!!

வடக்கு மாகாணத்தில் கோவிட் -19 தடுப்பூசி மருந்தும் வழங்கும் நடவடிக்கையில் இரண்டாவது கட்டமாக தனியார் சுகாதாரத் துறையில் கடமையாற்றும் மருத்துவ வல்லுநர்கள், மருத்துவ அதிகாரிகள், பல் மருத்துவர்கள், பதிவு மருத்துவ அதிகாரிகள் (RMO) ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது. இவ்வாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;...

செம்மணி வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவரை அடையாளம் காணுமாறு கோரிக்கை

யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த முதியவரின் சடலத்தை அடையாளம் காணுமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அறிவித்துள்ளது. நேற்று இரவு யாழ்ப்பாணத்திலிருந்து செம்மணி வீதி ஊடாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார். முதியவர் உயிரிழந்த நிலையில் சடலமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டார்....

வட மாகாணத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா!

வட மாகாணத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று(செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் பூநகரியில் சேவையாற்றும் தனங்களப்பு பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 376 பேரின் மாதிரிகள்...

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளின் கனிஷ்ட பணிக்குழாமினர் பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளின் கனிஷ்ட பணிக்குழாமினர் இன்று (புதன்கிழமை) காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர். சில கோரிக்கைகளை முன்வைத்து, அவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதாக ஒன்றிணைந்த சுகாதார ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள், களுபோவில, ராகம, அநுராதபுரம் போதனா வைத்தியசாலைகள் என்பனவற்றின் கனிஷ்ட...

திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி விழாவில் வெளி மாவட்டத்தில் இருந்து வருகின்றவர்களுக்கு தடை!!

மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி விழாவின் போது கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தருகின்றவர்களை தவிர்த்து மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களின் பங்களிப்புடன் மஹா சிவராத்திரி விழாவை கொண்டாட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று (15) திங்கட்கிழமை மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி...

மாநகர சபை உறுப்பினர் தர்சானந் மது அருந்திவிட்டு சபை அமர்பில் கலந்து கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு!!

யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் மது அருந்திவிட்டு சபை அமர்பில் கலந்து கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளாத உறுப்பினர் ப.தர்சானந் சபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்பு இன்றையதினம் மாநகர சபை முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போதே இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது....

வெள்ளை கொடியை காண்பித்த போதிலும் இலங்கை இராணுவம் அவர்களை சுட்டுக்கொன்றது- நவநீதம் பிள்ளை

இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது, வெள்ளை கொடியை காண்பித்தவர்களையும் இலங்கை இராணுவம் சுட்டுக்கொல்வதை பார்த்திருக்கின்றோம் என முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது நவநீதம் பிள்ளை மேலும் கூறியுள்ளதாவது,...

புதிய வகை கொரோனா தொற்றினால் நாட்டிற்கு ஆபத்து இல்லை!!

பிரித்தானியாவின் புதிய வகை கொரோனா வைரஸ் நாட்டில் இனங்காணப்பட்டுள்ள போதிலும் அது நாட்டிற்கு ஆபத்தில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். தற்போதுள்ள நிலைமை குறித்து அவதானத்துடன் செயற்பட்டு வருவதாகவும், நாட்டை முடக்கும் தேவை இல்லை என்றும் அவர் கூறினார். இதேவேளை, கொரோனா நோயாளர்கள் இன்னும் இரண்டு மாதங்களில் குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக அரச...

வடக்கு மாகாணத்தில் 50 மருத்துவர்கள் புதிதாக நியமனம்!!

மத்திய சுகாதார அமைச்சினால் வடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு 50 மருத்துவ அதிகாரிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தனர். நேற்று பெப்ரவரி 15ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இவர்களில் யாழ்ப்பாணம்...

இறுதி சடங்கு மற்றும் திருமண நிகழ்வுகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!!

24 மணித்தியாலங்களுக்கு அனைத்து இறுதி சடங்குகளையும் நிறைவு செய்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேற்று (15) இரவு கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் திருமண நிகழ்வுகள் மற்றும் ஏனைய விழாக்களில் கலந்து கொள்ள...

கோரோனா தொற்றால் பாதித்த மாணவி பரீட்சை எழுத யாழ்.பல்கலை நிர்வாகத்தால் ஏற்பாடு!!

கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி கோவிட்- 19 சிகிச்சை நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப் பீட மாணவி தனது ஆண்டு இறுதிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சிறப்பு ஏற்பாடுகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. பதுளையைச் சேர்ந்த கலைப்பீட மாணவி ஒருவர் கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில்,...

பொத்துவில்- பொலிகண்டி பேரணி: யாழ்.மாநகர முதல்வருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை இடம்பெற்ற மக்கள் எழுச்சிப் பேரணியில், நீதிமன்ற கட்டளையை மீறி யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கலந்துகொண்டமையினால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்றில், யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு பதில் நீதவான் முன்னிலையில் நேற்று...
Loading posts...

All posts loaded

No more posts