Ad Widget

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளின் கனிஷ்ட பணிக்குழாமினர் பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளின் கனிஷ்ட பணிக்குழாமினர் இன்று (புதன்கிழமை) காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.

சில கோரிக்கைகளை முன்வைத்து, அவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதாக ஒன்றிணைந்த சுகாதார ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள், களுபோவில, ராகம, அநுராதபுரம் போதனா வைத்தியசாலைகள் என்பனவற்றின் கனிஷ்ட பணிக்குழாமினர் இவ்வாறு பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளனரை்.

அத்துடன், மாவட்ட வைத்தியசாலைகள், ஆதார வைத்தியசாலைகள் உள்ளிட்ட நாடுமுழுவதும் உள்ள 38 வைத்தியசாலைகளிலும் இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஒன்றிணைந்த சுகாதார ஊழியர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் தெம்பிட்டியே சுகனாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.

Related Posts