Ad Widget

மின் உற்பத்தி திட்டம் குறித்த இந்தியாவின் கருத்துக்கு சீனா பதில்!!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளிலும் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டமை முற்றிலும் ஒரு வணிக நடவடிக்கையாகும் எனவும், சர்வதேச ஏல நடைமுறைகளுக்கு அமையவே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

குறித்த மின் உற்பத்தி திட்டம் குறித்த இந்தியாவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் சீனா இந்த கருத்தை வெளியிட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும், எந்தவொரு நாடாக இருந்தாலும், நிறுவனங்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என, சீனா தெரிவித்துள்ளது.

இலங்கை பிராந்தியத்தில் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் வரை, இலங்கை மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதன் மூலமாக மாத்திரமே, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை மற்றும் நாட்டின் தொடர்ச்சியான அபிவிருத்தி ஆகியவற்றை உறுதி செய்ய முடியும் என, சீனா மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts