Ad Widget

உள்ளூராட்சி வீதிகளில் கனரக வாகனங்கள் பயணிப்பதைத் தடுக்க சமிஞ்சை பலகைகள் – வடக்கு ஆளுநர்

உள்ளூராட்சி சபைகளுக்கு உள்பட்ட வீதிகளில் கனரக வாகனங்கள் பாவனையைக் கட்டுப்படுத்த சமிஞ்சை பலகைகளைப் பொருத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் யோசனை முன்வைத்துள்ளார். உள்ளூராட்சி சபைகளுக்கு உள்பட்ட வீதிகளில் கனரக வாகனங்கள் பயணிப்பதால் வீதிகள் சேதமடைகின்றன என்று சபைகளின் தலைவர்கள் சுட்டிகாட்டியதையடுத்து அவர் இந்த யோசனையை முன்வைத்தார். வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள்,...

யாழில் காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வாரத்திற்கு இரண்டு தடவைகள் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த பகுதிகளில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள், பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என 62 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்கு பொறுப்பான பிரதிக் காவல்துறைமா அதிபர் இந்தத் தகவலை வெளியிட்டார்....
Ad Widget

யாழ்.பல்கலைக்கழக பேரவைக்கு புதிய உறுப்பினர் நியமனம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவையின் உறுப்பினராக தம்பியையா சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சுரேன் ராகவனின் இடத்துக்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் கடிதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் தம்பியையா சிவராஜாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை உறுப்பினராக கலாநிதி சுரேன் ராகவன்...

மாடுகளைக் கொலை செய்வதைத் தடுக்கும் பிரதமரின் முன்மொழிவுக்கு ஆளும் கட்சி ஒப்புதல்!!

இலங்கையில் மாடுகளை வெட்டுவதைத் தடுக்கும் திட்டத்திற்கு ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ச, இலங்கையில் மாடுகளைக் கொலை விதிக்கும் சட்டத்தைக் கொண்டு வருதற்கான முன்மொழிவை முன்வைத்தார். அதற்கு ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழு ஒப்புதல் வழங்கியது என்று அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய...

பிரபாகரனை மஹிந்த சந்திக்க முயன்றது ஏன்? – சிவாஜிலிங்கம்

2005ம் ஆண்டு அப்போதைய நோர்வே நாட்டின் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஊடாக தேசிய தலைவர் பிரபாகரனை சந்திக்க மஹிந்த ராஜபக்ஷ ஆசைப்பட்டது ஏன் என சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்...

வெளிவாரி கலை பட்டப்படிப்புகளுக்கான புதிய அனுமதி இடைநிறுத்தம்!!

புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தும் வரை வெளிவாரி கலை பட்டங்களுக்கான பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கலைத்துறையில் வெளிவாரிப் பட்டங்களுக்கான புதிய பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணையம் (UGC) முடிவு செய்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கா தெரிவித்ததாவது; “தற்போதுள்ள...

ரஷ்யாவின் கோரோனா தடுப்பூசி இந்த வாரம் பயன்பாட்டுக்கு வருகிறது!!

ரஷ்யாவின் கோரோனா தடுப்பூசியான “ஸ்புட்னிக்-5” தடுப்பூசி இந்த வாரம் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கோரோனா வைரஸ் நோய்க்கான தடுப்பூசியை உருவாக்கிய முதல் நாடு என்று ரஷ்யா உலக நாடுகளுக்கு அறிவித்தது. இப்போது, ​​ரஷ்யாவின் சுகாதாரத் துறை அதிகாரிகள் கோவிட் -19 தடுப்பூசி இந்த வார தொடக்கத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்படும் என்று...

20ஆவது திருத்தச் சட்டம் – கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு

20ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து இந்த வாரம் தீர்மானிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வாரம் இடம்பெறவுள்ள கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின்போது இது குறித்து தீர்மானிக்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மேலும் இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே தங்கள் சட்டத்தரணிகளுடன்...

செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவியின் 24ஆவது ஆண்டு நினைவேந்தல்!

யாழ்.செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 24ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது, செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களையும் நினைவு கூர்ந்து, அஞ்சலி செலுத்தப்பட்டது. 1996ஆம் புரட்டாதி மாதம் 7ஆம் திகதி, யாழ்.சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தி (வயது 18) வீதியால் சென்று கொண்டிருந்தவேளை செம்மணி...

ஒற்றுமையை வலியுறுத்தவே இங்கு வந்தேன்: சுமந்திரனின் இரவு விருந்தில் மாவை!

இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, இனத்தின் விடுதலைக்காக நாம் ஒன்றுபட்டு செயற்படும் முயற்சியை மேற்கொள்வோம். இதற்காகவே இந்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா. கடந்த சனிக்கிழமை சிறுப்பிட்டியில் தனது ஆதரவாளர்கள் மற்றும் அவர்களது நண்பர்களிற்கு எம்.ஏ.சுமந்திரன்...

முன்னணியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் கட்சியை விட்டு தற்காலிகமாக இடைநிறுத்தம்!!

எமது இயக்கத்தின் அரசியல் கொள்கைகளிற்கு முரணாக நடந்ததால் உங்களை கட்சியை விட்டு தற்காலிகமாக இடைநிறுத்துகிறோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் மகேந்திரன் மயூரனிற்கு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் பின்வரும் காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. | ஜனாதிபதித் தேர்தலை பகிஸ்கரிக்கும் முடிவை எமது அரசியல்...

பிராந்திய வல்லரசுக்கும் சர்வதேசத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் காற்றில் விட்டால் நடப்பதுவேறு- சுமந்திரன்

பிராந்திய வல்லரசுக்கும், முழு சர்வதேசத்திற்கும் மூன்று தடவை கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் காற்றில் பறக்கவிடுமாக இருந்தால் அதுதான் இலங்கை என்ற நாடு விடுகின்ற மாபெரும் தவாறக இருக்குமென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்தப் பிழையினூடாக தமிழர்களின் எதிர்ப்பை மாத்திரமல்லாது, முற்போக்கு சிந்தனையாளர்களாக இருக்கும் சிங்கள மக்களினுடைய எதிர்ப்பை மாத்திரமல்லாது, முழு உலகத்தினுடைய எதிர்ப்பையும்...

தியாகி திலீபனின் நினைவு: முள்ளிவாய்க்காலில் இருந்து யாழ். வரை நடைபவனி!

தியாகி திலீபனின் 33ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முள்ளிவாய்க்காலில் இருந்து நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபி வரை நடைபயணம் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த நடைபயணம் தமிழர் தாயக பொது அமைப்புக்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில், நடைபெறவுள்ள நடைபவனியில் தாங்கள் ஒன்றிணைந்து செயற்படவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட...

பாசிசவாத ஆட்சியை நிரந்தரமாக நிறுவும் முனைப்பில் ராஜபக்ஷ அரசாங்கம்- கஜேந்திரகுமார்

20ஆவது திருத்தச் சட்டத்தினை அமுலாக்குவதன் மூலமாக பாசிசவாத ஆட்சியை நிரந்தரமாக நிறுவும் முனைப்பில் ராஜபக்ஷ அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தமிழ் மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்களை இணைத்துக்கொண்டு...

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு பயிலுனர்களை இணைத்துக் கொள்வது குறித்த அறிவித்தல் வெளியானது!

2020 ஆம் கல்வி ஆண்டுக்காக 2018 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றுக்கு அமைய தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு பயிலுனர்களை சேர்த்துக் கொள்வது குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகியுள்ளது. www.moe.gov.lk என்ற இணையதளத்தின் ஊடாக எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் மாத்திரம் இதற்காக விண்ணப்பிக்கமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Online ஊடாக விண்ணப்பித்தல் குறித்த மேலதிக...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம்

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவாமற்றும் கிழக்கு மாகாணங்களிலும்முல்லைத்தீவு மற்றும் வவுனியாமாவட்டங்களிலும் பல இடங்களில்பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது....

20ஆவது திருத்தச் சட்டமூல வரைபு வர்த்தமானியில் வெளியானது!

20ஆவது திருத்தச் சட்டமூல வரைபுக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்றநிலையில் திருத்த வரைபு வர்த்தமானியில் வெளியிடப்பட்டடுள்ளது. குறித்த சட்டமூல வரைபு நேற்று (வியாழக்கிழமை) காலை அரச அச்சகத் திணைக்களத்திற்கு வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுவதற்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில் தற்போது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 20ஆம் திருத்தச் சட்டமூல பத்திரம் ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதற்கு...

யாழ் மாவட்ட செயலகத்தில் மீள்குடியேற்றம், வீட்டுத்திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்!

யாழ் மாவட்டத்தில் மீள்குடியேற்ற நிலைமை மற்றும் வீடமைப்பு தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) காலை யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் ,மேலதிக அரசாங்க...

நடுத்தர வருமானம் பெறுவோருக்கு அரசாங்கத்தின் அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் அரச, தனியார் துறைகளில் பணியாற்றும் நடுத்தர வருமானம் பெறுவோர் சொந்த வீடொன்றை வாங்குவதற்கு வாய்ப்பேற்படுத்திக்கொடுக்கும் வகையிலான புதிய செயற்திட்டமொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுகின்ற நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கு, அவர்களுடைய வருமானத்திற்கு ஏற்றவாறாக வீடொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவான செயற்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு கடந்த மே மாதம் 27 ஆம் திகதி...

நடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் வீட்டில் பணியாற்றிய தொழிலாளி உயிரிழப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதிதாக அமைத்து வரும் வீட்டில் தொழிலாளி ஒருவர் மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். நல்லூர் குறுக்குத் தெருவில் இந்தச் சம்பவம் நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றது. காலியைச் சேர்ந்த இந்துனில (வயது -38) என்ற தொழிலாளியே உயிரிழந்தவராவார். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்...
Loading posts...

All posts loaded

No more posts