Ad Widget

யாழில் காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வாரத்திற்கு இரண்டு தடவைகள் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள், பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என 62 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்கு பொறுப்பான பிரதிக் காவல்துறைமா அதிபர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

குறித்த சுற்றிவளைப்புகளுக்காக சுமார் 200 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், 43 வீதித் தடைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வாரத்தில் தெரிவுசெய்யப்பட்ட இரண்டு தினங்களில் இதுபோன்ற சுற்றிவளைப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்கு பொறுப்பான பிரதிக் காவல்துறைமா அதிபர் தெரிவித்தார்.

Related Posts