அரசாங்கம் மிகவும் மெதுவாகவே நகர்வதை நாங்கள் உணர்கின்றோம் கூட்டமைப்பிடம் மோடி

இலங்கைக்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு, நேற்றுமுன்தினம் மாலை வருகை தந்த, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றுமாலை 6மணியளவில் கட்டுநாயக்கவில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன்,...

உலகளாவிய இணையத் தாக்குதல் ; பல அரச அமைப்புகள் முடக்கம்

உலகளாவிய ரீதியில் மிகவும் மோசமானதொரு இணையத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரிட்டன், ஸ்பெய்ன், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் முன்னணி நிறுவனங்களின் இணையச் சேவைகள் மீது இந்தத் தாக்குதல் நடந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகிவருகின்றன. இவையெல்லாம் தனித்தனி தாக்குதல்களா அல்லது ஒன்றோடொன்று தொடர்புடையவையா என்பது தெளிவாகவில்லை. பிரிட்டனின் தேசிய...
Ad Widget

இன அழிப்பிற்கு துணைபோனவர்களுடன் அரசாங்கம் கொண்டாட்டங்களில் ஈடுபடுகிறது: அனந்தி

தமிழ் மக்கள் வேதனையிலுள்ள நிலையில், இன அழிப்பிற்கு துணை போனவர்களுடன் இணைந்து அரசாங்கம் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது என வட. மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றம் சாட்டியுள்ளார். முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த தமிழ் மக்களுக்கான நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான நேற்ற (வெள்ளிக்கிழமை) செம்மணி மண்ணில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே...

கர்ப்பிணி கொலை : மேலும் இருவரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன

ஊர்காவற்றுறை கர்ப்பிணி படுகொலை வழக்கு தொடர்பாக, இருவரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் ஆர்.சபேசன் முன்னிலையில் தெரிவித்துள்ளனர். குறித்த வழக்கு, வெள்ளிக்கிழமை (12) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் ஆர்.சபேசன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சந்தேக நபர்கள் இருவரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். கடந்த மாதம் 26 ஆம் திகதி,...

பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களால் ‘புற்றுநோய் வரும்’

தரப்படுத்தப்படாத, கட்டுப்படுத்தப்படாத நச்சுப் பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்படுவதால் பெற்றோர் இது குறித்து அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் உரிமைகள் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது வெளிநாடுகளில் இருந்து பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் விளையாட்டுப் பொருட்கள்,...

இந்திய பிரதமர் இலங்கைக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்துகொண்டு நாடு திரும்பினார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை நிறைவு செய்து நேற்று மாலை 6.30 மணியளவில் நாடு திரும்பினார். நேற்று கொழும்பில் ஆரம்பமான ஐக்கியநாடுகள் வெசாக் வைபத்தில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் நேற்று முன்தினம் மாலை கொழும்பை வந்தடைந்தார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்...

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நான் வேண்டாதவர்; விக்னேஸ்வரன் ஆதங்கம்

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நான் வேண்டாதவர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இதனால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடலுக்கு தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அவுஸ்திரேலியவின் சர்வதேச நீர் மையத்தின் அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர்,...

மோடியின் உலங்கு வானூர்தியால் காயமடைந்த பெண்

ஹட்டன்- நோர்வூட் விளையாட்டரங்கு அருகில் மதில்சுவர் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று (12) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி பயணித்த உலங்கு வானூர்தி நோர்வூட் மைதானத்தில் தரையிறங்கிய போது ஏற்பட்ட அதிக காற்று காரணமாக குறித்த மதில்சுவர் உடைந்து வீழ்ந்துள்ளது. காயமடைந்த பெண்மணி டிக்கோயா...

சுகாதார அமைச்சர் சய்டமை பாதுகாப்பதில் உள்ள அக்கறையை டெங்கு ஒழிப்பில் காட்டவில்லை!

சய்டம் நிறுவனத்தை பாதுகாப்பதற்கு சுகாதார அமைச்சர் மேற்கொள்ளும் முயற்சிகளை டெங்கு ஒழிக்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்தாமை நாட்டினுள் அழிவு நிலையை தோற்றியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தொடர்ந்து கருத்து வௌியிட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், இலங்கை மருத்துவ சபையின் ஒழுங்குமுறைக்கு அடிபணியாமல் செயற்படும் சய்டம் நிறுவனத்தை...

இரண்டு வருடங்களில் காணி மற்றும் வீடு பிரச்சினைகள் நிவர்த்திக்கப்படும் : ரணில்

எதிர்வரும் இரண்டு வருடங்களில் மலையக மக்களின் காணி மற்றும் வீட்டு பிரச்சினைகள் பெருமளவில் நிவர்த்தி செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்தார் 7 பேர்ச் காணி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் அம்மக்களது வீட்டு பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். பாரத பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் நிகழ்வு நேற்று (12)...

தென்மராட்சி கல்வி வலயத்தின் வர்த்தகத் துறைக் கண்காட்சி

தென்மராட்சி வலயக் கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் 'தென்னவன்' வர்த்தகத் துறைக் கண்காட்சி இம்முறை சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் நேற்று வெள்ளிக்கிழமை (12.05.2017) ஆரம்பமாகியுள்ளது. இக்கண்காட்சியை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். மாணவர்களிடையே சுயதொழில் மீதான நாட்டத்தை ஏற்படுத்தும் வகையிலும், சுயதொழில் உற்பத்திகளின் சந்தைப்படுத்தலை...

காங்கேசன்துறை கடற்பரப்பிலிலுந்து 9 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு

காங்கேசன்துறை கடலில் வீசப்பட்டிருந்த நிலையில் 9 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடற்படையினர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில், குறித்த பொதி மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி இலங்கை மதிப்பீட்டில் 9 கோடி ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது. குறித்த ஹெரோயின் பொதியை வடக்கு...

புதைகுழிக்குள் மறைந்து கிடக்கும் கொலைகளை விசாரிக்கவே சர்வதேசத்தை நாடி நிற்கின்றோம்: தவராசா

நிரூபிக்கப்படாது புதைகுழிகளுக்குள் மறைந்து கிடக்கும் ஆயிரக்கணக்கான கொலைகளை குறித்து விசாரணை நடத்துவதற்காகவே மக்கள் சர்வதேச தரத்திலான நீதி முறைமையை கோரி நிற்கின்றனர் என வட. மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் தவராசா தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த தமிழ் மக்களுக்கான நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) செம்மணி மண்ணில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வை தொடர்ந்து...

“1990” அம்பியூலன்ஸ்கள் நாடு முழுவதும் : நரேந்திர மோடி

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள “1990” அம்யூலன்ஸ்கள் நாடுமுழுவதும் விஸ்தரிக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று நோர்வூட் மைதானத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள “1990”அம்புயூலன்ஸ்கள் தென் மற்றும் மேல் மாகாணங்களில் மாத்திரம் செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் 10 ஆயிரம் வீடுகளை மலைய மக்களுக்கு...

செம்மணியில் ஈகைச் சுடரேற்றி முள்ளிவாய்க்கால் வாரம் ஆரம்பிக்கப்பட்டது!

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று காலை செம்மணிப் புதைகுழியில் ஈகைச் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பல தமிழ் மக்கள் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு கொன்றொழிக்கப்பட்ட செம்மணி மண்ணில் இன்று காலை 9.30 மணியளவில் கூடிய வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், ஆ.பரஞ்சோதி, க.விந்தன், பா.கஜதீபன் மற்றும் வடக்கு மாகாண சபை எதிர்க் கட்சி தலைவர்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் : ஒற்றுமையாகவும்,வன்முறைகளைத் தவிர்த்தும் கடைப்பிடிக்குமாறு அறைகூவல்

ஈழத்தின் மானிடப் பேரவலம் நடந்தேறிய நாள்களை நினைவு கூர்ந்து வருடந்தோறும் கடைப்பிடிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. ஆறாத் துயர் நிறைந்த நினைவேந்தல் வாரத்தை, ஒற்றுமையாகவும் – வன்முறைகளைத் தவிர்த்தும் கடைப்பிடிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது. இறுதிக் கட்டப் போரின் போது, மூன்று லட்சம் மிகக் குறுகிய வெளிக்குள் முடக்கப்பட்டு, உணவு...

வித்தியா கொலை வழக்கின் குற்றப்பகிர்வு பத்திரம் மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டது!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் குற்றப்பகிர்வு பத்திர வழக்கேடுகள் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். மேல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த வழக்கேடுகளை இரும்பு பெட்டகத்தில் வைத்து பாதுகாக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், பதிவாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதேவேளை, மேற்படி வழக்கை கொழும்பில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய சிறப்பு அமர்வில்...

வாரணாசி-கொழும்பு இடையிலான போக்குவரத்து ஓகஸ்டில் ஆரம்பிக்கப்படும்: பிரதமர் மோடி

இந்தியாவின் வாரணாசிக்கும் கொழும்பிற்கும் இடையிலான போக்குவரத்து எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொழும்பு – பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஐ.நா.வின் 14ஆவது சர்வதேச வெசாக் தின நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தமது உரையில் மேலும் தெரிவிக்கையில்-...

புற்றுநோய் கதிரியக்க இயந்திரம் பழுது! கவனமெடுக்காத வடக்கு மாகாண சபை மீது மக்கள் விசனம்!!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் கதிரியக்க இயந்திரம் பழுதடைந்து காணப்படுவதால் வடக்கு மாகாணத்தில் உள்ள புற்றுநோயாளர்கள் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் புதிதாக புற்றுநோய் உள்ளது என இனங்காணப்பட்ட நோயாளர்களுக்கு உடலின் எந்தப் பாகத்தில் கதிரியக்க சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதைக் கண்டறியும் Moulding Machine பழுதடைந்து உள்ளது. இந்தக் கதிரியக்க இயந்திரம் பழுதுபார்க்கும் நிறுவனத்துடனான...

விஜய்-61ல் இணைந்தார் ஆண்டவன் கட்டளை அதிகாரி!

மலையாள திரையுலகில் 'லெப்ட் ரைட் லெப்ட்' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் ஹரீஷ் பெராடி. கம்யூனிஸ சிந்தனையுடன் உருவான அந்தப்படத்தில் அரசியல் ராஜதந்திரங்களை உள்ளடக்கிய அமைச்சராக மிக அருமையாக வில்லத்தனம் காட்டியிருந்தார் ஹரீஷ் பெராடி... அதன்பின் தற்போது அங்கே முன்னணி நடிகர்கள் படங்களில் தவறாது இடம்பெறவும் ஆரம்பித்து விட்டார். குறிப்பாக கடந்த வருடம்...
Loading posts...

All posts loaded

No more posts