அனைத்து மக்களும் வேறுபாடுகளின்றி ஒருமித்த நாட்டில் ஐக்கியமாக சமாதானத்துடன் வாழ தீபாவளித் திருநாள் வழி செய்ய வேண்டும்

அனைத்து மக்களும் இன, மத வேறுபாடுகளின்றி ஒருமித்த நாட்டில் ஐக்கியமாக சாந்தி, சமாதானத்துடன் வாழ தீபாவளித் திருநாள் வழி வகைசெய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தீபாவளி தினத்தை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது: உலகுக்கு கதிரவன்,சந்திரன் ஆகிய கோள்கள் ஒளி தருகின்றன.இவற்றைவிட மனிதர்களால் ஏற்றப்படும்...

வடக்கு, கிழக்கு மக்கள் கதறியழும் நிலை இனியும் தொடரக் கூடாது: மத்திய வங்கி அதிகாரி

நுண்கடன் சுமையிலிருந்து காப்பாற்றுங்கள் என வடக்கு கிழக்கு வறிய மக்கள் கதறியழும் நிலை இனியும் தொடரக் கூடாது என இலங்கை மத்திய வங்கி வறுமை ஒழிப்புப் பிரிவின் குழுத் தலைவர் ஆர். ஸ்ரீபத்மநாதன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கக் கட்டடத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் வழிகாட்டல் தொடர்பான...
Ad Widget

நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனை மீளச் செலுத்த முடியாமல் குடும்பப் பெண் தற்கொலை!

நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்ற கடன்களை மீளச் செலுத்த முடியாமல் இளம் குடும்பப் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். திங்கட்கிழமை 16.10.2017 இடம்பெற்ற இச்சம்பவத்தில் வினாசியர் வீதி, சந்திவெளியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான 26 வயதுடைய செல்வம் யோகேஸ்வரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, கிராமங்களில் நுண்கடன்நிதி...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ஏக்கத்துடன் தொடர்கிறது

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டம் 224 நாட்களை கடந்து இன்றும் தொடர்கின்ற நிலையில் தீர்வு கிடைக்கும் வரை போரட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகள் தெரிவிக்கின்றனர். யுத்த காலத்தில் வலிந்து இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது பிள்ளைகள் எங்கே என்று கேள்வி எழுப்பும் பெற்றோர்கள் இதுவரை தமக்கான தீர்வு கிடைக்கவில்லை...

நெடுந்தீவில் இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்தே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். தனுஷ்கோடி – மன்னார் இடையே மீன் பிடித்து கொண்டிருந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் எட்டுப் பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்....

அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டம்!

அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களை விடுவிக்க கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்துள்ளனர். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று காலை கலைப்பீட மாணவர்கள் நான்கு பேர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஆதரவாக ஏனைய மாணவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து...

அரசுக்கு எதிராக போராடியவர்கள் பயங்கரவாதிகள் அல்ல! : கஜேந்திரகுமார்

இலங்கை அரசுக்கு எதிராக போராடிய அனைவரையும் பயங்கரவாதிகளாகப் பார்ப்பது தவறு என தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியின் தலைவரை் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அணைவரும் பயங்கரவாதிகளே அவர்கள் யாரும் அரசியல் கைதிகள் அல்ல என, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன கூறியதற்கு பதில் தரும் வகையில் நேற்று(திங்கட்கிழமை) கருத்து வெளியிடும் போதே...

மெய்ப்பாதுகாவலரிடம் தனது பாதணியை சுத்தம் செய்யக்கொடுத்த பொலிஸ் மா அதிபர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் பூஜிதஜெயசுந்தர யாழ்ப்பானம் இந்துக் கல்லூரி வீதியில் பலர் மத்தியில் தான் அணிந்திருந்த பாதணியை அவருடைய மெய்ப் பாதுகாவலர் மற்றும் அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம் சுத்தம் செய்யக் கொடுத்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற...

வடக்கில் மலேரியாவை கட்டுப்படுத்த அவசரகால செயற்பாட்டு முறை

வடக்கில் மலேரியா பரவும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த அவசரகால செயற்பாட்டு முறை முன்னெடுக்கப்பட்டு வருவதாக வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ஞா. குணசீலன் தெரிவித்தார். வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலைக்கு நேற்று (திங்கட்கிழமை) விஜயம் மேற்கொண்ட அமைச்சர், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் தலைமையிலான குழுவுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...

அகநானூறு, புறநானுறு போன்ற இலக்கியங்களில் மாத்திரமே பிரபாகரனை போன்ற வீரனை பார்க்க முடியும்! : பாரதிராஜா

இலங்கையில் யுத்த நிறுத்தம் அமுலில் இருந்த சந்தர்ப்பத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ஒரு வார காலம் தங்கியிருந்ததாகவும், அச் சந்தர்ப்பத்தில் இலங்கை போர் தொடர்பில் ஒரு படத்தை இயக்குமாறு பிரபாகரன் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் இயக்குநர் சிகரம் பாரதிராஜா தெரிவித்துள்ளார். இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரபாகரனை...

பாகிஸ்தான் அணி 32 ஓட்டங்களால் வெற்றி!! இலங்கை பாகிஸ்தான் செல்வது உறுதி!!

2 வது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கையை எதிர்த்து ஆடிய பாகிஸ்தான் அணி 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் தமது துடுப்பாட்டத்தின் போது 9 விக்கெட் இழப்புக்கு 219 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி 48 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 187 ஓட்டங்களை மாத்திரம் ஈட்டியது. உப்புல் தரங்க 112 ஓட்டங்களை அணிக்காக...

யாழ். புகையிரத சேவை எதிர்வரும் 23 ஆம் திகதி தொடக்கம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

வடக்கு புகையிரத பாதையின் யாழ்ப்பாணம் வரையிலான புகையிரத சேவைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. இதுதொடர்பாக புகையிரத திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் யாழ்ப்பாணம், நாவற்குழி பாலம் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாவற்குழி புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் வரையில்...

சம்பந்தன் தமிழ் மக்களை அவமதித்துள்ளார்!: கஜேந்திரகுமார்

“இலங்கையின் தேசிய தீபாவளி ஒன்றுகூடலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருக்கும் கருத்தினை கோமாளியின் கருத்தாக நினைக்க இயலாது, அவர் தமிழ் மக்களிடம் நான் என்ன சொன்னாலும் அவர்கள் அதனை நம்புவார்கள் என நினைத்து இறுமாப்பில் கூறிய கருத்து, அதனை மக்கள் சரியாக விளக்கி கொள்ளவேண்டும், இல்லையேல் அதன் விளைவுகளை பெற தயாராகவேண்டும்” என தமிழ்தேசிய...

ஆளுநரைச் சந்தித்தது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இன்று காலை ஒன்பது மணியளவில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு, சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநரின் பங்களாவில் நடைபெற்றது. உண்ணாவிரதத்தில் ஈடுபடும் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஐனாதிபதியுடன் பேச சந்தர்பத்தைத் பெற்றுத் தருமாறு சந்திப்பின்போது மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது

அடுத்த தீபாவளி ஒளிமயமாய் இருக்கும் என்கிறார் சம்பந்தன்

இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் நம்பிக்கை கொண்டுள்ளதோடு, அடுத்த வருட தீபாவளி பண்டிகை இந்த வருடத்தை விட மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் அமையுமென்றும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சித்...

யாழில் டெங்கு நோய் தாக்கத்தால் பாடசாலை மாணவி உட்பட இருவர் பலி

இலங்கையின் தென்னிலங்கையை ஆட்டிப்படைத்த பாரிய உயிர்க்கொல்லி நோயான டெங்கு, தற்போது வடக்கு மாகாணத்திலும் தீவிரமாக பரவியுள்ளது. டெங்கு நோய் தாக்கத்தால், யாழ்ப்பாணத்தில் தாயொருவரும் பாடசாலை மாணவி ஒருவரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். யாழ். பொஸ்கோ பாடசாலையில் கல்வி கற்று வந்த கணேசமூர்த்தி சாரா (வயது-9) என்ற மாணவி, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,...

தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை பாதிப்பு!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டு வருவதாக, சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 22 நாட்களாக இவர்கள் உணவை தவிர்த்து வரும் நிலையில், இரண்டு கைதிகளுக்கு சேலைன் ஏற்றப்பட்டு வருவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உப்புல்தெனிய குறிப்பிட்டுள்ளார். வவுனியா மேல் நீதிமன்றில் கடந்த 4 வருடங்களாக...

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டவர் மரணம்!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் இருந்து ஒருவர் தள்ளிவிடப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த ரயிலில் பயணித்த இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலே, இவ்வாறு கொடூரத்தில் முடிவுற்றுள்ளது. ராகம மற்றும் ஹொரப்பே ரயில் நிலையங்களுக்கு இடையே குறித்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர் இதுவரை அடையாளம்...

வடக்கின் அடுத்த முதலமைச்சராக முன்னாள் பிரதம நீதியரசர் ஸ்ரீபவன்?

வடமாகாண சபைக்கான அடுத்த தேர்தல் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுமாறு முன்னாள் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு வார இறுதி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அழைப்பினை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடமாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நிலவி வரும் கருத்து...

தொண்டர் ஆசிரிய நியமன முறைகேடு: மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கம் கோரி கடிதம்!

தொண்டர் ஆசிரிய நியமன நேர்முகத் தேர்வில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பிரதி பிரதம செயலாளர் ஆகியோரிடம் விளக்கம் கோரி அவசர கடிதம் ஒன்றினை நேற்று முன்தினம் (சனிக்கிழமை) வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ளது. வடமாகாணத்தில் கடந்த பல வருடங்களாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி...
Loading posts...

All posts loaded

No more posts