ஆனைக்கோட்டையில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்: மானிப்பாய் பொலிஸார்மீது மக்கள் சந்தேகம்!!!

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் இலக்கத்தகடு மறைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் சென்ற கும்பலொன்று, வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அத்தோடு, தாம் கொண்டுவந்த வாள்களால் வீட்டிலுள்ள பெறுமதிமிக்க பொருட்களை சேதப்படுத்தி, அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளனர். அதன் பின்னர், 40 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும்...

யாழ்ப்பாணத்தில் போட்டியிட ஏழு கட்சிகள் தயார்!

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாணத்தில் இதுவரையில் ஏழு கட்சிகளும், ஒரு சுயேட்சைக் குழுவும் கட்டுப்பணத்தை கட்டியுள்ளன. ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியன 17 சபைகளிற்கும், சிறிலங்கா பொதுஜன பரமுன, இலங்கை தமிழரசு கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஆகியன சாவகச்சேரி நகரசபைக்கும்,...
Ad Widget

பூநகரி பிரதேசத்தில் 38 பேர் தங்களின் கண்களை தானம் செய்துள்ளனர்!!!

கிளிநொச்சி- பூநகரி பிரதேசத்தில் இடம்பெற்ற கண் பரிசோதனையின் போது, 38 பேர் முன்வந்து இலங்கை கண்தான அமைப்புக்கு தங்களின் கண்களை தானம் செய்துள்ளனர். இராணுவத்தின் 66 படைப்பிரிவின் ஏற்பாட்டில், பூநகரி கிராஞ்சி பாடசாலையில் இடம்பெற்ற கண் பரிசோதனை நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட 398 பேருக்கு கண் பரிசோதனை இடம்பெற்றது. மருத்துவர் வைத்திய கலாநிதி அஜந்த அபேயவர்தன, இதன்...

வாள்வெட்டுக் குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்கள் கைது

'வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள் 4 பேர் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன, என்று பொலிஸார் தெரிவித்தனர். "யாழ்ப்பாணம் - மானிப்பாய் - காரைநகர் வீதியில் நேற்று மாலை பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக கும்பல் ஒன்று வாள்களுடன் நடமாடியதுடன் வழி பறிப்பிலும் ஈடுபட முயற்சித்துள்ளனர். பொதுமக்கள்...

அரசியல் மாற்றம் வட்டுக்கோட்டையிலிருந்து தொடங்கட்டும்: கஜேந்திரகுமார்

தமிழ்த் தேசியவாதத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் பிறந்த வட்டுக்கோட்டை மண் அதே உறுதியுடன் தொடர்ந்து தமிழ்த் தேசியத்துக்காகப் பயணிக்கவேண்டும் என அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் வலிகாமம் மேற்கு பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு நேற்று முன்தினம் (சனிக்கிழமை)...

மத்திய அரசுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள மாட்டோம்: சுமந்திரன்

அரசியலமைப்பின் ஊடாக அதிகாரங்கள் மக்களுக்கு கிடைக்கும் வரை மத்திய அரசுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மனித உரிமைகள் மற்றும் அரசியலமைப்புத் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும்...

ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்திய சம்பவத்துக்கும் இராணுவத்துக்கும் தொடர்பில்லை!!

முல்லைத்தீவு தண்ணிமுறிப்புப் பகுதியில் சிங்கள மயமாக்கல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை இராணுவம், பொலிஸால் சுற்றிவளைக்கப்பட்டு அரை மணித்தியாலங்களுக்கு மேல் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்துடன் இராணுவம் தொடர்புபடவில்லை என இராணுவச் பேச்சாளர் பிரிகேடியர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “இராணுவ சீருடையின்றிய சிலர், ஊடகவியலாளரை...

ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடாத்திய ஆவா குழு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் பகுதியில் வைத்து ஊடகவியலாளர் மீதும் மாங்குளம் சந்தியில் வைத்து பிறிதோர் இளைஞர் மீதும் தாக்குதல் நடத்திய ஆவா குழுவைச் சேர்ந்த மூவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் பகுதியில் வைத்து, வௌ்ளிக்கிழமை (08) இரவு 8.45 மணியளவில் மல்லாவிப் பகுதியில்...

யாழ் மாவட்டத்திலிருந்து விரைவில் விடைபெறவுள்ளதாக நீதிபதி இளஞ்செழியன் தெரிவிப்பு!!!

தான் யாழ் மாவட்டத்திலிருந்து விரைவில் விடைபெறவுள்ளதாக நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு நான் வருகை தந்ததற்கான நோக்கத்தை, பொறுப்பை நிறைவேற்றிவிட்டேன், மட்டக்களப்புக்குச் சென்று அங்குள்ள மக்களுக்குச் சேவையாற்ற விரும்புகின்றேன். அதற்கான மாற்றல் விரைவில் எனக்கு வரும், என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நடைபெற்ற வருடாந்த விருந்துபசார விழாவும் இடமாற்றலாகும் உத்தியோகத்தர்களுக்கான கெளரவிப்பு விழாவிலும்...

வடக்கு கிழக்கில் ஆழ்கடலில் மீன்பிடிக்க இன்னும் அனுமதி இல்லை

வடக்கு- கிழக்கில் ஆழ்கடலில் மீன்பிடி நடவடிக்கைகள் இன்னும் முழுமையாக வழமைக்கு திரும்பவில்லை என்று வடக்கு கிழக்கில் உள்ள இடர் முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலநிலையின் காரணமாக வடக்கு கிழக்கில் கடந்த 4 தினங்களுக்கு மேலாக மீனவர்கள் தமது தொழிலுக்காக கடலுக்கு செல்லவில்லை. இருப்பினும் நேற்றயதினம் வடக்கு கிழக்கில் குறிப்பிட்ட எல்லைக்குள் மீன்பிடி நடவடிக்கையில் மீனவர் ஈடுப்பட்டதாக...

‘யாழ். மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் கை சின்னத்தில் போட்டியிடுவோம்’

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்த வரையில், வேறு பகுதியில் ஒவ்வொரு கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது. ஆனாலும் யாழ். மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்து வெற்றிலைச் சின்னம் இல்லாமல் கை சின்னத்தில் போட்டியிடும்” என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். உள்ளூராட்சி...

மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்!! : நீதிகோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!!

வவுனியா ஓமந்தை கல்லுப்போட்டகுளத்தில் மாணவி ஒருவர், ஆசிரியர் ஒருவரால் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டதை கண்டித்தும்,அதற்கான நீதிகோரியும் நொச்சிக்குளம் மற்றும் ஓமந்தை பிரசே மக்களால் இன்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த மாதம் 29 ஆம் திகதி வயிற்றுவலி காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த மாணவி வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர், கர்ப்பமடைந்துள்ளமை உறுதியானது. இதனையடுத்து ஓமந்தை பொலிஸார்...

பருத்தித்துறையில் குடும்பஸ்தர் தற்கொலை

யாழ்.பருத்தித்துறை திக்கத்தை சேர்ந்த 59 வயதான குடும்பஸ்தர் ஒருவர் தனக்குதானே தீ வைத்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். உயிரிழந்தவர் சந்திரசேகரம்பிள்ளை இராசலிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர், மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்துவந்ததாகவும், அவரின் பிள்ளைகள் வெளிநாட்டில் வசிப்பதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர். தீக்காயங்களுக்கு உள்ளான அவர் முதலில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

யாழ் மாவட்டத்தில் அனைத்து சபைகளுக்கும் தமிழ்க் காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியது

யாழ் மாவட்டத்தில் உள்ள 16 உள்ளூராட்சி மற்றும் நகரசபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் நேற்று மாலை 2.15 மணிக்கு கட்சியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர்...

ஒற்றுமையுடன் செயற்பட்டால் சரித்திரம் படைக்கலாம்: சம்பந்தன்

ஒற்றுமையுடன் ஓரணியில் திரண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை ‘வீடு’ சின்னத்தில் எதிர்கொண்டு வடக்கு, கிழக்கில் சரித்திரம் படைப்போம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள குழப்பநிலைமைகள் தொடர்பில் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடந்து கருத்து தெரிவித்த அவர் “தமிழ்த்...

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசியல் கட்சியாகப் பரிணமிக்க வேண்டும்: வடக்கு முதல்வர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பலமான அரசியல் கட்சியாகப் பரிணமிக்க வேண்டும் என வடக்கு மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கிடையில் உருவாகியிருக்கும் பிளவுநிலை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”சுயநலம் மேலோங்கும்போது இவ்வாறான பிளவுகள் ஏற்படுவது வழக்கம். அதே...

கூட்டமைப்பின் பிளவு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது: அனந்தி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பமான சூழல் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) வறுமை நிலையில் உள்ள மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கும் நிகழ்வின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து...

’உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பகிஸ்கரிப்போம்’ : காணாமல் ஆக்கப்பட்வா்களின் உறவினர்கள்

“காணாமல் ஆக்கப்பட்டவா்களின் பிரச்சினைக்காக எந்த அரசியல்வாதிகளும் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத காரணத்தினால், காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களாகிய நாம், வருகின்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலைப் பகிஸ்கரிக்கப் போகின்றோம்” என காணாமல் ஆக்கப்பட்வா்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று (08) 292ஆவது நாளாக கிளிநொச்சியில்தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் , பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கருத்து தெரிவித்து...

சுமந்திரன் பகிரங்க பொது மன்னிப்பு கோர வேண்டும்! : ஜனநாயக போராளிகள் கட்சி

“இந்த மண்ணிற்காய் ஆயுதமேந்தி மரணித்த வீரர்களை பெற்றெடுத்தவர்களிடமும், போராளிகளிடமும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க பொது மன்னிப்பினை கோர வேண்டும்” என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இடர்பாடுகள் நிறைந்த இன்றைய தாயக அரசியல் களத்தில் நாவடக்கம் பிரதானமானது. தமிழர்கள் ஆயுதமேந்தியது இன்னுமோர் இனத்தின்மீது மேலாதிக்கத்தை செலுத்துவதற்காக...

வரதராஜப்பெருமாளுக்கு இலங்கைக் குடியுரிமை மீளவும் வழங்கப்பட்டுள்ளது

வடக்கு- கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஈபிஆர்எல்எப் பத்மநாப அணியின் முக்கியஸ்தருமான அ.வரதராஜப்பெருமாளுக்கு இலங்கைக் குடியுரிமை மீளவும் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் தேர்தலில் போட்டியிடக் கூடிய வகையில் நேற்று அவருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது என அறிய முடிகின்றது. கடந்த ஆண்டு அவர், இலங்கைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தபோதும் அது நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே தற்போது வரதராஜப்பெருமாளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது....
Loading posts...

All posts loaded

No more posts