மாவீரர்தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

யாழ்.வல்வெட்டித்துறையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த குழுவினர் மற்றும் ஊடகவியலாளர் ஒருவரை பொலிஸார் அழைத்து மிரட்டி எச்சரித்துள்ளனர். வல்வெட்டித்துறை தீருவிலில் கடந்த வருடம் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஒழுங்கமைத்த குழுவினரை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளார். அதனையடுத்து அங்கு சென்ற ஏற்பாட்டு குழு இளைஞர்களை, கடந்த வருடத்தைப்...

மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெருமளவு நிதி? – ஐ.தே.க.வின் குற்றச்சாட்டை மறுக்கிறது சீனா

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில் ஆட்சிமாற்றத்தை உறுதிப்படுத்துவதற்காக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்க, மஹிந்த ராஜபக்ஷவுக்கு சீனா பெருமளவு நிதியைக் கொடுப்பதாக, ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கூறிய குற்றச்சாட்டை சீனா நிராகரித்துள்ளது. “இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. பொறுப்பற்றவை. ஒரு அயல் நட்பு நாடு என்ற வகையில், இலங்கையில் மாற்றங்களை...
Ad Widget

மீண்டும் தேசிய அரசாங்கம்! – சுதந்திரக் கட்சிக்கு அழைப்பு

நாட்டில் மீண்டும் தேசிய அரசாங்கத்தை உருவாக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணி, சகல கட்சிகளையும் தமமுடன் இணைந்துகொள்ளுமாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்த ராஜித சேனாரத்ன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு விசேடமாக அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டார். அத்தோடு, நாளை மறுதினம் நாடாளுமன்றம் கூட்டப்படுமென நம்புவதாகவும்...

மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பு தொடர்பில் கூட்டமைப்பு விளக்கம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திரு. மஹிந்த ராஜபக்சவின் வேண்டுகோளின்படி இன்று அவரை கொழும்பு விஜேராமையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்....

ஜனாதிபதிக்கு எதிரான ஐதேகவின் ஆர்ப்பாட்டம் ஆரம்பம்!!!

அரசியலமைப்புக்கு முரணாக ஆட்சிக்கவிழ்ப்பை முன்னெடுத்து ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிய ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கும் மெரும் மக்கள் போராட்டம் கொழும்பில் ஆரம்பமாகி நடைபெற்று வருகி்றது. அலரிமாளிகைக்கு அருகாமையில் ஆரம்பமாகிய இந்தப் போராட்டத்தில் பல்லாயிரக் கணக்கான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். “ஜனநாயகத்தை பாதுகாப்போம் :...

எரிபொருள் விலைச் சூத்திரம் இனிமேல் இல்லை

எரிபொருள் விலைச் சூத்திரம் புதிய அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்று பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும கூறியுள்ளார். இன்று (30) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். இதன்போது மேலும் கருத்துக் கூறிய அவர், மக்கள் இனிமேல் 10ம் திகதி வரும் போது அச்சமடைய தேவையில்லை. 10ம் திகதி பேய் தினம். இனிமேல்...

நாடாளுமன்றை வெள்ளியன்று கூட்டுவதற்கு நடவடிக்கை!

நாடாளுமன்றத்தை வரும் வெள்ளிக்கிழமை கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிப்பதாக சபாநாயகர் கரு ஜெயசூர்ய, கட்சித் தலைவர்களிடம் உறுதியளித்துள்ளார். நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களை சபாநாயகர் இன்று நண்பகல் சந்தித்தார். இதன்போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் தொடர்ந்து சம்பந்தன்!

எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை மாற்றுவதற்கு எவ்வித தீர்மானங்களும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் இரா.சம்பந்தன்!

நாட்டின் அரசியலமைப்பை மீறி சட்டவிரோதமான முறையில் பதவியேற்றுள்ளீர்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை விஜேராம அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சந்தித்து இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு, நாட்டின் இறையாண்மைக்கு இது பாதகமாக அமையுமென சுட்டிக்காட்டியுள்ள சம்பந்தன்,...

பெற்றோலிய ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

முன்னாள் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, கைது செய்யப்பட்டமையை தொடர்ந்து பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் அர்ஜுன் ரணதுங்கவை, கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பெற்றோலிய ஊழியர்கள்...

மன்னார் சதொச வளாகத்தில் இதுவரை 207 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இடம்பெற்று வரும் அகழ்வுப் பணியில் இதுவரை 207 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பிரதேசத்தில் நேற்று (திங்கட்கிழமை) 96 ஆவது தடவையாக மனித எலும்புக்கூடுகள் அகழும் பணிகள் இடம்பெற்றன. தற்போது வரைக்கும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என சுமார் 207 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த எலும்புக் கூடுகளில் இதுவரை...

புதிய அமைச்சரவை வெளியாகியது!

புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய அமைச்சரவையில் ஆனந்த அளுத்கமகே: சுற்றுலா மற்றும் வனவிலங்கு பிரதி அமைச்சர். வடிவேல் சுரேஷ் : பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் வசந்த சேனநாயக்க: சுற்றுலா மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான்: மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ்...

மத்திய அமைச்சரானார் டக்ளஸ் தேவானந்தா!

மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்துசமய விவகாரங்கள் அமைச்சராக இருந்த டி.எம்.சுவாமிநாதனின் அமைச்சுப்பதவி டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய, 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி அமைச்சரவை கலைக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தற்போது புதிய அமைச்சரவை...

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு எவரும் முன்வரவில்லை – ஜனாதிபதி

வடக்கு மக்களின் பிரச்சினைகளை கடந்த மூன்றரை வருடங்களில் தீர்ப்பதற்கு, பொறுப்பு வாய்ந்த எவரும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை – திஸ்ஸமஹாராமவில் இன்றைய தினம்(திங்கட்கிழமை) இடம்பெற்ற 2018ஆம் ஆண்டுக்கான தேசிய நெல் விதைப்பு நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும்...

சுமந்திரனுக்கு வாக்குறுதியை நிறைவேற்றிக்கொள்ள காலம் கனிந்துள்ளது: சிவசக்தி ஆனந்தன்

நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சுமந்திரன் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிக்கொள்வதற்கு காலம் கனிந்துள்ளதென வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களினால் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வலியுறுத்தி, இன்று (திங்கட்கிழமை) வவுனியாவில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் சிவசக்தி ஆனந்தன் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு...

டெலோவின் முக்கியஸ்தருக்கு ஆவா குழு எச்சரிக்கை!!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளரான நாகராஜனுக்கு ஆவா குழுவினர் தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக வவுனியா மாவட்ட தலைமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளருமான நாகராஜன் என்பவருடைய கையடக்க தொலைபேசியிற்கு நேற்றைய தினம் (28)...

இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றார்!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 22ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டார். பிரதமர் செயலகத்தில் சற்றுமுன் அவர் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். இலங்கை ஜனாதிபதியாக இரு தடவைகள் பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஷ, மூன்று தசாப்தகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததால் சர்வதேச அளவில் பேசப்பட்ட தலைவராக காணப்படுகிறார். கடந்த 1945ஆம் ஆண்டு...

மாகாண சபை தேர்தலை நடத்துவதே எமது நோக்கம்: ஜனாதிபதி

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவது தொடர்பிலேயே அடுத்த எமது நடவடிக்கைகள் காணப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். திஸ்ஸமகாராம, சந்தகிரிகொட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “நாட்டில் தற்போது மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. இதனால் தேர்தல்...

கிளிநொச்சியில் மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து பொங்கல்!

கிளிநொச்சியில் ஜனாதிபதியினால் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவித்து பொதுஜன பெரமுன கட்சியினர் பொங்கல் பரிமாறியதோடு பட்டாசுக் கொளுத்தியும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரண்டாவது பிரதமராக மகிந்த ராஜபக்ஸ பதவி பிரமாணம் செய்தது முதல் பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்தவர்கள் மாவட்டத்தின் பல இடங்களிலும் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி வருகின்றனர் அந்தவகையில்...

சட்டவிரோத கேபிள் ரீவி இணைப்பு! மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு

வீட்டுக்கு வழங்கப்பட்டிருந்த கேபிள் ரீவி இணைப்பின் ஊடாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நகரில் சட்டவிரோத கேபிள் இணைப்பினாலேயே இந்த விபத்து இடம்பெற்று அவர் உயிழந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் நேற்று முற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த இராசநாயகம் லீலாவதி 55...
Loading posts...

All posts loaded

No more posts