Ad Widget

சட்டவிரோத கேபிள் ரீவி இணைப்பு! மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் உயிரிழப்பு

வீட்டுக்கு வழங்கப்பட்டிருந்த கேபிள் ரீவி இணைப்பின் ஊடாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நகரில் சட்டவிரோத கேபிள் இணைப்பினாலேயே இந்த விபத்து இடம்பெற்று அவர் உயிழந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் நேற்று முற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த இராசநாயகம் லீலாவதி 55 வயதான குடும்பப் பெண்ணே உயிரிழந்தார்.

கேபிள் ரீவி இணைப்பு வயரை அவர் பிடித்துக்கொண்ட போது, அதனூடாகப் பாய்ந்த மின்சாரம் தாக்கியதிலேயே பெண் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த கேபிள் ரீவி இணைப்பு சட்டவிரோதமாக வழங்கப்படுகிறது என்று காவல்துறையினரால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கத்து.

Related Posts