- Monday
- May 4th, 2026
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவராக அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். கண்டி தலதாமாளிகையில் தற்போது இடம்பெற்று வரும் அமைச்சர்களுக்கான பதவி பிரமான நிகழ்வின் போதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஏனைய மாவட்டங்களுக்கான மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களாக கொழும்பு – பிரதீப் உதுகொட கம்பஹா மாவட்டம் – சமன் பிரதீப் விதான களுத்துறை – சஞ்சீவ எதிரிமான்ன...
இந்தியாவிலிருந்து சட்டத்துக்குப் புறம்பாக படகுமூலம் நாட்டுக்கு வருகை தந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று (ஓகஸ்ட் 11) செவ்வாய்கிழமை உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி பாலகிருஷ்ணன் (வயது-50) என்பவரே நீரிழிவு நோய்...
புதிய அரசின் 28 அமைச்சுகள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுகளுக்குமான விடயதானங்களும் பொறுப்புகளும் அதிசிறப்பு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் கொள்கை அறிக்கையான சுபீட்சத்தின் நோக்கிற்கமைய நாட்டின் எதிர்கால பயணத்தை முன்னெடுக்கக்கூடிய வகையில் அமைச்சுகளுக்கான விடயதானங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது. தேசிய முன்னுரிமைக்கான தேசிய மட்ட வழிகாட்டல் மற்றும் இணைப்பினூடாக...
மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது நாட்டின் நிர்வாகத்தை இராணுவத்திடம் தாரைவார்ப்பதற்கு சமானனது என கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், நாடு இராணுவ மயமாவதாக தாம் கூறியபோது அதனை அரசும் அரசுடன் இணைந்த கட்சிகளும் மறுப்பு தெரிவித்ததாகவும்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையில் – மதிப்பீட்டின் படி முதல் மூன்று இடங்களைப் பெறுகின்றவர்களின் பெயர்களை ஜனாதிபதியின் தெரிவுக்கென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைப்பதற்காக பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டம் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய சுற்றறிக்கைக்கு அமைவாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக கடந்த...
வவுனியாவில் முன்னாள் போராளி மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த நபர் வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் போராளியும், சமூக சேவகருமான வி.விநோதரன் (ஈழம்) என்பவர் மீதே இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா கரப்பன்காட்டு பகுதியில் அமைந்துள்ள தனியார் சமூக சேவை அமைப்பின்...
யாழ்.அராலி பகுதியில் துப்பாக்கி மற்றும் வாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அராலி பகுதியில் உள்ள இளைஞர் குழு ஒன்றிடம் துப்பாக்கி மற்றும் வாள்கள் உள்ளன என வட்டுக்கோட்டை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞர்கள் குழு வசிக்கும் பகுதியில் நேற்றைய...
9 ஆவது நாடாளுமன்றத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு, அவர்களின் தனிப்பட்ட விபரங்களை நாடாளுமன்ற செயலகத்தில் சமர்ப்பிக்க நாடாளுமன்ற செயலகம் ‘இணைய பதிவு முறை’ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் தகவல்களை வழங்க, நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட்டு பின்னர் இணைய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யலாம் என்று நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்பிக...
பலாலி, அச்சுவேலி பொலிஸ் பிரிவுகளில் வீதியில் செல்லும் பெண்களிடம் தங்க நகைகளை அபகரிக்கும் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மல்லாகம் சுடலை ஒன்றில் மறைந்திருந்த சந்தேக நபரை கைது செய்ததையடுத்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பலாலி பொலிஸார் தெரிவித்தனர். பலாலி பொலிஸ் பிரிவில் அண்மையில் வீதியால் சென்ற பெண்ணிடம்...
ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பில் தேர்வு செய்யப்பட்டவர்களிற்கு எதிர்வரும் 31ம் திகதி முதல் பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுளள்ளதாக மாவட்டச் செயலகங்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தில் வடக்கு மாகாணத்தில் இருந்து 13 ஆயிரத்து 270 பேர் பயிற்சிக்கு தேர்வாகியுள்ளனர். இவ்வாறு தேர்வானவர்களில் அதிக பட்சமாக யாழ்ப்பாணம்...
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம், தொடர்ந்தும் தமிழ்த் தேசியப் பயணத்தில் தடம்மாறாது பயணிக்கும் என, அவ் இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம், சுயேச்சைக் குழுவாக யாழ்ப்பாணம் கிளிநொச்சித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டிருந்த நிலையில், இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியப்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் 19 தேசிய பட்டியல் உறுப்பினர்களது பெயர்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று (திங்கட்கிழமை) இரவு வெளியிடப்பட்டது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் காமினி லக்ஸ்மன் பீரிஸ், சாகர காரியவசம், அஜிட் நிவிட்கப்ரல்,...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கோகுலராஜ் என்பவரின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார்...
சலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் இப்பொழுது நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம். எங்கோ இருந்தவர்கள் வந்து இரவிரவாக மக்களுக்கு சலுகைகளைக் கொடுத்து இன்று மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள் என நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து...
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் புதிய பிரதமராக பதவியேற்ற பின்னர், மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (2020.08.09) பிற்பகல் நாராஹேன்பிட அபயராம, பெல்லன்வில்ல ரஜ மஹா விகாரை மற்றும் பெபிலியான சுனேத்ராதேவி மஹா பிரிவேனா ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்து சங்கத்தினரின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டார். நாராஹேன்பிட அபயராம விகாரைக்கு விஜயம் செய்த பிரதமர், மேல் மாகாணத்தின் தலைமை...
யாழ்.நீர்வேலியில் வெள்ளை வாகனத்தில் வந்த கும்பல் வீட்டிலிருந்தவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திவிட்டு 20 வயதான இளம் பெண்ணை கடத்தி சென்றதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு வெள்ளை வாகனத்தில் சென்ற நான்கு...
தமிழ் தேசியக் கூட்மைப்பின் வீழ்ச்சிக்கு அக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மட்டுமே காரணம் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபத்மனாதன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சுமந்திரனை கட்சியில் இருந்து வெளியேற்றினால் தமிழரசு கட்சி மட்டுமல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் உள்ளிட்ட தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பயணிக்கும்...
இன்றையதினம் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மற்றும் அதிபர் ஆசிரியர்களுக்கு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அவர்களால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலில்... பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பெற்றோர்களுக்கு சிறு தயக்கம் கொரோனா அச்சம் காரணமாக. தற்போது எமது பகுதிகளில் சந்தேகத்துக்கிடமானவர்கள் காணப்படவில்லை. ஆகவே மாணவர்கள் பாடசாலைக்கு செல்லலாம். இருப்பினும் பாடசாலையில்...
அடுத்த சில மாதங்களில் மேலும் 15 ஆயிரம் பட்டதாரிகள் ஆசிரியர்களாக தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நியமிக்கப்படவுள்ளனர். கோவிட் – 19 நிலமை மற்றும் பொதுத் தேர்தல் காரணமாக கடந்த சில மாதங்களில் இந்த ஆசிரியர்களை நியமிக்கும் திட்டம் தாமதமானது என்று கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். க.பொ.த. சாதாரண தரத்தில் விஞ்ஞானம், கணிதம்...
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசன பிரிதிநிதி தன்னிச்சையாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தேசியப் பட்டியல் ஆசன தெரிவு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் பங்காளிக்கட்சிகளாக புளொட் மற்றும் ரெலோ கட்சிகளுக்கும் அறிவிக்கப்படாமலேயே முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக நுற்று (ஞாயிற்றுக்கிழமை)...
Loading posts...
All posts loaded
No more posts
